ஹரீஷ் இயக்கும் படத்தில் இசையமைக்கும் அனிருத்-விவேக் மெர்வின்

ஹரீஷ் இயக்கும் படத்தில் இசையமைக்கும் அனிருத்-விவேக் மெர்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh and Vivek Mervin to compose music for childrens adventureஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது, அந்த திரைப்படம் ரசிகர்களை குடும்பத்தோடு திரை அரங்கங்களுக்கு அழைக்கும் படமா? என்பதை பொறுத்து தான் என்கிறார் அறிமுக இயக்குனர் ஹரீஷ்.

குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகனின் வருகை தான் ஒரு இயக்குனருக்கு உண்மையான வெற்றி.

அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இதுபோன்ற நம்பிக்கைகள் மற்றும் முயற்சிகளுடன் ‘நகைச்சுவை குடும்ப அட்வென்சர்’ என்ற வகையின் மூலம் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறார்.

எதிர்நீச்சல், காக்கிசட்டை மற்றும் கொடி போன்ற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் உடன் பயணித்தது, இவருக்கும் உலகளாவிய பார்வையாளர்களின் மீது அதிக அக்கறை காட்ட ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

ஒரு இணை இயக்குனரையும் தாண்டி, கொடி படத்தின் திரைக்கதை குழுவில் ஒரு பகுதியாக இருந்தார் ஹரீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் மற்றும் விவேக் மெர்வின் ஒன்றாக இந்த படத்துக்கு இசையமைப்பது மிகப்பெரிய பலமாக இருக்கும்.

வெற்றி பாடல்களை தொடர்ந்து கொடுக்கும் இந்த இரண்டு இசையமைப்பாளர்களும் ஒரே படத்திற்கு இசையமைப்பது நமக்கு கற்பனைக்கு எட்டாத உற்சாகத்தை அளிக்கிறது.

புதுமுகங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நரேன் இளன் கையாள்கிறார்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடன் உதவியாளாராக இருந்தவர்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களாக கலைவாணன் (எடிட்டர்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (வசனம்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), டி உதயகுமார் (ஆடியோகிராஃபி) ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

வில்லவன் கோத்தாய் ஜி (விஎஃப்எக்ஸ் கிரியேட்டிவ் டைரக்டர்), ஸ்ரீ ரங்கராஜ் ஜே (விஎஃப்எக்ஸ் இயக்குநர்) மற்றும் சந்திரமோகன் ஜே (விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர்) என விரிவுபடுத்தப்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் குழு மேலும் உற்சாகமளிக்கிறது.

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP சார்பில் கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2018ல் துவங்க இருக்கிறது.

Anirudh and Vivek Mervin to compose music for childrens adventure

இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள *ஒண்டிக்கட்ட* ஜூலை 20ல் ரிலீஸ்

இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள *ஒண்டிக்கட்ட* ஜூலை 20ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Bharani turns director with Ondikatta Movie release on 20th Julyபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ஒண்டிக்கட்ட“ என்று பெயரிட்டுள்ளனர்.

தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி /
இசை – பரணி /
பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா /
எடிட்டிங் – விதுஜீவா /
நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா
ஸ்டன்ட் – குபேந்திரன் /
கலை – ராம் / தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி

எழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.

படம் உலகம் முழுவதும் வருகிற 20 ம் தேதி வெளியாகிறது.

Music Composer Bharani turns director with Ondikatta Movie release on 20th July

எந்த கேரக்டர் என்றாலும் ரகுவரன் மாதிரி பேர் எடுக்கனும்… – மதுராஜ்

எந்த கேரக்டர் என்றாலும் ரகுவரன் மாதிரி பேர் எடுக்கனும்… – மதுராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I Wish to be like Actor Raghuvaran says Madhuraiவழக்கமாக ஒரு பழமொழியை எல்லோரும் சொல்வார்கள்.. “உள்ளூர் மாடு சந்தையில் விலை போகாது ” என்று அப்படித்தான் தமிழ் நாட்டில் தமிழ்ப்படங்களில் தமிழ் தெரியாத வில்லன்கள் அப்படியும் சிலர் தப்பித் தவறி ஜெயித்து விடுகிறார்கள். அப்படி ஜெயித்த ஒருவர் தான் மதுராஜ்.

இவரின் நெருங்கிய நண்பர் தான் இயக்குனர் வி.இசட். துரை…

மதுராஜ் மெடிக்கல் துறையில் பிசியாக இருந்தவரை இயக்குனர் துரை இவரை கை பிடித்து இழுத்து வந்து நேபாளி படத்தில் லைன் புரடியூசர் என்கிற அந்தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

அதற்கு பிறகு இவருக்கு ஏற்பட்ட நட்பின் காரணமாக நட்டிகுமார் இயக்கிய “எவனவன்” படத்தில் துப்பறியும் போலீஸ் வேடம்.

விஜய்சேதுபதி நடித்த கருப்பன் படத்திலும் நான் நடித்திருக்கிறேன்.

அடுத்து அங்காடி தெரு மகேஷ் நடிக்க விஜய்மோகன் இயக்கும் படத்தில் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர், போலிஸ் இன்வஸ்டிகேசன் ஆபிசர் என மூன்று பரிமாண காரக்டர்.

மூன்று கால கட்ட கதாபாத்திரம் எனக்கு. சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய காரக்டர் ஒன்றை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய்சேகர்.

ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கும் கதாயுதம் படத்தில் லீடிங் லாயர் வேடம் எனக்கு.. எனக்கு ஒரு ஆசை..

ரகுவரன் மாதிரி எந்த காரக்டர் கொடுத்தாலும் அப்படியே பொருந்திப் போகிறார் இந்த மதுராஜ் என்கிற பேர் எடுக்கணும்.

உள்ளூர் மாடுக்கு விலை இருக்குங்கிறத நிரூபிக்கணும்” என்கிறார் மதுராஜ்

I Wish to be like Actor Raghuvaran says Madhurai

சினிமாவே தெரியாதவங்க தான் சென்சாரில் இருக்காங்க..; கவிஞர் குணா காட்டம்

சினிமாவே தெரியாதவங்க தான் சென்சாரில் இருக்காங்க..; கவிஞர் குணா காட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyricist guna​​எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.பெரும்பாலும் எந்த விழாக்களிலும் அவ்வளவாக தலைகாட்டாத நகை​ச்​சுவை நடிகர் மனோபாலா மழையையும் பொருட்படுத்தாது இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, “இது எங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள 8வது படம். சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்சார் சர்டி​ஃ​பிகேட் வாங்குவதற்குள் மறைந்திருந்து பார்க்க வைத்துவிட்டார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு ‘ஏ’ சான்றிதழ் தருகிறார்கள்.. ஆனால் இந்தப்படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டார்கள். ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின்தான் சான்றிதழே பெற முடிந்தது​. இதுவரை 8 படங்கள் எடுத்துள்ளோம். இந்த படம் எங்களுக்கான முத்திரையாக அமையும். இதுபோன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு மக்களும் மீடியாவும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தர முடியும். ​” என்றார்..

​ நடிகர் ​பாரதிமோகன் பேசும்போது, “இந்த படத்தின் தலைப்பையே ​​இயக்கு​நர் பொதுமக்களை​ப்​ பார்த்து கேட்பது போலத்தான் வைத்துள்ளார் என நினைக்கி​றே​ன்.. காரணம் ரோட்டில் வழிப்பறி போல எந்த சம்பவம் நடந்தாலும் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என​ப்​ பயந்து, மறைந்திருந்துதான் பார்க்கிறோம். அதை​ட்​ தடுக்க முயற்சிப்பதில்லை. விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகள் எதற்காக தடுக்க நினைத்தார்கள் என​த்​ தெரியவில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கவிஞர் குணா பேசும்போது, “அரசாங்கம் செய்யவேண்டிய கடமையை தனி ஒரு ஆளாக செய்கிறவன் தான் போராளி.. அப்படி ஒரு போராளி தான் ​ ​இயக்கு​நர் ராகேஷ். வெள்ளைக்காரன் காலத்துல நாம சினிமா மூலமா புரட்சி காரணமான கருத்துக்களை மக்கள்கிட்ட கொண்டுபோயிட​க்​ கூடாதுன்னு சென்சார் கொண்டுவந்தாங்க.. இன்னைக்கு சென்சார்ல இருக்கிறவங்க பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல.. சினிமா சூட்சுமம் தெரிந்த ஆட்கள் சென்சாரில் இருந்தால் தான், தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பார்கள். இந்தப்படத்தின் நாயகன் துருவாவுக்கு என்ன குறைச்சல்.? ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகனாக இருக்கிறார் துருவா. படத்தின் இசையமைப்பாளர் அச்சு, சுமா நச்சென இசையமைத்துள்ளார்” என
த​ன் பங்கிற்கு சென்சாரின் தவறான அணுகுமுறையை ஒரு காட்டு காட்டினார்.

இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாஸ் ரவி பேசும்போது, “டைரக்டர் ராகேஷ் என்னை​க்​ கூப்பிட்டு இந்தப்படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொல்லி சப்பை’ங்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார். செயின் அறுக்கிற ஆளா தான் நடிச்சிருக்கேன்.. இதுக்காக ட்ரெய்னிங் கூட கொடுத்தாங்க” என்றார்.

நடிகர் மனோபாலா பேசும்போது, “ராகேஷோட இந்த இரண்டாவது படத்துலயும் நான் நடிச்சிருக்கேன்.. பொதுவா நான் எந்தப்படத்தோட விழாக்களிலேயும் அவ்வளவா கலந்து​க்​கிறது இல்ல..ஆனா இந்தப்படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதான் வந்துட்டேன்” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது, “இந்த படத்துல செயின் அறுக்கிற கூட்டத்துக்கு தலைவனா நடிச்சிருக்கேன்.. இந்தப்படம் வெளியான பின்னாடி அநேகமாக செயின் அறுக்க என்னத்தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். நான் தா​ன் ஸ்கெட்ச் போட்டு தரணும்” என்றார் கலாட்டாவாக.

படத்தின் நாயகன் துருவா பேசும்போது, “சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமா செய்தியா வெளியானப்ப தான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது.

டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு.

ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவா தான் இருக்கும்.. என்ன பண்றது..? ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ .. உங்களுக்கே தெரியும்.. இ​ன்​னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக் பாஸ் வீட்டுல இருக்காங்க.. எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும். இந்தப்படத்துல என்னோட அம்மாவா சரண்யா மேடம் வாழ்ந்திருக்காங்க.. நானும் வாழ்ந்திருக்கேனான்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க” என்றார்.

முத்தாய்ப்பாக பேசவந்த ​ ​இயக்கு​நர் ராகேஷ்,

“எத்தனையோ போராட்ட செய்திகள் புதுசு புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும் நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள் தான். அதுதான் இந்தப்படத்தை எடுக்க என்னை தூண்டுச்சு.

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியா நடந்துபோனா அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா சொன்னார்.. ஆனா இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே.. இதை சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம்..

என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடத்துக்குப்பின் இந்தப்படம் கிடைத்துள்ளது.(​மேடையிலேயே அழுதுவிட்டார்)​ பின் ​இயக்கு​நர் மனோபாலா வந்து தேற்ற தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,

​ அதற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது. இந்தப்படத்தின் கதாநாயகனாக துருவா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓடிவந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப்போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தை தூக்க வேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.

அவர் கீழே விழுந்ததும் நான் கட் சொல்ல முயற்சிக்க, ஒளிப்பதிவாளர் முத்தையா குறுக்கிட்டுஎன்னை தடுத்துவிட்டார். அதனாலேயே அந்த​க்​ காட்சி ரொம்ப இயல்பாக வந்துவிட்டது. எடிட்டர் ஷான் லோகேஷ் கூட எப்படி இந்த​க்​ காட்சியை தத்ரூபமாக படமாக்கினீர்கள் என வியந்தார்.. நான் ஒன்னு சொன்னேன்.. அதை அவங்க சரியா செய்யாததால், அந்த காட்சி கரெக்ட்டா வந்துருச்சுன்னு அவர்கிட்டே சொன்னேன்” என படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்தவர், அப்படியே சென்சார் மேட்டருக்கு தாவினார்.

“சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் என​ப்​ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியை சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள்.

பெண்கள் எந்தவிதமாகவெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்த காட்சிகளை பார்த்துவிட்டு, நீங்களே செயின் அறுக்கும் வழிகளை சொல்லிக்கொடுக்கிறீர்களா என கேட்கிறார்கள்.

நானும் திரைப்பட​க்​ கல்லூரியில் படித்தவன் தான். அதில் சென்சார் என்கிற ஒரு பாடமே இருக்கிறது. உங்களுக்கு சென்சார் ரூல் தெரியுமா என என்னை கேட்ட அதிகாரியிடம் அதை படிச்சுட்டு வந்தீங்கன்னா நீங்க டைரக்டர் ஆகியிருக்க வேண்டியது தானே சார்னு திருப்பி​க்​ கேட்டேன். இதை சொன்னதுக்குத்தான் சான்றிதழ் தரமுடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க.. அதுக்குப்புறம் போராட்டம் பண்ணி, அந்த டீம் மாறிய பின்னாடி ஒருவழியா சான்றிதழ் வாங்கினோம்” என்கிறார்.

​ ​இயக்கு​நர் ராகேஷ் பேசியபோது ஆரம்பத்தில் பேசமுடியாமல் கண்கலங்க, எழுந்துவந்து அவரை ஆறுதல்படுத்திய மனோபாலா, நான் முதல் படம் பண்ணிட்டு மூணு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு அடுத்த படம் கிடைச்சுது. அதுல என்னை நிரூபிச்சு வெளியே வந்தவன் தான் நான். அவுட்டோர்ல இருநூறு ரூபா கொடுத்து என்னைய ரிஷப்சனிலேயே விட்டுட்டு​ப்​ போன கதையெல்லாம் இருக்கு. ஏன் அது கூட கொடுக்காம போன கதையும் நிறைய இருக்கு நம்ம வெற்றியால தான் மத்தவங்களுக்கு பதில் சொல்லணும்” என​த்​ தேற்றினார்​.

விழாவில் ​ ​எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் விவேக், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், நடிகர்கள் மகா, சிவ குரு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவினை பி ஆர் ஓ ஜான் தொகுத்து வழங்கினார்.

கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து போலீஸிடம் மன்னிப்பு கேட்ட கமல்

கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து போலீஸிடம் மன்னிப்பு கேட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanமக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கொடியை ஏற்றி வைத்தார் கமல்ஹாசன்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், கட்சியின் தலைவராக தாமும், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தனும், பொதுச்செயலாளராக அருணாசலமும், பொருளாளாராக சுரேஷூம் செயல்படுவார்கள் என அறிவித்தார்.

பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்ஹாசன்.

மக்கள்நீதி மய்யம் கட்சியில் எப்போதுமே அனைவரது கருத்துகளும் கேட்கப்படும் என்றும், ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்பாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியால் எல்டாம்ஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு கமல் மன்னிப்பு தெரிவித்தார்.

ஹோட்டல் ரூம் *போட்டது* மறந்து போச்சா..? *சர்கார்* டைரக்டருக்கு ஸ்ரீரெட்டி கேள்வி

ஹோட்டல் ரூம் *போட்டது* மறந்து போச்சா..? *சர்கார்* டைரக்டருக்கு ஸ்ரீரெட்டி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ar murugadossபாலியல் ரீதியாக தன்னை பலரும் பயன்படுத்திக் கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, முருதாஸ் ஜி எப்படி இருக்கீங்க என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கறதா? என்றும் முருகதாசிடம் அவர் கேட்டிருந்தார்.

என்னுடன் நீங்கள் பலமுறை இருந்தாலும் கூறியபடி வாய்ப்பு வழஙகவில்லை என்று ஸ்ரீரெட்டி தெரிவித்து உள்ளார்.

இதற்கு ஏஆர். மு ருகதாஸ் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இவர் தற்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows