எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார்..; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார்..; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans happy with their actor Selfie at fans crowdபொதுவாக ஒரு நடிகர், நடிகைகள் கண்டால் ரசிகர்கள் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவார்கள்.

அதுவும் டாப் ஹீரோக்களை கண்டுவிட்டால் கட்டுங்கடங்காத கூட்டம் வந்துவிடும் என்பதால் சில நடிகர்கள் வேகமாக சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் பொதுவெளியில் நடிகர் அஜித்தை கண்டதும் பெருங்கூட்டம் திரண்டுள்ளது.

அப்போது ரசிகரின் செல்போனை வாங்கிய அஜித் தானே அவர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

இதனை பதிவிட்ட ரசிகர்கள் எங்க தல எங்களுடன் செல்ஃபி எடுப்பார் என ஆனந்தமாக சொல்லி வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

Ajith fans happy with their actor Selfie at fans crowd

Breaking மறக்க முடியாத நிகழ்வை தந்த ரஜினி..; சூர்யா நெகிழ்ச்சி

Breaking மறக்க முடியாத நிகழ்வை தந்த ரஜினி..; சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launchலைகா தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘காப்பான்’ படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார் ரஜினி.

மேலும் புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யா பேசிய கருத்துக்கு தன் பெரும் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் தன் ட்விட்டரில் ”தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இந்த இசை வெளியீட்டு விழா… நன்றி! ரஜினி சார் உங்கள் வார்த்தை பெரும் மதிப்பு மிக்கவை.” என தெரிவித்துள்ளார்.

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launch

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட ‘சர்வா யோகா’ நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா அரோரா ஆகியோர். இந்த நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளது சர்வா நிறுவனம்.

சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா ஆர். தனுஷ், ” தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்று கூறினார்.

பாலிவுட் ஃபிட்ஸ்பிரேஷன் மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யா அவர்கள் சர்வா மற்றும் திவா யோகாவுடன் சேர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆர்வம் திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ”

இந்த வளர்ச்சி குறித்து சர்வாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சர்வேஷ் ஷஷி கூறுகையில், “ஐஸ்வர்யா அவர்கள் மனதளவில் மற்றும் உடலளவிலான ஆரோக்கியத்திற்கு குரல் கொடுப்பவராக நான் அறிந்திருக்கிறேன், அவர் தென்னிந்தியாவில் திவா யோகாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ”

இந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ – பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த இரு மாதங்களில் செயல்படவுள்ளது.

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம்! சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா?, அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் என அவரே சொல்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இருக்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.

சூர்யா ஒன்னும் சும்மா பேசல…; மோடிக்கு எதிராக ரஜினி பேச்சு

சூர்யா ஒன்னும் சும்மா பேசல…; மோடிக்கு எதிராக ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth supports Suriya speech and slams BJP Governmentமோகன்லால் உடன் முதன்முறையாக சூர்யா நடித்துள்ள படம் ‘காப்பான்’.

கேவி ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இதில் பேசிய ரஜினிகாந்த்…

‘சில தினங்களுக்கு முன் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்திற்கு நான் ஆதரிக்கிறேன். அவர் அகரம் பவுண்டேசன் நடத்தி வருகிறார். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா.

அவர் ஒன்றும் தெரியாமல் பேசவில்லை. தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. சூர்யாவின் கல்வி குறித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

ரஜினி பேசினால்தான் மோடிக்கு கேட்கும் என்பது இல்லை. சூர்யா பேசியதும் மோடிக்கும் கேட்டு இருக்கும்.
சூர்யா நடித்த பிதாமகன், மற்றும் கார்த்தி நடித்த பருத்திவீரன் படங்கள் அருமை. அவர்களின் நடிப்பை பார்த்து வியந்தேன்.

காப்பான் படத்தில் மோகன்லால் நடிப்பது சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. அவர் மிகச்சிறந்த நடிகர்.
நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்த ஆர்யா பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் நிறைய அகோரிகளை நேரில் சந்தித்திருக்கிறேன். அப்படியொரு நடிப்பை ஆர்யா கொடுத்திருந்தார்.

சிவாஜிக்கு பிறகு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது.’ என்றார்.

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை ஆரம்பம் முதலே பாஜக. வினர் எதிர்த்தனர். இப்போது சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி பேசியிருப்பது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth supports Suriya speech and slams BJP Government

ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்

ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

ஒரு காங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரையிலேயே வெளியிடப்பட உள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்

தனுஷ்
ஐஸ்வர்யா லட்சுமி

தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இசை: சந்தோஷ் நாராயணன்

படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்

கலை: வினோத் ராஜ்குமார்

சண்டை பயிற்சி : அன்பறிவ்

நடனம்: எம் செரிஃப், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: விஷ்ணு கோவிந்த் ஸ்ரீ சங்கர் (சவுண்ட் ஃபேக்டர்)

தயாரிப்பு ஒருங்கினைப்பு: முத்துராமலிங்கம்

ஆடை வடிவமைப்பு: D.பிரவீன் ராஜா

ஒப்பனை: ஏ சபரி கிரீசன்

விளம்பர வடிவமைப்பு: டியூனி ஜான் (24 AM)

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

More Articles
Follows