ஒரு பக்கம் உற்சாகம் மறுபக்கம் பதட்டம்…. ‘குப்பத்து ராணி’ ஓபன் டாக்

ஒரு பக்கம் உற்சாகம் மறுபக்கம் பதட்டம்…. ‘குப்பத்து ராணி’ ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Palak Lalwani speaks on Kuppathu Rajaஜிவி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்துள்ள குப்பத்து ராஜா படம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் நாயகியாக பாலக் லால்வானி நடித்துள்ளார்.

இப்பட நாயகி இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது.

என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.

படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன்.

டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன்.

நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம்.

Actress Palak Lalwani speaks on Kuppathu Raja

ஜிவி ப்ரோ பாட்ட கேட்டு சிலிர்த்துட்டேன்…. சூர்யா பாராட்டு

ஜிவி ப்ரோ பாட்ட கேட்டு சிலிர்த்துட்டேன்…. சூர்யா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya send bouquet and note to GV Prakash and praises his songs‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இப்பட பாடல்கள் அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். சூப்பர் பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார்.

இதனை போட்டோ எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Suriya send bouquet and note to GV Prakash and praises his songs

‘நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ … ஜிப்ரானிடம் அஜித் வாக்குறுதி

‘நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ … ஜிப்ரானிடம் அஜித் வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Ghibran reveals Ajith wanted to work with him soonஉலகநாயகன் கமல்ஹாசனின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது ஜிப்ரான் தான்.

கடந்த சில வருடங்களில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் உள்ளிட்ட படங்களுக்கு ஜிப்ரான் இசையைமைத்திருந்தார்.

தற்போது கமல் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கும் இவரேதான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை ஜிப்ரான் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளதாவது…

அதில், “தல அஜித்துடன் அவரது உண்மையான ரசிகன்!.. அவரைப் பற்றி பலரும் சொல்வதைக் காட்டிலும் மேலானவர்.

அவர் சொன்னதிலேயே, ஒரே ஒரு வார்த்தை மட்டும் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் அது தான் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ . நன்றி, இனிய ஞாயிறு” என குறிப்பிட்டுள்ளார்.

Music Composer Ghibran reveals Ajith wanted to work with him soon

மோடி-சின்னய்யா-சின்னம்மா… கலாய்த்து தள்ளும் யோகி பாபு

மோடி-சின்னய்யா-சின்னம்மா… கலாய்த்து தள்ளும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leadersவிமல், வரலட்சுமி ஜோடியாக இணைந்துள்ள `கன்னிராசி’ படத்தை இயக்கியவர் முத்துகுமரன்.

அந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து `தர்மபிரபு’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் யோகிபாபு எமதர்மனாக நடித்துள்ளார். அவரின் தந்தையாக ராதாரவி மற்றும் தாயாக ரேகா நடித்துள்ளனர்.

இவருடன் `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.
அதில் ‘இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் வசனங்கள் வருகிறது.

மேலும் இந்தியர்கள் வங்கி கணக்கில் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி சொன்னதையும் கிண்டல் செய்துள்ளனர்.

இது தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leaders

கடவுள் நம்பிக்கையும் யோகாவும் இணைந்தால் சக்தி கிடைக்கும் : ரஜினி

கடவுள் நம்பிக்கையும் யோகாவும் இணைந்தால் சக்தி கிடைக்கும் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக புகழ் பெற்ற ஆன்மீக நூல் -ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் வெளியீடு விழா சென்னையில் 30.3.19 இன்று மாலை 6 மணிக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது .
இந்த விழாவில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும்.

யோகியின் சுயசரிதம் 125 வருடங்களாக ஆன்மிக உலகினை புரட்டி போட்ட புத்தகம்” என அவர் பேசினார்.

Rajini speech At Autobiography of a Yogi Tamil audio book launch event

Rajini speech At Autobiography of a Yogi Tamil audio book launch event

மிஸ் சவுத் இந்தியா அபூர்வி சைனியின் கனவை நிறைவேற்றுவாரா விஜய்சேதுபதி?

மிஸ் சவுத் இந்தியா அபூர்வி சைனியின் கனவை நிறைவேற்றுவாரா விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathiமாடல் அழகி அபூர்வ சைனி என்பவர் மார்ச் 17ம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019’ என்ற பட்டத்தை வென்றார்.

இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது சென்னையிலுள்ள எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது.

தனது 19வது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார்.

தெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார். இதை தவிர அவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.

ரூபாறு மிஸ் இந்தியா எலைட் சாதனையை தொடர்ந்து இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் சாதிக்க தன்னுடைய துறையில் எப்போதும் பெரிய கனவுகளை காணுங்கள் என்கிறார். அதுமட்டுமின்றி மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இளம்பெண்களுக்காக மாடலிங் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார்.

அவரின் இந்த முயற்சியினால் சென்னையை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அவர் பார்வையில் தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.

என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.

சிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமை போன்றவை அவரை மிகவும் பாதித்தவை ஆகும். எனவே அவர் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் NGO-வில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

NGO சார்ந்த மக்களும் இவரோடு இணைந்து நாங்கள் Hind Towards Change என்ற நிறுவனத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் சமூகத்தின் மேல் உள்ள எண்ணத்தை மாற்றவும் உழைக்கிறோம். தனிமனித வளர்ச்சியையும் அவர்களின் விழிப்புணர்வும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.

நாங்கள் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம். உதாரணமாக காஷ்மீர் வெள்ள நிவாரணம், கேரள வெல்ல நிவாரணம், Sanitary pads விழிப்புணர்வு, ரத்ததானம், குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை விதிகள் விழிப்புணர்வு மற்றும் ஏராளம். இதன் மூலம் ஒரு சுத்தமான வாழ்க்கை முறையும், உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வையும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathi

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathi

More Articles
Follows