கலை இயக்குநர் முத்துராஜுக்கு *சீமராஜா* தந்த வெற்றிப்பட உணர்வு

கலை இயக்குநர் முத்துராஜுக்கு *சீமராஜா* தந்த வெற்றிப்பட உணர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Art Director Muthuraj talks about his working experience in Seemaraja movieபொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க, சூரி, சிம்ரன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி கலை இயக்குநர் முத்துராஜ் பேசும்போது,

“சீமராஜா படத்தில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார்.

அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸ்-ஆப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.

பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும்.

ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார்.

மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது” என்றார்.

Art Director Muthuraj talks about his working experience in Seemaraja movie

தன்னை அறிமுகப்படுத்தியவரையே அவமானப்படுத்தியவர் கமல்.; சுரேஷ் காமாட்சி சுளீர் கேள்வி

தன்னை அறிமுகப்படுத்தியவரையே அவமானப்படுத்தியவர் கமல்.; சுரேஷ் காமாட்சி சுளீர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal insulted Raghunathan who introduced him in Cinema says Suresh Kamatchiகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம்தான் ‘மரகதக்காடு’.

மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் உள்ளிட்டோர் நடிக்க பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளர்.

ஜெய்பிரகாஷ் இசையமைதுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கேஆர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

“ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன. தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நன்றி.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால், அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு.

எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர்.

தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா, இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன், உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து, இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

நீங்கள் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்யுங்க. வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும்.

அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்தார் டைரக்டர் சுரேஷ் காமாட்சி.

Kamal insulted Raghunathan who introduced him in Cinema says Suresh Kamatchi

ragunathan who introduced kamal in cinema

அழகான கமலை அழுக்கான சப்பாணி ஆக்கினேன் : பாரதிராஜா

அழகான கமலை அழுக்கான சப்பாணி ஆக்கினேன் : பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja talks about Kamals Sappani character in 16 Vayathinileஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’.

முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த இசையை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது…

” இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம்.

பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது.

கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது.

இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.

மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் ராஜீவ் கொலை வழக்கில் சிறைப்பட்டு கிடக்கும் ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்.

அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.

Bharathiraja talks about Kamals Sappani character in 16 Vayathinile

Maragathakkaadu audio launch

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் தரும் ஜிவி. பிரகாஷின் புதிய முயற்சி

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் தரும் ஜிவி. பிரகாஷின் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashநடிகர், இசையமைப்பாளர் என திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் ஜிவி. பிரகாஷ், நம் சமுதாயத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளை தினம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது…

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும்.

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

ஏற்கனவே கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது.

இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படும்.

உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே.

தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர்.

நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார்.

கமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன் 2 வில் பிரபல நடிகர்

கமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன் 2 வில் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2ஷங்கர் இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் நடித்து கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன்.

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.

அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.?

தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.?

இந்நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்

முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 teaserசுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான்.

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடுபிலும், 2D திரையரங்குகளில் 2D தொழில்நுட்பத்திலும் 2 பாயிண்ட் O டீசர் திரையிடப்படவுள்ளது.

இன்னும் 3 தினங்களில் புதிய பரிணாமத்தில் 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிக்க தயாராகுங்கள்.

More Articles
Follows