தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் சட்டத்தை மதிக்காமல் பலர் சாலையில் சுற்றி திரிகின்றனர்.
போலீசார் இவர்களை கண்டித்து சிறையில் அடைத்து வாகனங்கள் பறிமுதல் செய்தாலும் இன்னும் சிலர் இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார்.
மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள நடிகரை சபாஷ் சார் என சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Actor Sasikumar on road to create Corona awareness