தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கழுகு பட புகழ் சத்யசிவா இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது.
இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசன்னா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் நாயகியின் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
தற்போது நாயகியாக ஹரிப்பிரியா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்தவர் தான் ஹரிப்பிரியா.
தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னட சினிமாவுக்கு சென்றார். தற்போது 9 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஹரிப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Hari Priya’s re entry in kollywood after 9 years