தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால்.
இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நடன பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது அந்த நடன வகுப்பிற்கு வந்த ஒருவர் அழகேசன் என்ற தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசி அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம்.
எனவே சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்,
இதனையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Amala Paul alleges sexual harassment by stranger files police case