‘அஸ்வின்ஸ்’ விமர்சனத்தில் சவுண்ட் என்ஜினியர் வரை பாராட்டினர் – வியப்பில் விமலா ராமன்

‘அஸ்வின்ஸ்’ விமர்சனத்தில் சவுண்ட் என்ஜினியர் வரை பாராட்டினர் – வியப்பில் விமலா ராமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

நடிகை விமலா ராமன் பேசியதாவத…

“’அஸ்வின்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரக்கூடிய சக்தி சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பிரசாத் சார், பாபி சார், பிரவீன் சாருக்கு நன்றி. படத்தின் விமர்சனம் நான் பார்த்த வரையில் படத்தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், மியூசிக் என அனைத்து டிபார்ட்மெண்ட்டையும் பாராட்டி இருந்தார்கள்.

என்னுடைய சக நடிகர்கள் எல்லாருமே அற்புதமாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். என்னுடைய இயக்குநர் தருணுக்கும் ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கும் நன்றி”.

இயக்குநர் தருண் தேஜா பேசியதாவது…

“நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையை நான் எழுதும்போதே பார்வையாளர்களுக்கு நல்லதொரு ஹாரர் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். அது சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

இரண்டு, மூன்று முறை பார்வையாளர்கள் திரும்ப வந்து பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன்.

என்னுடைய குறும்படம் பார்த்து பாராட்டி வாய்ப்பு கொடுத்த பிரவீன் சாருக்கும் பாபி சாருக்கும் பிரசாத் சாருக்கும் நன்றி. படமாக உருவான பின்பு சக்தி சார் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்.

மிகச்சிறந்த உழைப்பைக் கொடுத்த என்னுடைய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் யாரையும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை என நினைக்கிறேன்.

வொர்க்‌ஷாப்பில் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய குறும்படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் கூட்டிச் சென்றதே விமலாராமன் மேம்தான். அவர் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். நடிகர் என்பதையும் தாண்டி அஸ்வின் எனக்கு நல்ல சகோதரர். கிளைமாக்ஸில் வசந்த் ரவியின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது”.

தயாரிப்பாளர் BVSN பிரசாத் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”

சவுண்ட் டிசைனர் சக்தி பேசியதாவது, “தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழு அனைவருக்கும் நன்றி. படம் யாரும் இன்னும் பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள்”.

Actress Vimala Raman speech at asvins movie success meet

எனக்குள்ள திறமையை வெளிக் கொண்டு வந்தார் இயக்குநர்.. – சரஸ்வதி மேனன்

எனக்குள்ள திறமையை வெளிக் கொண்டு வந்தார் இயக்குநர்.. – சரஸ்வதி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த ஹாரர் படம் ‘அஸ்வின்ஸ்’.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில்…

நடிகை சரஸ்வதி மேனன்…

“பொதுவாக ஹாரர் படம் பார்ப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், எனக்கு படத்தில் எப்படி பயமுறுத்துவது என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் அப்படி ஒரு திறமை இருப்பதை வெளிக் கொண்டு வந்தது ‘அஸ்வின்ஸ்’தான். எட்வின் சார், பாலா சார், விமலா மேம் என அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. எனக்கு இந்த முதல் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். படம் 50வது நாள் வரை செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது”.

actress Saraswathi Menon speech at asvins movie success meet

அண்ணன் நான் இறங்கி வரவா.? சாதனை படைக்க விஜய் எப்பவுமே ‘நா ரெடி..’

அண்ணன் நான் இறங்கி வரவா.? சாதனை படைக்க விஜய் எப்பவுமே ‘நா ரெடி..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமீபத்தில், இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தற்போது ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், “நா ரெடி” பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay’s naa ready song crosses 50 million views in youtube

அஜித் பட நடிகருக்கு கால் முறிவு; நடிகையிடம் நலம் விசாரித்த ரிப்போர்ட்டர்.!

அஜித் பட நடிகருக்கு கால் முறிவு; நடிகையிடம் நலம் விசாரித்த ரிப்போர்ட்டர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானவர் நவ்தீப்.

இதை தொடர்ந்து ‘நெஞ்சில்’ படத்தில் மற்றும் அஜித்குமாருடன் ‘ஏகன்’ படத்தில், ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘சீறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நவ்தீப் தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

தேஜஸ்வி

இந்நிலையில், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பத்திரிக்கையாளர்கள் நடிகை தேஜஸ்வி வீட்டுக்கு சென்றார்கள்.

அப்போது, அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் என கூறப்பட்டது.

நவ்தீப் காலில் கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நவ்தீப்3

actor navdeep broke his leg

ஷாருக் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்.; அட்லி படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

ஷாருக் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்.; அட்லி படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.

அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Red Giant movies has acquired the publishing rights of shahrukh khan’s jawan

அனுமதியில்லாமல் ‘ஜெய்பீம்’; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த ராஜக்கண்ணு உறவினர்

அனுமதியில்லாமல் ‘ஜெய்பீம்’; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த ராஜக்கண்ணு உறவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஜெய்பீம்’.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2 டி’ எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ‘ஜெய்பீம்’ படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர 9 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், வழக்கு பதிவு செய்து எட்டு மாதங்கள் கடந்தும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நீதிபதி, விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், வழக்கை செப்டம்பர் 15 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

jai bheem movie case urgent investigation and final report should be filed saidapet court

More Articles
Follows