உடல்நிலை சரியில்லை… விரைவில் சந்திக்கிறேன்… – ‘பிக்பாஸ் வின்னர்’ ஆரி

உடல்நிலை சரியில்லை… விரைவில் சந்திக்கிறேன்… – ‘பிக்பாஸ் வின்னர்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari (3)பிக்பாஸ் 4 சீசனில் வெற்றி பெற்றார் நடிகர் ஆரி.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வெற்றிக் கோப்பையுடன் ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என ஆரியும் நன்றி கூறினார்.

இந்த நிலையில் நடிகர் ஆரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…

“எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

விரைவில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி.

நேர்மைக்கு நீங்கள் கொடுத்த வெற்றி. நான் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

விரைவில் சோஷியல் மீடியா வாயிலாக சந்திக்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Aari says he will meet his fans soon

ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanசில மாதங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போதே அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பின்னர் அரசியல் கட்சிப் பணி, இந்தியன் 2 சூட்டிங், மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் கமல்.

இதன்பின்னர் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்.

இதன்படி காலில் நேற்று முன்தினம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் கமல்.

இந்த நிலையில் நாளை ஜனவரி 22ஆம் தேதி கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் சில நாட்கள் கமல்ஹாசன் ஓய்வெடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Kamal Haasan will be discharged tomorrow

ராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.?

ராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director shankarராஜமௌலி இயக்கிய சரித்திர படமான ‘பாகுபலி 1 & 2’ மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது அதே பாணியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

தற்போது முதன்முறையாக சரித்திர பட கதைக்கு தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் ஷங்கர்.

இதுவரை அனிமேசன் கிராபிக்ஸ் படங்களை மட்டுமே மிக பிரம்மாண்டமாக இயக்கியவர் ஷங்கர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இதன் சூட்டிங் 60% முடிவடைந்துவிட்டதாம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இப்படி சூட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

தன் புதிய சரித்திர படத்தில் 3 தென்னிந்திய ஹீரோக்களை இணைக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

Director Shankar’s next film details

சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthaஅனிமேஷன் படங்களை போல சரித்திர படங்களுக்கும் தற்போது மவுசு அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் ‘சகுந்தலை’ என்ற புராண கதையும் சினிமாவாக தயாராகி வருகிறது.

சகுந்தலை என்ற டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு ‘சகுந்தலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

Actress Samantha to romance a young hero in an epic movie

நடிகன் என்ற தன் அடையாளத்தை அசுர லெவலில் மாற்றிய தனுஷ்.; ரசிகர்கள் ஆனந்தம்

நடிகன் என்ற தன் அடையாளத்தை அசுர லெவலில் மாற்றிய தனுஷ்.; ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushதனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ்.

இத்துடன் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43வது படமாகும் என்பதால் தற்காலிகமாக D43 என்று அழைக்கின்றனர்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன் ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார்.

தன் படம் தொடர்பான தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் தருவதில் தனுஷ் முன்னோடி ஆவார்.

இதனால் 96 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை ட்விட்டரில் பாலோ செய்கின்றனர்.

இதுநாள் வரை தன் புரொபலை நடிகர் என வைத்திருந்த தனுஷ் தற்போது அசுரன்/நடிகர் என மாற்றியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார், தளபதி போன்று இதுநாள் வரை தனுஷுக்கும் எந்த பட்டமும் இல்லை.

இனி நடிப்பு அசுரன் என்ற பட்டம் சூட்டப்படலாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Dhanush gets new title card ?

10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sengottaiyanஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது…

“தமிழகத்தில் தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. 94% மாணவர்கள் வருகிறார்கள்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் (திங்கள் முதல் சனி) பள்ளிகள் நடைபெறும்.

பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெறும்.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்.? மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்ட போது ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Education Minister Sengottaiyan talks about school reopen for Primary students

More Articles
Follows