தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே கோலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது பல படங்களின் ஓடிடி ரிலீஸ் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’, மணிகண்டன் இயக்கி விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’, நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’, ஹன்சிகா நடித்துள்ள ‘மஹா’, பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு இயக்கியுள்ள ‘வாழ்’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிட சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டினாலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவி நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
இதனால் ‘டாக்டர்’ படத்தை பெரிய தொகைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றனவாம்.
தியேட்டர்கள் திறக்க 3 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை என்ன செய்வது? என தெரியாமல் கதாநாயகன் கலங்கி நிற்கிறாராம்.
Actor Sivakarthikeyan in trouble ?