ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தராவும் நாயகியானார்

ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தராவும் நாயகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asha sarath daughter utharaமலையாள சினிமாவில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஆஷா சரத்.

இவர் தமிழில் கமலுடன் பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் மோகன்லால்-மீனா நடித்துள்ள ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து ‘கெட்டா’ என்ற ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

கேரள அரசு விருது பெற்ற இயக்குனர் மனோஜ் கண்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தரா நாயகியாக அறிமுகமாகிறார்.

Asha Sarath’s daughter Uthara to act in Manoj Kanna film

விபிஎப் கட்டணத்திற்கு மறுப்பு.. முடங்கியுள்ள படங்களை வெளியிட திட்டம்..; தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி

விபிஎப் கட்டணத்திற்கு மறுப்பு.. முடங்கியுள்ள படங்களை வெளியிட திட்டம்..; தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Murali Ramasamyநேற்று முன் தினம் நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

இதில் ராம நாராயணனின் மகன் தயாரிப்பாளர் முரளி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில்…

என்னை தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.

தேர்தலுக்கு முன்புதான் அணிகள். இப்போது எந்த அணியும் கிடையாது. எல்லோரும் ஒரே அணி தாண்.

கொரோனா ஊரடங்கால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது தமிழ் சினிமா. இதனால் திரையுலகம் பின்தங்கியுள்ளது.

எனவே அனைத்து தயாரிப்பாளர்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம்.

தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

வெளியிட முடியாமல் தேங்கி கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வர பாடுபடுவோம்.

தற்போதுள்ள அரசு, இனி வரப்போகும் புதிய அரசு ஆகியவற்றுடன் நல்ல உறவை வளர்த்து அரசு தரப்பில் இருந்து அனைத்து சலுகைகளையும் பெறுவோம்.” என்றார்.

TFPC new president Murali on VPF issue

BREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் நடிகர் தவசி காலமானார்

BREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் நடிகர் தவசி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ரஜினிகாந்த் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும் டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் நிதியுதவி செய்தனர்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

Actor Thavasi who was fighting cancer passed away in madurai

actor thavasi

actor thavasi

மக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.?

மக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநேற்று நவம்பர் 22ல் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு செலுத்த வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்தாவது…

“கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டோம்.

கை கழுவி விட்டு தான் எல்லோரும் சாப்பிடுகிறோம். யாரை பார்த்தாலும் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம்.

தியேட்டர்கள் திறந்தவுடன் மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து வியாபாரங்களும் இப்போதுதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வருகின்றன.

‘டாக்டர்’ படத்தில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. அதை அரசு சொன்ன வழிகாட்டுதலுடன் இப்போது படமாக்கினோம்.

புதிய படத்தினை ஓடிடியில் வெளியிட வேண்டுமா அல்லது திரையரங்கில் வெளியிட வேண்டுமா என்பது தயாரிப்பாளர்களின் விருப்பம்.

என்னைப் பொறுத்தவரை ஒரு படம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும்”

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Sivakarthikeyan speech at TFPC election

இந்து பெண்ணை கோயிலில் வைத்து முத்தமிட்ட இஸ்லாமிய இளைஞர்..; நெட்டிசன்கள் கண்டனம்

இந்து பெண்ணை கோயிலில் வைத்து முத்தமிட்ட இஸ்லாமிய இளைஞர்..; நெட்டிசன்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Suitable Boyஇஷான் கட்டர், தபு, தன்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் ‘எ சூட்டபிள் பாய்’.

மீரா நாயர் இயக்கியுள்ள இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இதில் இஸ்லாமிய இளைஞர் இந்து பெண்ணை கோவிலில் வைத்து முத்தமிடுவதாக ஒரு காட்சி உள்ளது.

இது மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து #BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

Boycott netflix trends over A Suitable Boy scene

காரைக்கால் டூ மகாபலிபுரம்.. நிவர் புயல் எச்சரிக்கை.. : பேருந்து சேவை நிறுத்தம்.!

காரைக்கால் டூ மகாபலிபுரம்.. நிவர் புயல் எச்சரிக்கை.. : பேருந்து சேவை நிறுத்தம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bus transport nivar cycloneநிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் தொடங்கி மகாபலிபுரம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520கிமீ தொலைவில் வலு கொண்டுள்ளது.

இது தொடர்ந்து புயலாகவும் நாளை மறுநாள் தீவிர புயலாக மாறுகிறது.

எதிர்வரும் 25 ம் தேதி நகர்ந்து காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 26ம் தேதி வரை கன மழை பெய்யும்.

இந்த நிலையில் ஏழு மாவட்டங்களில் நாளை, (நவம்பர் 24) மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம் என அறிவித்துள்ளது.

நாளை நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

TN govt announced bus transport will be suspended for 7 districts

More Articles
Follows