தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அனிதாவுக்காக உரிமையேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், “தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இங்கே ஊருக்கு ஊர் சேரியும் காலனியும் இருக்கிறது.
நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன். வீதிக்கு ஒரு சாதி இருக்கிறது.” என்று ஆவேசமாக பேசினார்.
இவரது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவுக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியது.
இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்” என்று பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்” என்று பதிவிட்டார் ரஞ்சித்.
அதற்கு பதிலளித்த எஸ்விசேகர்.. “வெற்றி, வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார் ” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவதும், அவர் எஸ்வி. சேகரின் நண்பர் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Actor SVeShekar and Director Ranjith fight regarding caste Issue