தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித்.
அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் இவர்.
சில மாதங்களுக்கு முன்னர் பா.ம.க., கட்சியில் இணையவே அவருக்கு அந்த கட்சியின் மாநில கட்சியின் துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சற்றுமுன் பா.ம., கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஞ்சித்.
அவர் கூறுகையில்…
பாமக மாநில துணை தலைவர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.
அதிமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறிவிட்டு, இப்படி கூட்டணி வைக்கலாமா.? மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல.
கூட்டணி தொடர்பாக பாமக தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.
கூட்டணிக்காக 10 அம்ச கோரிக்கை என பா.ம.க., வைத்திருப்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. பாமக ஏமாற்றிவிட்டது. இக்கட்சியில் இணைந்ததற்கு வேதனைப்படுகிறேன்.” என கூறினார் ரஞ்சித்.
Actor Ranjith quits from PMK and slams ADMK alliance for election