தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரலாறு காணாத மழை வெள்ளத்தை கேரளா மாநிலம் சில தினங்களுக்கு சந்தித்தது.
மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கேரளா மாநிலமே மூழ்கிய நிலையில் காணப்பட்டது.
இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையறிந்த துபாய் நாடு முதல் உழைப்பாளர் வரை அனைவரும் தங்களால் இயன்ற நிவாரணத் தொகைகளை கேரள அரசுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.
தமிழில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கினர்.
இந்நிலையில் நடிகர் விஜய் கிட்டதட்ட ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் )
முகாமில் தஞ்சமடைத்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தானம்திட்டா, பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை ,கோதுமைமாவு, ரவை, மைதா, ஆடைகள், போர்வைகள், பெட் சீட், பால் பௌடர், நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கும் கேரளாவில் மலையாள ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vijay donates Rs 70 lakhs to Kerala flood relief