‘வலிமை’ அப்டேட் இல்லை.. ‘பில்லா’ ரீ-ரிலீஸ்..; அஜித் ஃபேன்ஸ் செம ஹாப்பி

‘வலிமை’ அப்டேட் இல்லை.. ‘பில்லா’ ரீ-ரிலீஸ்..; அஜித் ஃபேன்ஸ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith billaதோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் அஜித்திற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் ‘பில்லா’ (2007).

இது ரஜினியின் ‘பில்லா’ பட ரீமேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.

விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருந்தார்.

இவரது இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ பட அப்டேட் கிடைக்காத அஜித் ரசிகர்களுக்கு ‘பில்லா’ ரி-ரிலீஸ் மகிழ்ச்சியான செய்தி்தானே..

Ajith’s billa to be re released in TN

தியேட்டரை விட்டு ஓடும் ‘சக்ரா’..; தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் தியேட்டர் உரிமையாளர்கள்

தியேட்டரை விட்டு ஓடும் ‘சக்ரா’..; தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chakra Vishal (2)2021 பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் & ஈஸ்வரன் ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசானது.

கொரோனா பயத்தை கடந்தும் இந்த படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்தனர்.

அதன் பின்னர் தியேட்டர்களுக்கு போதுமான கூட்டம் வரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம்.. பட ரிலீசின் போது போதுமான விளம்பரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ‘சக்ரா’ மற்றும் ‘கமலி From நடுக்காவேரி’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானது.

கமலிக்கு கிடைத்த புரோமோசன் அளவில் சிறியளவில் கூட ‘சக்ரா’ வுக்கு செய்யவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

‘சக்ரா’ படத்திற்கு பிரஸ்மீட் எதுவும் நடக்கவில்லை. இரண்டு முறை நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டனர்.

இதனால் விஷால் படம் வெளியானது கூட பலருக்கும் தெரியவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே வருத்தப்படுகின்றனர்.

ஒருவேளை பிரஸ்மீட் நடைபெற்று இருந்தால் நாளிதழ்கள், வார இதழ்கள், டிவிக்கள், இணையதளங்களில் அது பற்றிய பேச்சு இருந்திருக்கும்.

மக்களும் அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்திருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Theatre owners blames Chakra producers

ஜிவி பிரகாஷ் & அம்ரிதா இணையும் ‘வணக்கம்டா மாப்ள’ பர்ஸ்ட் லுக் அப்டேட்

ஜிவி பிரகாஷ் & அம்ரிதா இணையும் ‘வணக்கம்டா மாப்ள’ பர்ஸ்ட் லுக் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.

அதன் பின் அழகு ராஜா, VSOP, மிஸ்டர். லோக்கல் என படு தோல்விப் படங்களை கொடுத்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.

சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

அதாவது ஜிவி இசையில் ஒரு பாடலை அவர் பாடவிருக்கிறாராம்.

‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறாராம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ என்று பெயரிட்டு இப்பட ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர்.

பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

#VanakkamDaMappilei First Look

Direction – Rajesh
Cast – GV Prakash, Amritha, Yogi Babu, Anand Raj, Daniel, Reshma
Music : GV Prakash
Production Company : Sun Entertainment

GV Prakash and Amritha joins for VanakkamDa Mappilei

VanakkamDaMappilei

‘தலைவர்’ என்னும் நபர் அரசியலை கவனிக்கிறார்..; நல்லவர்களுக்காக காத்திருக்கிறோம்… – கமல்ஹாசன்

‘தலைவர்’ என்னும் நபர் அரசியலை கவனிக்கிறார்..; நல்லவர்களுக்காக காத்திருக்கிறோம்… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan (2)தேர்தல் பிரச்சாரம் மற்றும் பிக்பாஸ் ஷோ என பிசியாக இருந்த கமல்ஹாசன் அண்மையில் காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று தன் நண்பர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது.. ‘‘தலைவர்’ என சொல்லப்படும் நபர் நாள் தவறாது அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாய்ப்பு இருக்கிறது.

என் பின்னால் வாருங்கள் என்று சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம்’ என மறைமுகமாக ரஜினியைக் குறிப்பிட்டு பேசினார்.

“மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யாரும் எங்களுடன் வரலாம். சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம்.

நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் ” என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

MNM leader Kamal haasan hopes to lead a third front for polls

ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க அரசியலில் நுழைந்தார் முன்னாள் IAS அதிகாரி சகாயம்

ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க அரசியலில் நுழைந்தார் முன்னாள் IAS அதிகாரி சகாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sagayam IAS (1)ஊழல் நிறைந்த உலகத்தில் நேர்மையானவர் என பெயர் எடுப்பது அறிதாகிவிட்டது.

அதிலும் தமிழக அரசு துறைகளில் நேர்மைக்கு கூட விலை பேசுவார்கள்.

இந்த நிலையிலும் நேர்மையான IAS (ஐஏஎஸ்) அதிகாரி என பெயரெடுத்தவர் சகாயம்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் இவர்.

முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர் இவர்.

கிரானைட் முறைகேடு, மணல் முறைகேடு, பெப்சி கம்பெனி நடவடிக்கை என பல அதிரடிகளை மேற்கொண்டு தமிழக மக்களின் ரியல் ஹீரோவானார்.

இவரின் நேர்மைக்காகவே இவரை பலரும் நேசித்தனர்.

இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றினார்.

நேர்மையாக இருந்தால் தான் வாழ விடமாட்டார்களே.. பல இன்னல்களை சந்தித்தார். மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே வேறு வழியில்லாமல் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இவர் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு எப்போது அரசியலுக்கு வருவார்? என பலரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் பாதை சார்பில் “அரசியல் களம் காண்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் பேசினார் சகாயம்..

‘இளைஞர்களே எல்லோரும் வாருங்கள்.

அனைவரும் சேர்ந்து ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம்.

அரசியல் கோபம் உண்டு. ஆனால் அரசியல் பதவி ஆசை இல்லை. நான் எந்த திரைப்பட நடிகரிடமும் பேசியதில்லை.

அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன்.

இளைஞர்களே… கடைசி வரை நேர்மையாக, சாதியை உடைத்தெரிக்கிற லட்சிய நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்’ என பேசினார் சகாயம்.

Former IAS Officer Sagayam announces his political entry

முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் உருக்கம்..; புற்றுநோய் மருத்துவமனையில் ரசிகர்கள் உதவி

முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் உருக்கம்..; புற்றுநோய் மருத்துவமனையில் ரசிகர்கள் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan (2)தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

விருதினை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன் தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அத்துடன்.. “சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி.

தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் https://t.co/EtBPVyycNK

என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள் கேன்சர் நோயாளிகளுக்கு உதவிகள் செய்துள்ளனர்.

கலைமாமணி விருது பெற்ற அண்ணன் @Siva_Kartikeyan சந்தோசத்தை கொண்டாடும் விதமாக புற்றுநோய் மருத்துவமனையில் ஹார்லிக்ஸ், பிஸ்கட்ஸ், பழங்கள், பால் மற்றும் சாப்பாடு டாப்பகள் @Chengai_SKFC பம்மல் நகர நற்பணி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது

@AllIndiaSKFC @navneth @AnandSkfc https://t.co/Ikgr4LpMFc

Actor Sivakarthikeyan dedicated his Kalaimamani award to his mom

More Articles
Follows