தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் நாடே அதிர்ச்சியானது.
ஏற்கெனவே சீனாவில் இருந்து உருவான கொரோனா நோயால் இந்தியாவில் பலர் மரணம் அடைந்து வரும் நிலையில் சீனாவின் இந்த கொடூர தாக்குதலால் சீனாவை வெறுத்து வருகின்றனர் இந்தியர்கள்.
எனவே சீனா தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டாம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலும் தன் உறுதிமொழியை அறிவித்துள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.
“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.
எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.
நடிகை சாக்ஷி அகர்வாலின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்
Actress Sakshi Agarwal boycotts Chinese products