2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்..? ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்

2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்..? ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reelலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 3D டிரைலரை மிகப்பிரம்மாண்டமான முறையில் சென்னையில் வெளியிட்டனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதியன்று வெளியிட்டனர்.

இம்மாதம் இறுதியில் நவம்பர் 29-ஆம் தேதி இப்படத்தை லைகா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருவதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் Mixing reel 6 #2point0 OMG ,.emotional and sci-fi Epic ! என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.

தன் படங்கள் என்றாலும் ஏதாவது பாடல், டிரைலர் வெளியிட்டு தேதியை பற்றிதான் ட்வீட் செய்வார்.

தற்போது அவராகவே முன் வந்து ‘2.0’ பட காட்சிகள் குறித்து பதிவிட்டுள்ளது இந்திய சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எனவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் சர்ப்ரைஸ் நிச்சயம் இருக்கும் என நம்பலாம்.

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reel

Exclusive சர்கார் வில்லன் பழ.கருப்பையாவிடம் தன் அரசியலை உறுதிசெய்த விஜய்

Exclusive சர்கார் வில்லன் பழ.கருப்பையாவிடம் தன் அரசியலை உறுதிசெய்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Villain Pala Karuppiah confirms Vijays Political entry

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான சில காட்சிகள் உள்ளது.

எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் வேண்டும் எனவும் விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இப்பட பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சர்கார் பட வில்லனுமான பழ.கருப்பையா கூறியதாவது:-

ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இருக்காது.

எல்லாரிடமும் ஓட்டெடுப்பு நடத்திவிட்டு ஒரு படத்தை வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது.

நான் பேசிய நிறைய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும்.

15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கினார்கள்.

இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என்று நானே கேட்கிறேன்.

இலவசத்தின் மூலம்தான் ஆட்சி நடத்துகிறீர்கள். கமி‌ஷன் வாங்காத, ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்த படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா? என்று எனக்கு தெரியாது.

அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார்.

அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.

“தனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பணம் வழிந்தோடுகிறது.

எனவே இவ்வளவு அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். மிகச்சிறந்த சிந்தனை. நாள் தள்ளிப் போடாமல் இதை செய்யுங்கள் என்று சொன்னேன்.

இவ்வாறு பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

Sarkar Villain Pala Karuppiah confirms Vijays Political entry

தேவர் மகன்2 படத்தலைப்பை மாற்றச் சொல்லும் கிருஷ்ணசாமி

தேவர் மகன்2 படத்தலைப்பை மாற்றச் சொல்லும் கிருஷ்ணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician Krishnasamy threatens Kamalhaasan for Devar Magan 2மக்கள் நீதி மையம் கட்சியின் தவைரும் நடிகருமான கமல்ஹாசன் தன் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

அப்போது விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

விரைவில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

அதனையடுத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கப்போவதாக அறிவித்தார்.

அவர் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என்னிடத்திலிருந்து இதுபோன்ற ஒரு கடிதத்தை நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களது திரைப்படப் பெயர் விவகாரங்களால் நம்மிடையே மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது.

கமல்ஹாசன் என்ற நடிகரை மிகமிக மதிக்க கூடியவன் நான். ஆனால், உங்களது திரைப்படப் பெயர்கள் தமிழ் சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.

நீங்கள் இப்பொழுது திரைத்துரையிலிருந்து அரசியலுக்கும் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். இந்தியர் – தமிழர் என்ற சொற்றொடர்கள் வெளிப்படையாக இருந்தாலும் தமிழர்களிடையே சாதி அடையாளங்களுக்கான பெரும் போர் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் கருதினேன்.

தற்போது தேவர் மகன் 2 என்ற படம் எடுக்க இருப்பதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளீர்கள்.

ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த அந்த திரைப்படம் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

1993-ல் வெளியான உங்களது திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துக் கொண்டே இருக்கிறது.

1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது -2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்.

பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை,

“தேவேந்திரர் மகன்” என்று தங்களுடைய படத்திற்கு பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கவுரவத்தையும் பெற்றுத்தரும்; அந்தப்படமும், நல்லமுறையில் ஓடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Politician Krishnasamy threatens Kamal to change the title of Devar Magan 2

மீண்டும் மாதவனுடன் சைலன்ட்டாக இணையும் அனுஷ்கா

மீண்டும் மாதவனுடன் சைலன்ட்டாக இணையும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 12 years Madhavan and Anushka romance for Silenceமாதவன் நடித்த ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா.

அதன் பின்னர் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்டோருடன் நடித்து பிரபலமானார்.

அருந்ததி, பாகமதி, பாகுபலி படங்களில் நடித்து ஹீரோயின் கேரக்டர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.

கோனா வெங்கட் தயாரிக்கும் இப்படத்தில் ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்குகிறார்.

சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இதன் சூட்டிங் அடுத்தாண்டு தொடங்குகிறது.

அனுஷ்காவின் பிறந்த நாளான நேற்று அவரின் படம் குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

After 12 years Madhavan and Anushka romance for Silence

Breaking : மதுரையில் அதிமுக எம்எல்ஏ போராட்டம்.; சர்கார் படம் நிறுத்தம்

Breaking : மதுரையில் அதிமுக எம்எல்ஏ போராட்டம்.; சர்கார் படம் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ADMK protests in Madurai Demanding removal Sarkar scenesவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று முன்தினம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளன.

அதாவது மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் உள்ளது.

இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரையில் அதிமுக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் சர்கார் படம் திரையிட்டுள்ள திரையரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மதுரையிலுள்ள அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADMK protests in Madurai Demanding removal Sarkar scenes

துப்பாக்கி-கத்தி-சர்கார்: மூன்று படத்திலும் ஒரே டயலாக் சென்டிமெண்ட்

துப்பாக்கி-கத்தி-சர்கார்: மூன்று படத்திலும் ஒரே டயலாக் சென்டிமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thuppakki Kaththi and Sarkar movies has same interval scenesவிஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி (2012) படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெறவே கத்தி (2014) படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.

தற்போது சர்கார் (2018) படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் நேற்று முன் தினம் வெளியானது.

இந்த 3 படத்திலும் ஒரே காட்சியை சென்டிமெண்ட்டாக வைத்துள்ளார்.

இதில் இடைவேளை காட்சிகளில் ஹீரோவுடன் வில்லன் போனில் பேசுவார். அப்போது ஐ யம் வெய்ட்டிங் என விஜய் சொல்வார்.

மூன்று படத்திலும் இதே சென்டிமெண்டில் இப்படியொரு காட்சியை வைக்க வேண்டுமென முருகதாஸ் விரும்பினாரா? அல்லது விஜய் விரும்பினாரா? என்பதுதான் தெரியவில்லை.

Thuppakki Kaththi and Sarkar movies has same interval scenes

More Articles
Follows