இங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி

இங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

english padam

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார்.

எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.

எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தேன்.

அது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார்.

இது சம்பந்தமான ஆவணங்கள் காவல் நிலையத்தில் உள்ளது

‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்..

ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் தான் ‘இங்கிலிஷ் படம்’ போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன் தவறான நோக்கத்தில் காட்டவில்லை.

ஊடக நண்பர்கள் வெளியிட்ட செய்தியினை இங்கிலீஷ் படத்தின் இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு ” இங்கிலிஷ் படம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் அந்த இயக்குனர் குறித்து நான் புகார் அளித்ததாகவும் தவறாக செய்தியை அறிந்ததாக கேள்விப்பட்டேன்.

அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..

மற்றபடி ‘இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை.

இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன்.

நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் நான் புகார் அளித்த நகலையும் ஆதாரமாக அளித்துள்ளேன்.

Actor Aari statement about English Padam issue

english padam aari issue

 

செல்வராகவன் உதவியாளர் இயக்கும் ஸ்ட்ரீட் ஃபைட் கதை வாண்டு

செல்வராகவன் உதவியாளர் இயக்கும் ஸ்ட்ரீட் ஃபைட் கதை வாண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaandu movie stillsவாண்டு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குனரான வாசன் ஷாஜி இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

“வாண்டு” ( North Madras ) நார்த் மெட்ராஸ் – ல் 1970 -1971 நடந்த Street Fight – ல் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

இந்த கதையில் இரு கதாபாத்திரம் (1 ஹீரோ அப்பா முருகன்) (2 வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் ஹீரோ உடைய அப்பா “முருகன்” வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார்.

ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் “மஹா காந்தி” ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.

இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவான Kick boxing மாஸ்டருக்கு தெரியவருகிறது.

மாஸ்டர் ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்க பயிற்சி பெற்ற ஹீரோ, வில்லன் “மஹா காந்தி” பையனுடன் வட சென்னையில் பெரிய Street Fight நடக்கிறது.

இந்த சண்டையில் இருவருக்குள் ஏற்படும் விரோதத்தால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது கதை.

இப்படத்தில் தடையறதாக்க மற்றும் கொம்பன் “மஹா காந்தி”, மெட்ராஸ் புகழ் “ரமா”, தெறி fame “சாய் தீனா”, ரோமியோ ஜூலியட் “புவனேஸ்வரி”, 2.0 வில் நடித்துக்கொண்டிருக்கும் “ரவிசங்கர் “, வின்னர் பட தயாரிப்பாளர் “ராமசந்திரன் “, “முருகன்” இவர்களுடன் அறிமுக நாயகன் “சீனு”, “S.R.குணா” “ஆல்வின்” கதாநாயகியாக “ஷிகா” ஆகியோர் நடிக்கின்றனர்.

புதுமுக இசையமைப்பாளர் “A.R.நேசன்”, பாடல்கள் “மோகன் ராஜன்”, கலை “J.P.K.பிரேம்”, ஒளிப்பதிவு “ரமேஷ்” & “V.மஹேந்திரன்”, படத்தொகுப்பு “ப்ரியன்”, நடனம் “பாபி அன்டனி”, சண்டைப்பயிற்சி “ஓம் பிரகாஷ்”, கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் “வாசன் ஷாஜி “, M M power Cine Creation வழங்கும் “வாசன் ஷாஜி ” தயாரிக்கிறார், இணை தயாரிப்பு “டத்தோ N முனியாண்டி”.

Vaandu movie based on Street Fight

vaandu director

கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issueநேசம் புதுசு படத்தை இயக்கியவர் வேல்முருகன்.

இவர் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி சீரியலின் கதை தன்னுடையது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கதைக்கு 50 லட்சம் ரூபாயும், சீரியல் ஒளிப்பரப்பாகும் வரை தனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக சுந்தர் சி இவரிடம் கூறி கதையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்டு நண்பர் என்ற அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் தாம் கதையை சுந்தர் சியிடம் வழங்கியதாகவும், ஆனால், ஒப்புக் கொண்டபடி மாத சம்பளத்தை 4 மாதங்களுடன் நிறுத்திவிட்டு 50 லட்சம் ரூபாய் பணமும் தராமல் தம்மை சுந்தர் சி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் சுந்தர் சி மீது குற்றம்சாட்டியுள்ளார் வேல்முருகன்.

எனவே இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issue

கேளிக்கை வரியை நீக்காவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும்

கேளிக்கை வரியை நீக்காவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Entertainment tax is not withdrawn by TN Govt the theatres will be closed from Diwaliகடந்த ஜீலை 1ஆம் தேதி முதல் சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி (28%) விதிக்கப்பட்டது.

இவையில்லாமல் தமிழக அரசின் கேளிக்கை வரி 30% என அறிவிக்கப்பட்டது.

எனவே இதனை எதிர்த்து நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய அறிவிப்பு வரும் வரை, 30 சதவிகித கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை சார்பாக புதிய தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகித கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும் என அறிவித்தது.

மேலும் பழைய தமிழ் திரைப்படங்களுக்கு 7 சதவிகித கேளிக்கை வரியும், மற்ற மொழி பழைய படங்களுக்கு 14 சதவிகித கேளிக்கை வரியும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி விதித்த, இரட்டை வரி விதிப்பு முறைக்கு இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசன் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இயங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மதுரை ஸ்ரீபிரியா திரையரங்கில் தென் மாவட்டங்களின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு விதித்த 10 சதவீத கேளிக்கை வரியை திரும்பப் பெற வலியுறுத்தி 6 மாவட்ட திரையங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றின.

கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளன.

If Entertainment tax is not withdrawn by TN Govt the theatres will be closed from Diwali

காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajini shree dayaa foundationகுழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது.

சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீதயா பவுண்டேஷன் எதற்காக? அதன் நோக்கம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் லதா ரஜினி எடுத்துரைத்தார்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் Smt.லதா ரஜினிகாந்த் அவர்களுடன் Mr.பவுல் (Karunalaya), Mr.நிர்மல் Ms. மிர்னாலினி (Banyan), Ms. காதாம்பரி (Deepam Foundation), Ms. ராஜ மீனாக்ஷி (Child Welfare Officer), Mr. ஐசக் (ஆச்சி மசாலா), Ms. வசந்தி பாபு (Psyologist), Dr. யாமினி (Kaveri Hospital), Mr. அரவிந்த் (Environmentalist), Mr. நெடுஞ்செழியன் (Career Guidance). ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மதுவந்தி அருண் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த் அவர்கள்,

“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம்.

தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம்.

இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.

சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.

போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.

“குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும்.

பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார்.

“தற்போது ஸ்ரீதயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது.

ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.” என்றார் லதா ரஜினி.

Smt Latha Rajinikanths Care for Childrens

latha rajini welcome

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

itly posterஅப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திட்டமிட்டப்படி 29 நாட்களில் இத்ன் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன்.

வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை.

படத்தில் பாடல்கள், அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் இட்லி படத்தின் ஸ்பெஷல்.

இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது நாங்கள் துப்பாக்கி தூக்கி ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா ?? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?? என்று சந்தேகத்தோடு கேட்டார்.

நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போது அனைவருக்கும் மனநிறைவாக இருப்பதாக கூறினார்கள்.

அப்பு மூவீஸ் Abbas தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதன் டீசரை சற்றுமுன் நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

Karthi revealed Itly movie teaser

Itly team karthi

More Articles
Follows