ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Shanmuga Pandian launching website for his fansகேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முக பாண்டியன் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி 2018 நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு.

நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

Actor Shanmuga Pandian launching website for his fans

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala cleared by the censor board with UA certificate

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இந்திய முழுவதும் பிரபலமானது.

விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் காலா தோனி வெர்சன் என்ற டீசர் வெளியானது.

விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்ட்டது.

இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. பெரும்பாலும் ரஜினி படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் என்பதால் யு சான்றிதழே கிடைக்கும்.

ஆனால் காலாவில் நிறைய ஆக்சன் காட்சிகள் இருப்பதால் இதற்கு யு/ஏ கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் கிட்டதட்ட 14 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில்… சில காட்சிகளை மட்டுமே வெட்டியுள்ளனர் என்றும் 14 காட்சிகள் வெட்டப்பட்டது என்பது பொய் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Rajinis Kaala cleared by the censor board with U/A certificate

காவிரிக்காக மீண்டும் ரஜினி உண்ணாவிரதம்.? அந்த கோல்டன் மேஜிக் நடக்குமா.?

காவிரிக்காக மீண்டும் ரஜினி உண்ணாவிரதம்.? அந்த கோல்டன் மேஜிக் நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Rajinikanth conduct fasting for Cauvery water issueசுப்ரீக் கோர்ட் உத்தரவுக்கு பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால், காவிரி நீருக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

ஏப்ரல் 3ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதே நாளில் தமிழகத்தில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார் கமல்ஹாசன்.

இன்று ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இதனிடையில் போராட்டங்களை தமிழக கட்சிகள் கைவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ள ரஜினிகாந்த், உண்ணாவிரதம் இருக்க போவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்ற போதிலும் இந்த சூழ்நிலையில் ரஜினி எதுவும் செய்யவில்லை என்றால், அவருக்கு எதிராக தமிழகம் திரும்பக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்டத்தின் மூலம் தன் அரசியல் பலத்தை ரஜினி நிரூபிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தங்கள் போராட்டங்களை தலைநகரமான சென்னையில் நடத்தி வருவதால் ரஜினி வேறு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிகிறது.

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட சில விவசாய மாவட்டங்களை தேர்தெடுத்து, அந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு காவிரி பிரச்சினை வந்த போது ரஜினி கலந்துக் கொண்ட போராட்டங்களை பார்ப்போம்.

1980களில் காவிரிக்காக பெங்களூரு கலவர பூமியாகி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு தமிழகம் நோக்கி நடந்தே வந்தார்கள்.

அப்போது, நான் கர்நாடகம் சென்று தமிழர்களுக்காக போராடுவேன், என் ஒவ்வொரு ரசிகரும் தமிழர் உயிர் உடமை காக்க நிற்பார்கள் என்று குரல் கொடுத்தார் ரஜினி.

சொன்னபடி கர்நாடகா செல்ல முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தனர்.

அடுத்து 1990களில் மீண்டும் காவிரிப் பிரச்சினை வெடித்தபோது, கர்நாடகம் நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றார்.

2008-ல் ஒகேனக்கல் பிரச்சினைக்காக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம். அதிலும் கலந்து கொண்ட ரஜினி, தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா? என ஆவேசமாக பேசினார். (பின்னர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார்).

இது ஒரு புறம் இருக்க, ரஜினி தனி ஆளாக நின்று 16 வருடங்களுக்கு முன் இதே காவிரி பிரச்சினைக்காக இருந்த உண்ணாவிரதம் போராட்டம் குறித்து பார்ப்போம்.

இதற்கு முன்பு ஒரு தனி மனிதராக ரஜினி செய்த போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அதுதான் 2002ல் நடந்தது. அதுபற்றி பார்ப்போம்…

2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காவிரி நதிநீர் வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு. அதை மதித்து காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டும் என வலியுறுத்தினார் ரஜினி.

அதற்கு முந்தைய நாள்தான் நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம் கலந்துக் கொண்டது.

அப்போது சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் நடத்திய இந்த போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்ளவில்லை.

எனவே ரஜினி போராட்டத்தில் சத்யராஜ், ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த நாள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் ரஜினிக்காக வந்து ஆதரவளித்து அமர்ந்திருந்தது.

அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தினால் அதிமுக பிரபலங்கள் அதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் திமுகவைச் சேர்ந்த முக. ஸ்டாலின், காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

உண்ணாவிரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த 9 மணி நேரமும் இயற்கை உபாதைக்கு கூட எழுந்திருக்காமல், தண்ணீர் ஒரு சொட்டு கூட குடிக்காமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் என்ற ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த போராட்டம், அந்த நாள் முடிவில் தமிழகத்தையே உலுக்கியது எனலாம்.

எனவே அதுபோன்ற ஒரு மேஜிக்கை இப்போது ரஜினிக்கு உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Rajinikanth conduct fasting for Cauvery water issue

rajini fasting 2002

அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Devakottai kadhal movie stills (23)அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் காதல் கோட்டை. இந்த படத்தலைப்பை கொஞ்சம் ஆல்டர் செய்து தேவகோட்டை காதல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன், மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்

கதை – சீனு
திரைக்கதை – ARK, PPA ரஹ்மான்
பாடல்கள் – காதல்மதி
இசை – ஜோனபக்தகுமார்
எடிட்டிங் – இப்ரு
ஸ்டண்ட் – ஜீரோஸ்
நடனம் – ராஜேஷ்
ஒளிப்பதிவு – ரஞ்சித் ரவி
இணை தயாரிப்பு – பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே
எழுதி இயக்குகிறார் – A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு.

படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.

Deva kottai kadhal movie news updates

விஜயகாந்த்-அர்ஜூன்-அஜித் படங்களை இயக்கிய மகாராஜன் மகன் நடிகராகிறார்

விஜயகாந்த்-அர்ஜூன்-அஜித் படங்களை இயக்கிய மகாராஜன் மகன் நடிகராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Maharajan son Viswanath becomes heroவிஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன்.

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன், கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.

வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும் இயக்க உள்ளார்.

இதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை மிக மிக கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன்.

விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன்.

பிரபல கதாநாயகி, பிரபல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

Director Maharajan son Viswanath becomes hero

பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்

பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Autism affected kids are Gods childrens says singer Saindhaviகடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.

இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம்.

அந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க… வழிதவறிப்போனான்.

ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையைப் புரிந்துக் கொள்ளவில்லை.

இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்த பிள்ளை அங்கும் வழி கேட்டு சென்றுள்ளது.

என்றாலும் அவனின் நிலை அவனை புறக்கணிக்க வைக்கவே பயன்பட்டது.
இறுதியாக, களைத்துப் போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனான்.

அந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். ஒரு சிறு கவனக்குறைவும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக சிதைத்துவிடும் என்று அந்த சம்பவம் இது போன்று குழந்தை கொண்டவர்களுக்கு உணர்தியது.

இதைத் தெரிந்து கொள்ளாத, உணராத பெற்றோர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவனத்தையும், குழந்தைகள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்தவும், இந்த சமூகம் அவர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தொடங்கியதுதான் இந்த பேரன்புடன் என்ற குறும்படம் என்றார் திருமதி ராதா நந்தகுமார்.

இவர் தயாரிக்க, மணி என்பவர் இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட. நிவாஸ் புதிய அறிமுகம். கதா நாயகனாக நடித்துள்ளார்.

ஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர்.

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 2௦ வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் திருமதி ராதா.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகள் குறித்த புரிதலை உருவாக்குகிறார்.

இதுகுறித்து ஹம்மிங் பேர்ட்ஸ் ஆசிரியர் பயிற்சி மையம் உரிமையாளருமான ராஷ்மியிடம் பேசியபோது ஒரு சிறிய கனவாக இருந்த விஷயம் சிறகுகள் பெற்றது. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதற்கான சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர் தான்” என்கிறார் ராதா நந்தகுமார்.

மாற்றம் என்பது மெதுவான நிகழ்வு தான்.. ஆனால் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை உறுதியாக நம்புகிறார் திருமதி ராதா நந்தகுமார்.

சாதாரண மனிதர்கள் போல கேட்டு அதை உடனடியாக உணரும் நேரக் கோட்பாடுகளில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது.

உதாரணமாக, சதாரண மனிதர்களாகிய நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும்.

ஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும். எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும்.

அப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வரும்? அந்த எரிச்சல்தான் அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது. அவர்களையும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது.

இது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் முடியும்.

அந்தவகையில் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களை வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான விழாவாக அதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்..

இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

பின்னணி பாடகி சைந்தவி பேசும்போது…

“எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்..

ஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்.. இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதை விட, தெய்வக் குழந்தைகள் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

அவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப்போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும்..
இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.

“இந்தக் குறும்படம் உங்களை கண்கலங்க வைக்காது.. மாறாக ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மனிதர்களை உங்களில் ஒருவராக சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும், அதற்கான சாத்தியங்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்தும்” என்கிறார் ‘பேரன்புடன்’ குறும்படத்தின் இயக்குநர் SP மணி.

விரைவில் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த டீம்.

இயக்குநர் ராம்-ன் வேண்டுகோளுக்கு இணங்க இக்குறும்படத்தின் பெயர் பேரன்புடன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Autism affected kids are Gods childrens says singer Saindhavi

autisam vasanth

More Articles
Follows