தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை, மாட்டுத்தாவணியில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில்…
‘நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர்.
இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும்.
இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.
அப்போது தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்தார்.
Actor Vijay Sethupathi donated his eyes