சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthaஅனிமேஷன் படங்களை போல சரித்திர படங்களுக்கும் தற்போது மவுசு அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் ‘சகுந்தலை’ என்ற புராண கதையும் சினிமாவாக தயாராகி வருகிறது.

சகுந்தலை என்ற டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு ‘சகுந்தலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

Actress Samantha to romance a young hero in an epic movie

நடிகன் என்ற தன் அடையாளத்தை அசுர லெவலில் மாற்றிய தனுஷ்.; ரசிகர்கள் ஆனந்தம்

நடிகன் என்ற தன் அடையாளத்தை அசுர லெவலில் மாற்றிய தனுஷ்.; ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushதனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ்.

இத்துடன் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43வது படமாகும் என்பதால் தற்காலிகமாக D43 என்று அழைக்கின்றனர்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன் ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார்.

தன் படம் தொடர்பான தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் தருவதில் தனுஷ் முன்னோடி ஆவார்.

இதனால் 96 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை ட்விட்டரில் பாலோ செய்கின்றனர்.

இதுநாள் வரை தன் புரொபலை நடிகர் என வைத்திருந்த தனுஷ் தற்போது அசுரன்/நடிகர் என மாற்றியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார், தளபதி போன்று இதுநாள் வரை தனுஷுக்கும் எந்த பட்டமும் இல்லை.

இனி நடிப்பு அசுரன் என்ற பட்டம் சூட்டப்படலாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Dhanush gets new title card ?

10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sengottaiyanஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது…

“தமிழகத்தில் தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. 94% மாணவர்கள் வருகிறார்கள்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் (திங்கள் முதல் சனி) பள்ளிகள் நடைபெறும்.

பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெறும்.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்.? மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்ட போது ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Education Minister Sengottaiyan talks about school reopen for Primary students

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Doctor கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா எனும் ஆந்தாலஜி’ படத்தில், நடிக்கிறார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது..

இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya gets Sivakarthikeyan movie heroine for his next

ஜிவி பிரகாஷ் இசையில் லாரன்ஸ் & ப்ரியா நடிக்கும் ‘ருத்ரன்’..; கதிரேசன் தயாரித்து இயக்குகிறார்

ஜிவி பிரகாஷ் இசையில் லாரன்ஸ் & ப்ரியா நடிக்கும் ‘ருத்ரன்’..; கதிரேசன் தயாரித்து இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rudhranபொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன்.

தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இவரே இயக்குகிறார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று ஜனவரி 20ல் பூஜையுடன் துவங்கியது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – 5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்்

Raghava Lawrence in Rudhran shoot starts today

சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல்..; சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை.!

சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல்..; சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikalaசொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளது.

எனவே சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேள்வி எழுந்தது.

விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார் சசி.

அதன்படி ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.

இந்தநிலையில் இன்று ஜனவரி 20ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக சிறை வளாகத்திலுள்ள டாக்டர்கள் சசிகலாவுக்கு சிகிச்சையளித்தனர்.

தற்போது, சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல்கள் வந்துள்ளன.

Sasikala shifted to Bowring Hospital after developing breathing difficulties.

More Articles
Follows