இந்தியன்2-க்கு பிறகு தேவர்மகன்2 படத்தை தொடங்க கமல் முடிவு

இந்தியன்2-க்கு பிறகு தேவர்மகன்2 படத்தை தொடங்க கமல் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Indian2 Kamal Haasan planning to make Thevar Magan2இந்திய சினிமாவில் தற்போது சீசன் 2 காலம் தொடங்கிவிட்டது.

அதிலும் முக்கியமாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் அதிகளவில் தயாராகி வருகிறது.

இதில் ஒரு சில 2ஆம் பாக படங்கள் வெற்றிப் பெறவில்லை என்றாலும் அந்த முயற்சியை சம்பந்தப்பட்டவர்கள் விடுவதாக தெரியவில்லை.

இந்நிலையில் கமலும் 2ஆம் பாக முயற்சியில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விரைவில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

இப்படத்தை முடித்துவிட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற தேவர் மகன் இரண்டாம் பாகம் படத்தை தொடங்கவுள்ளாராம்.

1992ல் வெளியான இந்த படத்துக்கு அப்போது தேசிய விருது கிடைத்தது. மேலும் இது ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

கமல் தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருவதால் தேர்தலுக்கு முன்பே தன் கைவம் உள்ள படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

After Indian2 Kamal Haasan planning to make Thevar Magan2

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish and keerthy sureshலிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி2 படம் விஷாலின் 25வது படமாகும்.

எனவே விஷாலை வாழ்த்த அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மோகன்லால், ஷங்கர், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

அப்போது விஷால், கீர்த்தி, வரலட்சுமி, சதீஷ், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் மேடையேறினர்.

அப்போது விஷால் மேடையில் இருந்த அனைவரையும் கலாய்த்து பேசினார்.

ஒவ்வொரு முறையும் எப்படியாவது கீர்த்தியிடம் காதலை புரபோஸ் செய்துவிட்டார் சதீஷ். இது கிட்டதட்ட 25வது முறையாகும்.

இது விஷால் 25 விழா அல்ல. இது சதீஷ் 25 விழா என்றாகிவிட்டது” என்று கலாய்த்து பேசினார் விஷால்.

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ஜெய்-பிக்பாஸ் டேனியல்

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ஜெய்-பிக்பாஸ் டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai and danielநயன்தாரா நடித்த அறம் படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து அறம் 2 படத்தை இயக்குவார் கோபி நயினார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையில் தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் டைரக்டர்.

இதில் நாயகனாக ஜெய் நடிக்கிறாராம்.

இது வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

இம்சை அரசன் பிரச்சினை தீரல; வெங்கட் பிரபுடன் இணையும் சிம்புதேவன்

இம்சை அரசன் பிரச்சினை தீரல; வெங்கட் பிரபுடன் இணையும் சிம்புதேவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chimbu devan and vpவடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தை ஷங்கர் தயாரித்து இருந்தார்.

2006ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

ஆனால், வடிவேலு சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.

இதனால் வெறுத்துப் போன டைரக்டர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கப் போகிறாராம்.

இப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கவுள்ளார்.

இப்படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகிறதாம்.

சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி, அஜய் மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DVM Seva Paalam announces 2018 awards Big recognition for Kabilan Vairamuthus Yenthiru Anjali Yenthiruமருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மையர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பத்திரிகை உலகில் பாலம் என்ற மலரும் வெளியிடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

DVM Seva Paalam announces 2018 awards Big recognition for Kabilan Vairamuthus Yenthiru Anjali Yenthiru

ராதிகா உள்ளிட்ட 12 சாதனையாளர்களுக்கு மகளிர் ஆளுமை விருதுகள் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்

ராதிகா உள்ளிட்ட 12 சாதனையாளர்களுக்கு மகளிர் ஆளுமை விருதுகள் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், “2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல்.

ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது எங்களுக்கு பெருமை.

பல்வேறு துறை சார்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கும் நன்றி என்றார்.

1992ல் 36 மாணவர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5000 ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், அப்படி அவர்களின் ஆளுமையை சிறப்பிக்க இந்த விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம், ஜார்க்கண்ட் மாநில மேதகு ஆளுனர் திரௌபதி முர்மு கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயம் என்றார் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

விருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளை பெற்றிருக்கிறோம்.

நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களை கண்டு பெருமை கொள்கிறது.

சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி. சமூக விரோத சக்திகளை ஒழிக்க, சமூக நிர்வாகம் தேவை.

கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் எல்லோரையும் ஊக்குவிக்கின்றன.

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

விழாவில்…

1. திருமதி ராதிகா சரத்குமார் – கலை மற்றும் பண்பாடு
2. திருமதி எஸ்.மலர்விழி – கல்வி
3. திருமதி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் – பொதுச்சேவை
4. டாக்டர் ரெஜினா ஜே முரளி – கல்வி
5. திருமதி ரூபி பியூட்டி – உடல் பயிற்சி.
6. திருமதி விஜயலக்‌ஷ்மி தேவராஜன் – சமூக சேவை
7. டாக்டர் கே.பிரேம் சாந்தா – கல்வி
8. திருமதி ஷீபா பிரின்ஸ் – தொழில்முனைவோர்
9. டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் – கல்வி
10. திருமதி விமலா பிரிட்டோ – சமூக சேவை
11. திருமதி இந்திரா ராஜேந்திரன் – கல்வி
12. திருமதி சித்ரா லட்சுமி – தொழில்முனைவோர்

ஆகிய 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்லூரியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் ஜோதிமுருகன், ரெஜிஸ்ட்ரர் வீரமணி, சேவியர் பிரிட்டோ, கிரோத் குமார் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018

More Articles
Follows