தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 14ஆம் தேதி ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமித் ஷா, நாடு முழுவதும் இணைக்கும் மொழி இந்தி எனக் கூறியிருந்தார்.
எனவே மற்ற மொழி பேசும் மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் இருந்து பயங்கர எதிர்ப்பும் உருவானது.
இதற்கு பல பேர் பலவிதமாக கருத்து கூறினாலும் அமித்ஷா அமைதி காத்தார்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசியது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஹிந்தி போன்ற பொது மொழி தேவையில்லை என்று காலையில் தன் கருத்தை தெரிவித்திருந்தார்.
தற்போது மாலை வேளையில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
‘பூர்வதயா இந்துஸ்தான்’ என்ற நிகழ்ச்சி ஒன்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பேசியுள்ளதாவது..
‘இந்தி தினத்தன்று நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைபடுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.
மேலும் ஒரு குழந்தை தனது தாய்மொழியில் படிக்க தெரிந்தால் மட்டும் தான் சிறப்பாக படிக்க முடியும். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.
மொழிகளை வலிமைப்படுத்த தவறினால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று நமது மொழி எது எனத் தெரியாமலே போய்விடும்” என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.
Amit Shah latest reaction to Hindi Imposition in India