பிரியாணி பிரியர்களுக்கு ட்ரீட்; அல்சஃபி ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் திறப்பு

பிரியாணி பிரியர்களுக்கு ட்ரீட்; அல்சஃபி ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் திறப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alsafi Ambur Biriyani new outlet opened at Chennai Valasaravakkamசென்னையில் பல்வேறு வகையான புது புது உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்களின் நாவுக்கு ஏற்ற சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

அந்த வரிசையில் மக்களின் மனதுக்கு நெருக்கமான, கடந்த 1993 ஆம் ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்ட அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், கடந்த 25 வருடங்களாக ஆம்பூரின் நம்பர் ஒன் பிரியாணி உணவகமாக திகழ்ந்து வருகிறது.

தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் திறக்கப்பட உள்ளது.

மலிவான விலையில், சுவையான தரமான பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவதையே தங்கள் நோக்கமாக கொண்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவக நிர்வாகம், இதனை தொழிலாக மட்டும் இன்றி ஒரு சேவையாகவும் செய்து வருகிறது.

தற்போது சென்னையின் முதல் கிளையை வளசரவாக்கம், ஸ்ரீ தேவி குப்பம் சாலையில் திறந்துள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், சென்னை முழுவதும் 20 கிளைகளை திறக்கப்பட இருப்பதோடு, தமிழகம்
முழுவதும் 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இன்று முதல் வளசரவாக்க கிளையில் விற்பனையை தொடங்கியுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் ஆன்லைன் ஆப்-களுக்கான ஸ்விக்கி (Swiggy) சொமட்டோ (Zomato) உபேர் (Uber) மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

பிரியாணி மட்டும் இன்றி, கிரில் சிக்கன், சவர்மா, தந்தூரி வகைகள், சைனீஸ் வகைகள் என பல வகையான அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல் பேசும் போது, “சுவையான மற்றும் மலிவான விலையில் பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவது தான் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் நோக்கம். சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம்.

தமிழகத்தில் சுமார் 50 கிளைகள் திறக்க உள்ளோம். பிராஞ்சீஸ் முறையில் இந்த கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதற்காக டெப்பாசிட் ஏதும் நாங்கள் வசூலிக்கவில்லை. 300 சதுர அடி இடம் இருந்தால் போதும், யாருக்கு வேண்டுமானாலும் பிராஞ்சீஸ் கொடுப்போம். இன்று வளசரவாக்க கிளையை திறந்தவுடனேயே விற்பனை
அமோகமாக இருப்பதோடு, பிராஞ்சீஸுக்காக 10 புக்கிங் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தை சேர்ந்த அஜய் பாண்டியன் பேசும் போது, “நாங்கள் சமைக்கும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி, மசாலா உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் தரமானதாக
இருக்கும், அதனால் தான் எங்களது பிரியாணி 25 ஆண்டுகளாக மக்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.

தரமான உணவை மலிவான விலையில் கொடுப்பது தான் எங்கள் நோக்கம்.” என்றார்.

இன்று திறக்கப்பட்ட வளசரவாக்கம் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சில வாடிக்கையாளர்கள், பிரியாணி தரம் குறித்தும், சுவை குறித்தும் வெகுவாக பாராட்டியதோடு, விலையும் நியாயமானதாக இருப்பதாக கூறினார்கள்.

பிரியாணி பிரியர்களே, இப்போதே உங்க போனை எடுங்க, புட் ஆப்பில் அல்சஃபி ஆம்பூர் பிரியாணியை ஆர்டர் செய்து சுவைத்து பாருங்க.

Alsafi Ambur Biriyani new outlet opened at Chennai Valasaravakkam

alsafi biriyani shop

 

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu didnt talk much in Chekka Chivantha Vaanam audio launchலைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜோதிகா, விஜயசேதுபதி தவிர மற்ற அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பாடினார்.

பின்னர் மேடையேறிய சிம்பு…

‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.

நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன்” என்று மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார் சிம்பு.

Simbu didnt talk much in Chekka Chivantha Vaanam audio launch

*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwaliகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுசுக்கு அண்ணனாக சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி.

இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதே நாளில்தான் விஜய்யின் சர்கார் படமும் வெளியாகிறது.

எனவே இரு படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே 3 முறை விஜய் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwali

வெங்கட் பிரபுவின் பார்ட்டியை கைப்பற்றிய சன் டிவி

வெங்கட் பிரபுவின் பார்ட்டியை கைப்பற்றிய சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Party movie satellite rights bagged by Sun Tvவெங்கட் பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி’.

இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் ஷாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிவி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

Party movie satellite rights bagged by Sun Tv

*இக்லூ* படம் மூலம் டிஜிட்டல் உலகிற்கு வரும் பரத் மோகன்

*இக்லூ* படம் மூலம் டிஜிட்டல் உலகிற்கு வரும் பரத் மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Igloo movie shooting starts with Poojaநிறைய இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இந்த தளங்களை பயன்படுத்தி நல்ல நல்ல விஷயங்களை கொடுத்து வருகிறார்கள். இயக்குனர் பாரத் மோகன் (சி.வி.குமார் இயக்கிய மாயவன் படத்தின் இணை இயக்குனர் மற்றும் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் உதவி இயக்குனர்), தற்போது இந்த டிஜிட்டல் உலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நல்ல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவோடு “இக்லூ” என்று தலைப்பிட பட்ட ஒரு ரொமாண்டிக் காமெடி படம் மூலம் தனது பயணத்தை துவங்குகிறார் இயக்குனர் பாரத் மோகன்.

இது பற்றி அவர் கூறும்போது, “இக்லூ” ஒரு நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த ஒரு முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படம். மாயா, இறவாக்காலம், நரகாசூரன் ஆகிய படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்த இசையமைப்பாளர் ரான் ஏதன் யோகன் இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

அவரது நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அஜ்மத் கான் நாயகனாக நடிக்கிறார்.

காட்சியில் சூழ்நிலைகளை உடனடியாக புரிந்து கொண்டு, சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பதால் அவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம்.

மேலும், மாயா உட்பட எல்லா திரைப்படங்களிலும் அவரது முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அஞ்சு குரியன் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் நாயகி, ஏற்கனவே ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். அவரது அழகான தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் சாரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பது தான் அவரை தேர்ந்தெடுக்க முழுமுதற் காரணம்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உதவியாளர் குகன் எஸ் பழனி (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே. (மாரி, மாரி 2 மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை) மற்றும் தாமஸ் குரியன் (ஒலி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

வலைத்தளங்களில் நேரடியாக ரிலீஸாகும் “இக்லூ” படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Igloo movie shooting starts with Pooja

இயக்குநர் ஈ.ராமதாஸ் மகன் ராமபாண்டியன் நிச்சயதார்த்தம்; பாரதிராஜா வாழ்த்து!

இயக்குநர் ஈ.ராமதாஸ் மகன் ராமபாண்டியன் நிச்சயதார்த்தம்; பாரதிராஜா வாழ்த்து!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Film Personalities at Director E Ramadoss Son Engagementஇயக்குநர், எழுத்தாளர், இப்போது பிஸியான நடிகருமான ஈ ராமதாஸ் – திலகவதி தம்பதிகளின் மகன் ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம் நேற்று புதன்கிழமை மாலை நடந்தது.

மணமகன் ராம பாண்டியன் ஆஸ்திரேலியாவில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மணமகள் ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி ஆவார்.

சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன், அவரது மனைவி திருமதி செல்வி தியாகராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, கேஎஸ் ரவிக்குமார், சித்ரா லட்சுமணன், கே ரங்கராஜ், மனோபாலா, பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரேஷ் காமாட்சி, சி ரங்கநாதன், நடிகர்கள் எஸ்வி சேகர், வழக்கு எண் முத்துராமன், மயில்சாமி, வையாபுரி, வெங்கட் சுபா உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமணம் வரும் பிப்ரவரி 6, 2019-ல் சென்னையில் விமரிசையாக நடக்கவிருக்கிறது.

Film Personalities at Director E Ramadoss Son Engagement

Film Personalities at Director E Ramadoss Son Engagement

More Articles
Follows