கந்துவட்டி சிக்கலில் சிவகார்த்திகேயன் பட நாயகி? போலீஸில் புகார்

கந்துவட்டி சிக்கலில் சிவகார்த்திகேயன் பட நாயகி? போலீஸில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Anandhi files a complaint about Kanthuvattiசின்னத்திரை நடிகை ஆனந்தி. இவர் கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரின் உதவியுடன் கந்துவட்டிக் கும்பல் என் தாயாரின் வீட்டை எழுதி வாங்கிவிட்டதாகவும் தன் சகோதரனைக் கொலை செய்துவிட்டதாகவும் சென்னைக் காவல்துறை ஆணையரிடம் சின்னத்திரை நடிகை ஆனந்தி புகார் அளித்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில் இவர் கூறியுள்ளதாவது…

சின்னத்திரையில் துணை நடிகையாக வேலை பார்க்கும் நான், என் தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி, அவர் மகன் தினேஷ் என்ற தேசய்யா ஆகியோரிடம் 2014-ம் ஆண்டு 5 லட்சம் மூன்று தவணையாக 2 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் என வாங்கினேன்.

இவற்றில் வட்டியாக ரூ. 1,80,000 செலுத்தியுள்ளேன். மீதித் தொகைக்கு அசல் மற்றும் வட்டிக்கு என் அம்மாவின் வீட்டை ராணிப்பேட்டை காவல் நிலையம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

பிறகு என்னையும் என் கணவரையும் மிரட்டி ராணிப்பேட்டை ஐ.ஓ.பி வங்கியின் மூன்று காசோலையில் கையெழுத்து வாங்கிச் சென்றுவிட்டனர். பின்னர் அந்தக் காசோலையில் 30 லட்சம் எனத் தனித்தனியாக எழுதிக்கொண்டனர்.

பின்னர், வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டதாகவும் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

ஆனால் தற்போது அந்த பணத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு ரூ. 30 லட்சத்தை அடைக்க வேண்டும் என சித்தி தன்னை வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடியாட்களை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்.

ஆனால் இது திருவண்ணாமலையில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கமிஷ்னர் புகாரை ஏற்க மறுப்பதாகவும், இவரை அலைக்கழிப்பதாகவும் மீடியாவில் தெரிவித்திருக்கிறார்.

Actress Anandhi files a complaint about Kanthuvatti

மெர்சல் பிடிக்கலையா பார்க்காதீங்க; பட வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மெர்சல் பிடிக்கலையா பார்க்காதீங்க; பட வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High court dismisses petition against Mersal issue of Censor Certificateமெர்சல் படத்தின் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கான தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் சரமாரி கேள்விகளை கேட்டது.

மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அந்த படத்தில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

மேலும் மெர்சல் என்பது ஒரு படம், உண்மையில் பொதுநல அக்கறையிருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி சொல்லி நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்.

மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு.

உங்களுக்கு படம் பிடிக்கவில்லை எனில் நீங்க அதை பார்க்காமல் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

High court dismisses petition against Mersal issue of Censor Certificate

மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalவிஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இப்படத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலத்தையும், இதனால் தனியார் மருத்துவமனைகள் செய்யும் அராஜகத்தையும் கூறியிருந்தனர்.

ஒரு அரசு மருத்துவனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் குழந்தைகள் இறந்ததும், பெருச்சாளி கடித்து ஒரு குழந்தை இறந்தது பற்றிய உண்மை சம்பவங்களை பற்றி விஜய் பேசியிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் அரசு மருத்துவமனைகளை தவிர்ப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுவதாகவும், அவர்கள் இதனை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க வருகிறது தமிழக அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக அரசியலில் மெர்சல் செய்த புரட்சியாக கருதலாம்.

ஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..?

ஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரு குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவரது நடிப்பில் செம, 4ஜி, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இவையில்லாமல், 100% காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான இவருக்கு சின்ன இளைய தளபதி என்ற பட்டத்தை வழங்கவுள்ளதாகவும், இனி வரும் படங்களின் தலைப்பில் அந்த பெயர் போடப்படவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இதுகுறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது….

இதுபோன்ற பொய்யான செய்திகளை கேட்டால் எரிச்சல் வருகிறது. நான் விஜய் சாரின் ரசிகர். அவர் எனக்கு அண்ணா. அதைத்தாண்டி ஒன்றுமில்லை. என்று மறுத்துள்ளார்.

10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக், 18ல் தீபாவளியன்று வெளியானது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது.

படத்திற்கு கிடைத்த பாஜக.வின் புரோமோசனால் பட்டி தொட்டிங்யெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அக். 28 மற்றும் அக். 29 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 7 காட்சிகளை திரையிட உள்ளதாக சென்னையைச் சேர்ந்த வெற்றி தியேட்டர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸாகி 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும்.

ஆனால் முதன்முறையாக 10 நாட்களை கடந்த பின்னும் 7 காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rakesh Gowthaman‏ @VettriTheatres 2m2 minutes ago
#Mersal will have 7 shows this Sat & Sun . Book 8am Spl Morning Show for rear seatings in #Vettri ….

கமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

கமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanடெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து, ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, நிலவேம்பை விநியோகம் செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

எனவே, நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலை பரப்புவதால், கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வரவே நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதியலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தொடர்பான செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே விரைவில் கமல் மீது வழக்கு பதியலாம் என கூறப்படுகிறது.

More Articles
Follows