பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சிம்பு – ஜெயம் ரவி பட ஹீரோயின்

பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சிம்பு – ஜெயம் ரவி பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

niddhi agerwal‘முன்னா மைக்கேல்’ என்ற ஹிந்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.

பின்னர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு படங்களில் நடித்தாலும்
பிரபலமாகவில்லை.

இதனை அடுத்து பூரி ஜெகநாத் இயக்கிய ‘ஐஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நிதிக்கு வாய்ப்புகள் வந்தன.

பொங்கலுக்கு ரிலீசான சிம்புவின் ’ஈஸ்வரன்’ & ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய 2 படங்களிலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணின் 27-வது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் நிதி அகர்வால்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

கிரிஷ் இயக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகவுள்ளது.

Actress Nidhhi Agerwal to play female lead in Power Star’s next film

‘ராஜலிங்கா’ படம் பார்த்துட்டு வாட்ஸ் அப் திறந்தால் எச்சரிக்கை வரும்.. – ஷிவபாரதி

‘ராஜலிங்கா’ படம் பார்த்துட்டு வாட்ஸ் அப் திறந்தால் எச்சரிக்கை வரும்.. – ஷிவபாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raja Lingaaஅறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ராஜலிங்கா’. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கியிருக்கும்
ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.

இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த
திருச்சி விநியோகஸ்தர்
மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறியதாவது….

இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.

அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.

இப்படத்தில் நான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மாறன் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.

இந்தப்படத்தின் நாயகி வேடத்துக்கு இருபதுக்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் நடிக்கமுடியாது என்று போய்விட்டார்கள்.

இப்போது நாயகியாக நடித்திருக்கும் ஜாய் ப்ரியா, கதையைக் கேட்டதும் இதுபோன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன் என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

பல கோடி ரூபாய் செலவில் தயராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கின்றன.

திருச்சி ஏரியாவில்கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும்
#திருச்சிமாரிமுத்துராஜலிங்காபடத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shiva Bharathi talks about his upcoming film Raja Linga

ஹிப் ஹாப் ஆதி இசையில் வைபவ் & பார்வதி இணைந்த் பேண்டஸி படம்

ஹிப் ஹாப் ஆதி இசையில் வைபவ் & பார்வதி இணைந்த் பேண்டஸி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aalambanaகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து ஆலம்பனா’ என்ற படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் பேண்டஸி கான்செப்ட் பாணியில் தயாராகியுள்ளது. அந்த கான்செப்ட் பின்னணியில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தயாராகியுள்ள படம் இது என்று சொல்லலாம்.

இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரத்துடன் உருவாக்கியுள்ளனர். பெரும் பொருட்செலவிலான படம் என்பதால் நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

துள்ளலான இசையை வழங்கும் ஹிப் ஹா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

அவருடைய இசை கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறது படக்குழு. ஏனென்றால், பாடல்களே கதைக்குத் தகுந்தவாறு அற்புதமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் என்கிறார் இயக்குநர் பாரி கே.விஜய்.

மைசூர் அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என பம்பரமாய் சுழன்றும், அதே வேளையில் நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரத்தினசாமி. எடிட்டரான ஷான் லோகேஷ் பணிபுரிந்து வருகிறார்.

பிரம்மாண்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிந்த பீட்டர் ஹெய்ன், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரத்தியேகமாக வடிவமைத்து வித்தியாசமாகக் கையாண்டுள்ளார்.

அது ஏன் என்பது படமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் என்கிறது படக்குழு. பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் அரங்குகள் அனைத்துமே யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார் கோபி ஆனந்த்.

கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் நனைய வைத்து குழந்தைகளை குஷிப்படுத்த ‘ஆலம்பனா’ தயாராகி வருகிறது.

Vaibhav and Parvati Nair joins for Aalambana

தனுஷின் தந்தை இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’.; அதன் 2ஆம் பாகத்தை இயக்கும் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது

தனுஷின் தந்தை இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’.; அதன் 2ஆம் பாகத்தை இயக்கும் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raj kiran with his son1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் – மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார்.

நடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும் நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது.

80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் ‘திப்பு சுல்தான் நைனார் முஹம்மது’ இயக்க இருக்கிறார்.

இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி,

இறை அருளால்,
இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது
அவர்களின் இருபதாவது பிறந்த நாள்…

“என் ராசாவின் மனசிலே”
இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு,
திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்… அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.

அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்…

En Rasavin Manasile sequel is on cards

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீஸ் தகவலை வெளியிட்டார் மாரி செல்வராஜ்

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீஸ் தகவலை வெளியிட்டார் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு – மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

இதில் தனுஷுடன் லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதியுடன் இப்பட ஷூட்டிங் நிறைவடைந்தது.

திருநெல்வேலி மாவட்டம் அருகே இப்பட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை சிறப்பு டீசர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

Dhanushs Karnan movie release date updates

ரஜினியின் ‘எந்திரன்’ பட கதை திருட்டு விவகாரம்.; டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரன்ட்.!

ரஜினியின் ‘எந்திரன்’ பட கதை திருட்டு விவகாரம்.; டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரன்ட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாகரன் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

2010ல் ரிலீசான இப்படம் தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த படம் வெளியான சமயத்திலேயே இப்பட கதை தன்னுடைய ‘திக்திக் தீபிகா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆருர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

எனவே விசாரணைக்குத் தடைகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் இயக்குநர் ஷங்கர்.

ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

எனவே, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால், இயக்குநர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞரோ யாரும் பதில் தராததால் கைது செய்ய தற்போது பிடிவாரன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Enthiran story theft case Court issues non bailable warrant against Shankar

More Articles
Follows