ஜெயம் ரவி & அருண் விஜய் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் சந்தானம் மகன்

ஜெயம் ரவி & அருண் விஜய் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் சந்தானம் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam sonலொள்ளு சபா, சகளை vs ரகளை ஆகிய டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம் அவர்களை ‘மன்மதன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிம்பு.

அதன்பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவானார் சந்தானம்.

ரஜினி முதல் வளரும் ஹீரோக்கள் வரை அனைவரது படங்களில் காமெடியனாக நடித்தார்.

தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், A1 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தற்போது ஜான்சன் கே இயக்கத்தில் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தானத்தின் மகன் நிபுன் திரையுலகில் அறிமுகமாகிறாராம்.

பிரபுதேவா ஹிந்தியில் இயக்க உள்ள ஒரு படத்தில் சந்தானத்தின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மகன் நடித்தார்.

அதுபோல் நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ள படத்தில் அருண் விஜய் மகன் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s son to make his debut soon

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஅரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது…்”லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி’ என கமல் போட்ட ட்வீட் குறித்து முதல்வரிடம் கேள்விகள் கேட்டனர் செய்தியாளர்கள்.

“’கமல் சினிமாவில் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார்.

கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை.

பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.

எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்காக பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா?

அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி.

எனவே கமல் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என கடுமையாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

CM Edappaadi Palanisamy slams Kamal Haasan

அனு சித்தாராவின் ‘அமீரா’..; நிரபராதியை தண்டித்தமைக்கு பிராயச்சித்தம் தேடும் போலீசாக சீமான்

அனு சித்தாராவின் ‘அமீரா’..; நிரபராதியை தண்டித்தமைக்கு பிராயச்சித்தம் தேடும் போலீசாக சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ameera filmதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’.

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் ரா.சுப்ரமணியன் இயக்கியுள்ளார்..

படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறும்போது…

“ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி, ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட தண்டனையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆனால் தண்டனைக்காலம் முடிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், ஏதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும், அவருக்கு தவறாக தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டோம் என்பதும் தெரிய வருகிறது.

இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக, அதற்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக, உண்மையான குற்றவாளி யார் என தேடி பத்து வருடம் கழித்து மீண்டும் பயணப்படுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதுதான் அமீராவின் கதை” என்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்..

பல சர்வதேச விருதுகளை குவித்த டூலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Anu Sithara and Seeman joins for Ameera

மீண்டும் இணையும் பிரசாந்த்-சிம்ரன் படத்தில் ‘கபாலி’ பட இசையமைப்பாளர்

மீண்டும் இணையும் பிரசாந்த்-சிம்ரன் படத்தில் ‘கபாலி’ பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh Narayanan‘தமிழ்’, ‘ஜோடி’ படங்களில் பிரசாந்த் & சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது மீண்டும் அந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான, அந்தாதூன் படம், தமிழில் இந்த ஜோடி ரீமேக்கில் இணைகிறது.

ஹிந்தியில், தபு நடித்த கேரக்டரில், சிம்ரன் நடிக்கிறார்.

இந்த படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் பேட்ரிக் இயக்குகிறார்.

இந்த நிலையில், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Santhosh Narayanan to score music for Andhadhun Tamil remake

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ‘ராங்கி’ த்ரிஷா

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ‘ராங்கி’ த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan Trisha‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் சரவணன்.

அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

சரவணன் தற்போது இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார்.

‘ராங்கி’ என்றால் தைரியமானவள்.

இப்பட கதை & வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார்.

இந்த படத்தை லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இப்பட சிங்கிள் டிராக்காக ‘பனித்துளி’ எனும் பாடல் வெளியானது.

இந்த பாடலுக்கு சத்யா இசையமைக்க சின்மயி பாடியுள்ளார்.

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு டிவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Trisha thanked Sivakarthikeyan for launched Raangi single

தமிழ் ஆர்வத்தால் ஐடி வேலையை விட்டு ஒலி புத்தகம் நிறுவிய இராகவிப்பிரியா!

தமிழ் ஆர்வத்தால் ஐடி வேலையை விட்டு ஒலி புத்தகம் நிறுவிய இராகவிப்பிரியா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghavi Priyaஐடி துறையில் வேலை பார்த்தவர் ப. இராகவிப்பிரியா. ஆனால் இவரை பொன்னியின் செல்வன் புதினம் கவர அதற்கு புதுவடிவம் கொடுக்க களமிறங்கி அதைச் செய்தும் முடித்திருக்கிறார்.

இராக கவிப்ரியா மேலும் கூறியதாவது,

இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 7.5 ஆண்டு காலம் பணி புரிந்த பின்னர் தமிழ் மீது உள்ள ஆர்வமிகுதியின் பேரில் பணியிலிருந்து விலகி கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்ற ஒலிப் புத்தகத்தை நிறுவினேன்.

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒலிப் புத்தகம் பாட்காஸ்ட்டு மற்றும் யூட்டியூப் அலைவரிசையில் கட்டணமின்றி வெகு ஜன மக்கள் அதிகம் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

அந்த ஒலிப் புத்தகங்களைக் கேட்ட வரையில் எதிர்பார்ப்பிற்கு மாறுதலாக கதையின் சாரத்தை ழுமையாக ருசிக்கும் வண்ணம் அமைந்திராத குறையை உணர்ந்தேன்.

2300 பக்கங்கள் உள்ள அமர காவியமான பொன்னியின் செல்வன் புதினத்திற்கு என்னால் இயன்ற நியாயம் சேர்பிக்க நான் விளைந்ததின் முயற்சி தான் கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) ஒலிப் புத்தகம்.

இதில் கடுகளவேனும் வெற்றி பெற்றதின் சாட்சியாக உலகளவில் உள்ள தமிழ் அன்பர்களின் வாழ்த்தொலிகள் மின் அஞ்சல், குறுஞ்செய்திகளின் மூலமாக என்க்கு உந்துதலாக என் கன்னி முயற்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

ஆழ்வார்கடியான், சுந்தர சோழர், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி ஒலி சேர்க்கையளித்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் புதினத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் தோழர் லாவண்யா ராமச்சந்திரன் மெட்டிசைத்து தன் இனிய குரல் வலத்தால் பாடி மேலும் மெருகூட்டியுள்ளார்.

16 வயது பள்ளி மாணவி முதற்கொண்டு ஐந்தாறு முறை பொன்னியின் செல்வன் கதையை படித்தறிந்த மெல்பர்னை சேர்ந்த 80 வயது தமிழ் மூதாட்டி தோட்டு K2kadhaikalam யின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகத்தின் வாயிலாக கதையின் உணர்வுகள் சுருங்காமல் கேட்டு மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற பாட்காஸ்ட்டு தரவரிசை பட்டியல் உருவாக்கும் அமைப்பான சார்டபல்ஸ் / Chartables K2kadhaikalam பாட்காஸ்டை இலங்கையில் முதல் தரம் மற்றும் இந்தியா மலேசியா சிங்கப்பூர் குவைத் பெஹ்ரேன் கத்தார் ஆகிய நாடுகளில் முதல் 50 இடங்களில் தரை வரிசை படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது..

Ponniyin Selvan Tamil Audio books K2 Kadhaikalam by Raghavi Priya

More Articles
Follows