தி பேமிலி மேன்-2 பார்த்து எங்க ஃபேமிலியே சமந்தா ஃபேனாயிட்டோம்..; சூர்யா-கார்த்தி பட ஹீரோயின் ஓபன் டாக்

தி பேமிலி மேன்-2 பார்த்து எங்க ஃபேமிலியே சமந்தா ஃபேனாயிட்டோம்..; சூர்யா-கார்த்தி பட ஹீரோயின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakul preet singh familyசமந்தா, பிரியாமணி ஆகியோரது நடிப்பில் அமேசான் ஒட்டி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘தி பேமிலி மேன்-2’.

இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கும் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில்…

‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

இந்த தொடரை பார்த்த பிறகு எங்க குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறி விட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ & சூர்யாவுடன் ‘என்ஜிகே’ படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் ட்விட்டர் பதிவில்..

#familymanseason2 has been watched and it’s USP is terrific terrific performances by all! @BajpayeeManoj Im falling short of words to say how outstanding you were in the show ! @Samanthaprabhu2 take a bow!! U are fire girl! How brilliantly have you pulled off Raji my family..

Has also become your fan now besides me @rajndk congratulationssss n more power to you ! @Samanthaprabhu2 @BajpayeeManoj #PriyaManiRaj

Actress Rakul Preet Singh praises Samantha’s acting in The family man 2 web series

லாக் டவுன் லவ்வர்ஸ் ஆதித் – ஷிவாணிக்கு கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

லாக் டவுன் லவ்வர்ஸ் ஆதித் – ஷிவாணிக்கு கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

www movieஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “WWW”.

ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று ஜூன் 8 வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி “மின்னலை எதிரே” எனும் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் KV குகன் கூறியதாவது…

இது ஒரு அழகான மெலோடி பாடல். பொதுமுடக்க காலத்தில் சிக்கி பிரிந்திருக்கும் காதலர்கள் , கணிணி வழியே வெளிப்படுத்திகொள்ளும் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

பல அழகான மெலடி பாடல்களை தந்த இசையமைப்பாளர் சைமன் K கிங் இப்பாடலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

கண்டிப்பாக அனைத்து இசை ஆர்வலர்களும் “மின்னலை எதிரே” பாடலை கொண்டாடுவார்கள். இப்பாடலை வெளியிட்டு ஆதரவு தந்த நடிகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் WWW ( Who… Where … Why…. ) எனும் இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன்.

Ramantra Creations சார்பில் Dr. ரவி பிரசாத் ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார்.

தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார்.

பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Hip Hop Tamizha revealed minnalai song from WWW

சானிடைசர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம்

சானிடைசர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

N 95 maskகொரோனா வைரஸ் 2வது அலை பரவல் காரணமாக அதன் தடுப்பு பொருட்கள் தேவை அதிகமாகியுள்ளது.

அதாவது சானிடைசர், மாஸ்க், ஆக்சிஜன் மாஸ்க், பிபிஇ கிட் உடை, பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி…

இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3,

மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50

ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54

பிபிஇ கிட் உடை – ரூ.273

கிருமிநாசினி 200 மி.லி – ரூ.110

N95 முகக் கவசம் – ரூ.22

கையுறை – ரூ.15

ரத்தத்தில் ஆக்சிஜனை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் – ரூ. 1,500

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரான் விலை ரூ.12

சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை விலை ரூ.65

TN govt declares 15 items as COVID-19 essentials, fixes price

‘பாபநாசம் 2’ இயக்க காத்திருக்கும் ஜீத்து .; கௌதமி வேண்டாம்.. கமல் கண்டிசன்.?

‘பாபநாசம் 2’ இயக்க காத்திருக்கும் ஜீத்து .; கௌதமி வேண்டாம்.. கமல் கண்டிசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gauthami papanasamஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்த ‘த்ரிஷ்யம் 2’ கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அதுபோல இதன் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கி முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப்.

‘த்ரிஷ்யம்’ பட முதல் பாகம் தமிழில் கமல் கௌதமி நடிப்பில் ரீமேக்காகி ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது.

எனவே இதன் 2ஆம் பாகத்தை மலையாளம், தெலுங்கை போலவே தமிழிலும் ‘பாபநாசம் 2’ படத்தை இயக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார் ஜீத்து ஜோசப்.

பாபநாசம் முதல் பாகம் உருவாகும் போது கமல் & கௌதமி தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்தனர்.

அது தொடர்பான பிரஸ் மீட்டர் கூட “எத்தனையோ டாப் ஹீரோயின்கள் (முன்னணி நடிகைகள்) இருக்க கௌதமி ஏன்? என கேட்க… ” எனக்கு கௌதமி தான் டாப்” என பதிலளித்தார் கமல்.

இப்போது அந்த டாப் இடத்தில் நடிகை பூஜா குமார் இருக்கிறார் என்பதை உலகம் அறியும்.

எனவே முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த கௌதமி 2ஆம் பாகத்தில் நடிப்பதை கமல் விரும்ப மாட்டார்.

கௌதமிக்கு பதிலாக 2ஆம் பாகத்தில் மீனா நடிக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் பாபநாசம் பட முதல் பாகத்தை போல 30-40 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து.

விக்ரம், இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் என கமல் கைவசம் சில படங்கள் இருப்பதால் பாபநாசம் 2 படம் எப்போது உருவாகும்? என்பது கேள்விக்குறியே.

Kamal Haasan condition on Papanasam 2 ?

ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ படத்தை இயக்கிய சொர்ணம் காலமானார்..; முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ படத்தை இயக்கிய சொர்ணம் காலமானார்..; முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் காலமானார்.

எழுத்தாளர் சொர்ணம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சொர்ணம் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர்.

மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட திரு சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர்.

கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர்.

எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

director sornam

Director Sornam passed away

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்கிறாரா தனுஷ்.?

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்கிறாரா தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush‘ஜகமே தந்திரம்’ படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதனிடையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றார் தனுஷ்.

இவருடன் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார்.

சுமார் 4 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார் தனுஷ்.

எனவே தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட ஓட்டளிக்க தனுஷ் வரவில்லை.

தற்போது ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாம்.

தற்போது கொரோனா ஊரடங்கு சூழ்நிலையால் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

இவையில்லாமல் தனுஷின் மாமனார் ரஜினிகாந்தும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல தயாராக இருக்கிறார்.

அதனால் தனுஷ் அங்கே தங்கியிருந்து மாமானாரின் பரிசோதனைக்காக காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Rajinikanth to fly to the US for a medical check-up?

More Articles
Follows