30 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் *காசுரன்*

30 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் *காசுரன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30 Friends united and produced Kaasuran Movie‘டமால் டுமீல்’ படத்தை இயக்கிய ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜே. இருவரும் இணைந்து காசுரன் படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீ நாயகனாகவும், அங்கனா ஆர்யா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

உமரா நிவாசன், லாரன்ஸாக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய கதை இது. பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்பதுதான் இந்தக் ‘காசுரன்’ படத்தின் கதைக் கரு.

கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஜெஸ்ஸியின் தந்தை லாரன்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, அவனைத் தன் செல்வாக்கை வைத்து பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார்.

சிவா மனமுடைகிறான். ஜெஸ்ஸியும் தன் அப்பாவை வெறுக்கத் துவங்குகிறாள். பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த சிவா உமர் என்கிற ரவுடியின் துணையில் லாரன்ஸிடம் இருந்து பணம் பறிக்க நினைக்கிறான்.

இதில் சிவா செய்த திட்டம்தான் என்ன.. உமர் சிவாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திருட என்ன செய்தான்.. ஜெஸ்ஸி இந்தத் திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள்.

சிவாவின் இத்திட்டம் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேரை பாதித்தது.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இத்திரைப்படம் 30 நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அவர்களால் தயாரிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்கம் – ஜித்தா மோகன், ஒளிப்பதிவு – இ.பராந்தகன், இசை – பிரணவ் கிரிதரன், படத் தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன், பாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ் பிரபாகர், சண்டை இயக்கம் – ஜி, நடனம் – லலிதா ஷோபி, கலை இயக்கம் – எஸ்.எஸ்.சுசீ தேவராஜ், மக்கள் தொடர்பு – நிகில்.

30 Friends united and produced Kaasuran Movie

மஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*

மஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vimal and Diana Champika starring The Broker‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை இயக்கிய இயக்குநர் மஜீத் அடுத்து இயக்கும் படம் ‘தி புரோக்கர்’.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக விமல் நடிக்கிறார். நாயகியாக டயானா சாம்பிகா நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் மஜீத், “இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை.

திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை.

நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும். நம்பி வாங்க; சந்தோஷமா போங்க..” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Vimal and Diana Champika starring The Broker

the broker tamil movie

Breaking அஜித்-இமான் கூட்டணியின் விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் தேதி

Breaking அஜித்-இமான் கூட்டணியின் விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Viswasam songs will be released on 16th December 2018100 படங்களுக்கு இசையமைத்துள்ள இமான் தன் 101வது படமான விஸ்வாசம் படத்தில்தான் அஜித்துடன் இணைந்துள்ளார்.

அஜித்தின் பேவரைட் டைரக்டர் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

அடுத்த வருடம் 2019ல் பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் 2 பாடல்களை அண்மையில் வெளியிட்டனர்.

அடிச்சு தூக்கு என்ற பாடலை அடுத்து வேட்டி கட்டு என்ற பாடலை நேற்று டிசம்பர் 15ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட்டனர்.

இதனையடுத்து இன்று டிசம்பர் 16ஆம் தேதி அனைத்து பாடல்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Ajith Viswasam songs will be released on 16th December 2018

புதிய இயக்குனர்களே எனக்கு பெரிய ஹிட் கொடுத்தனர்..: ஜெயம் ரவி

புதிய இயக்குனர்களே எனக்கு பெரிய ஹிட் கொடுத்தனர்..: ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New directors gave me lot of hit movies says Jayam Ravi at Adangamaru Press meetஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மிகவும் பிரமாண்டமான செலவில் தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைக்க, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.

கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “கடந்த ஆறு வருடங்களில், நான்கு படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குநர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர்.

ஒரு இயக்குநர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமைத் தன்மை கொண்டவர்..” என்றார்.

நடிகர் சம்பத்ராஜ் பேசும்போது, “இயக்குநர் கார்த்திக் எனக்கு கடந்த பத்து வருடங்களாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் பணி புரிந்தவர். இதிலேயே அவர் படம் எந்தளவுக்கு தரமானதாக இருக்கும் என்பது தெரிந்து கொள்ளலாம். ஜெயம் ரவி படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார்.

ஆனால், ஒரு வரி பேசினாலும் ஒட்டு மொத்தக் குழுவையே சிரிக்க வைப்பார். அந்தளவு நகைச்சுவை உணர்வு உடையவர். ‘அடங்க மறு’ படத்துடன் எத்தனை படம் ரிலீஸ் ஆனாலும், இந்த படம் தனித்து நிற்கும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார்.

நாயகி ராஷி கண்ணா பேசும்போது, “இந்த ‘அடங்க மறு’ தமிழில் என்னுடைய இரண்டாவது படம், என்னை தமிழ் சினிமாவில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய சொந்த கம்பெனி படத்தில் நடித்த மாதிரிதான் உணர்ந்தேன், அந்த அளவுக்கு என்னை பார்த்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்.

ஜெயம் ரவியின் குணம்தான் அனைத்து கதாநாயகிகளுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைய காரணம். இயக்குநர் கார்த்திக் கதையை சொன்னபோது, அவரின் சிந்தனையை நினைத்து வியந்து போனேன். பெண்கள் கதாபாத்திரங்களை மிக உயர்வாக வடிவமைத்திருக்கிறார்..” என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “ஒவ்வொரு படமுமே எனக்கு ஒரு வாய்ப்பு என்றுதான் நினைக்கிறேன். அந்த வகையில் இந்த படம் மிக முக்கியமான விஷயம். கார்த்திக் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷல். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இயக்குநர் என் மேல் வைத்த நம்பிக்கை அளப்பரியது. ஜெயம் ரவிக்கு சமூக அக்கறை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். என் இரண்டு வயது குழந்தை நாயகி ராஷி கண்ணாவை ‘பார்பி டால்’ என அழைக்க்கிறார். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த நாயகியாக இருக்கிறார் ராஷி…” என்றார்.

நடிகர் அழகம் பெருமாள் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒரு சில படங்களில் வேலை செய்யும் போதுதான் அந்த படம் ஜெயிக்கும், சிறந்த படமாக இருக்கும் என்ற உள்ளுணர்வு வரும்.

அப்படி ஒரு உணர்வு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயம் ரவி தொடர்ந்து நல்ல, குடும்பப் பாங்கான படத்தில் நடிக்க வேண்டும். உங்களிடம் எல்லோரும் அதை மிகவும் விரும்புகிறார்கள்…” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, “ஒரு இயக்குநர் நமக்கு சுதந்திரம் கொடுத்து வேலை பார்க்க விடும்போதுதான் புதுவித இசை கிடைக்கிறது. இயக்குநர் கார்த்திக் மிகவும் நல்ல மனிதர், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்.

இந்தப் படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கும். சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் படமாக இருக்கும். ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட்.

இந்த படத்தில் 4 பாடல்கள், அதில் ‘சாயாலி’ பாடல் முதல் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மிகவும் பாஸிடிவ்வான படம்…” என்றார்.

இயக்குநர் கார்த்திக் தங்கவேலு பேசும்போது, “நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பேயே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் இந்தக் கதையை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மேடத்திடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க. பிடிச்சா பண்ணலாம் என்றார்.

நான் முதலில் துணை இயக்குநராக என் பணியைத் துவக்கியது இதயத் திருடன் படத்தில் ஜெயம் ரவியியுடன்தான். கடைசியாக ஆதி பகவன் படத்தில் முடித்ததும் அவரிடம்தான்.

கடந்த மூன்று வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. நான் எழுதியிருந்த கதை ரொம்பவே ராவாக இருந்தது, அதன் பிறகு 40 காட்சிகளை மாற்றி எழுத வேண்டியிருந்தது.

ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர்.

நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியைவிட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போதுதான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.

விஜி சார் வசனம் படத்துக்கு மிகப் பெரிய பலம், இந்த படத்தோடு ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்லா ஓடணும்…” என்றார்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசும்போது…

“இந்தப் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமைசாலிகள், அனுபவசாலிகள். கார்த்திக் இந்த கதையை என்னிடம் சொன்னபோது நான் வியந்து போனேன்.

சீரியலில் பெண்களை மையப்படுத்திய கதைகளைத்தான் தேர்ந்தெடுப்போம். அந்த மாதிரி பெண்கள் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயம் ரவி மாதிரி நல்ல கருத்துக்களை படத்தில் சொல்ற நடிகர்கள் நடிச்சாத்தான் நல்லா இருக்கும் என முடிவெடுத்தோம்.

இந்த படம் பேசும் கருத்துக்கள் எல்லோரையும் சிறப்பாக சென்றடையும்…” என்றார்.

படத்தின் நாயகன் ஜெயம் ரவி பேசும்போது…

“ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்புதான் நாங்க பேசணும். ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள்தான் பேசணும். நாங்க பேசக் கூடாது.

எனக்கு மிகப் பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குநர்கள்தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்றுவரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார்.

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம். கேட்டதைவிடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர்.

ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர்தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங்.

‘எம்.குமரன்’ படத்துக்கு விஜிதான் வசனம் எழுதினார், மிகப் பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்குத்தான் எழுதியிருக்கிறார்.

நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பதுதான் இதன் சிறப்பு.

ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பவே பிடித்தது.

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் ‘அடங்க மறு’. வரும் 21-ம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போதுதான் தமிழ் சினிமா நல்லா இருக்கும்…” என்றார்.

இந்தச் சந்திப்பில் நடிகர்கள் கஜராஜ், மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், கலை இயக்குநர் இளையராஜா, வசனகர்த்தா விஜி, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

New directors gave me lot of hit movies says Jayam Ravi at Adangamaru Press meet

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்ட இசையராஜா-75 விழா

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்ட இசையராஜா-75 விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film Producer Council starts full swing preparations for fund raising event ISAIYARAJA 75இசைஞானி இளையராஜாவுக்கு இந்திய திரையுலகமே சேர்ந்து நடத்தும் பாராட்டு விழா ஒன்றை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5 முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ‘இசையராஜா-75’ என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசை விழாவை வெகு சிறப்பாக நடத்த உள்ளோம்.

மேற்படி விழாவானது, 2019 பிப்ரவரி மாதம் 2, மற்றும் 3-ம் தேதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் திரு.இளையராஜா அவர்களுடன் பணி புரிந்த இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

எனவே மேற்படி பிப்ரவரி 2, 3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்…”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Film Producer Council starts full swing preparations for fund raising event ISAIYARAJA 75

நீங்க எடுங்க நான் பாத்துக்குறேன்; கனா இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தந்த உறுதி

நீங்க எடுங்க நான் பாத்துக்குறேன்; கனா இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தந்த உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan gave confidence to Arunraja Kamaraj to direct Kanaaசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம்.

சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன்.

விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறார் என்றார் தயாரிப்பாளர் கலையரசு.

இந்த படத்தின் மீது எனக்கு ரொம்பவே காதல், இந்த படம் ரிலீஸுக்கு ரொம்ப நாளாகவே காத்திருக்கிறேன். ஒரு மகள் எந்த விஷயத்தை ஆசைப்பட்டாலும் அதை தந்தை எப்பாடு பட்டாவது செய்து கொடுப்பார்.

இந்த படம் எல்லோருக்கும் அந்த உணர்வை கொடுக்கும். ஐஸ்வர்யா ராய் போல ஐஸ்வர்யா ராஜேஷ் புகழ் பெற வேண்டும், அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார் என்றார் நடிகர் இளவரசு.

என் நண்பர்கள் அருண், சிவா, கலை ஆகியோருக்காக இந்த படத்தில் வேலை செய்திருக்கிறேன். விவசாயமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது நான் எப்படி இந்த படத்தை எடிட் செய்வது என்று கேட்டேன், ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் தெரியாமல் நாயகியாக நடிக்கிறார், வாங்க என அழைத்தார் அருண்ராஜா. சத்யராஜ் சார் கதாபாத்திரம் மாதிரி ஒரு தந்தை இருந்தால் எல்லோருடைய கனாவும் இன்னும் சீக்கிரமே நிறைவேறும் என்றார் எடிட்டர் ரூபன்.

சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. கனா ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால் சவுண்ட் டிபார்ட்மெண்டில் நிறைய வேலை பார்க்க வேண்டியிருந்தது.

நிறைய சவால்கள் இருந்தன, இசையமைப்பாளர் திபு ஸ்போர்ட்ஸ் படத்துக்கு ஏற்றவாறு மிகச்சிறந்த இசையை வழங்கியிருக்கிறார் என்றார் சவுண்ட் மிக்ஸர் சுரேன்.

என் சினிமா ஆசையை நிறைவேற்றியது சிவகார்த்திகேயன் அண்ணன் தான். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு நாள் திடீரென சிவா அண்ணா படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு, நான் நினைத்ததை விட நல்லா நடிச்சிருக்க என சொன்னார், அதுவே எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது என்றார் நடிகர் தர்ஷன்.

நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள்.

என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன்.

தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார் என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார்.

சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர். விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றி பெறும். இந்த படம் தங்கல் மாதிரி சீனாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் சத்யராஜ்.

சின்ன பட்ஜெட்டில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போய் தயாரிக்க முடிவு செய்தார். எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை.

நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள் தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை.

கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது.

கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம்.

சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார். வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும் தான் முக்கிய காரணம் என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

இந்த சந்திப்பில் நடிகர் முனீஷ்காந்த், சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Sivakarthikeyan gave confidence to Arunraja Kamaraj to direct Kanaa

More Articles
Follows