இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO teamலைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த நவம்பர் மாதம் 20-ந்தேதி வெளியிட உள்ளனர்.

இத்துடன் இப்படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில்…

‘‘இந்திய சினிமா எப்படி பட்டது என்பதை உலகுக்கு காட்டும் நேரம் நெருங்கி விட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று உலகுக்கு தெரிவிப்பார்கள். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.

வடிவேலுக்கு ’நெருப்புடா’ சாங்… அடுத்த ‘கபாலி’கான்..?

வடிவேலுக்கு ’நெருப்புடா’ சாங்… அடுத்த ‘கபாலி’கான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluவடிவேலுவின் காமெடியைப் போலவே படத்தில் அவர் ஏற்கும் கேரக்டர்களின் பெயர்களும் காமெடியாக இருக்கும்.

கைப்புள்ள, ஸ்னேக் பாபு, கபாலி கான், தீப்பொறி திருமுகம் ஆகிய பெயர்கள் பிரபலமானது.

தற்போது இந்த கபாலிகானுக்கு பலமாக நெருப்புடா பாடல் இன்ட்ரோ சாங்க் ஆக அமைந்துள்ளது.

ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் உலகளவில் பிரபலமானது.

தற்போது விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் வடிவேலு சிறையிலிருந்து விடுதலை ஆகும்போது இப்பாடல் இடம் பெறுகிறதாம்.

வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ (அக். 7ல் ரிலீஸ்) வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ளது.

அடுத்த வாரம் தீபாவளி வரும் வரை இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது வரை சென்னையில் மட்டும் ரூ. 6.45 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன் வெளியான மற்ற படங்கள் சென்னை வசூல் விவரம்…. (காட்சிகளின் விவரம்)

1. கபாலி – ரூ. 10,45,29,825 (காட்சிகள் – 209)
2. ஐ – 8,70,47,097 (காட்சிகள் – 201)
3.தெறி – 8,56,97,198 (காட்சிகள் – 269)
4. கத்தி – 6,69,89,724 (காட்சிகள் – 159)
5. ரெமோ – 6,45,69,289 (காட்சிகள் – 231)
6. வேதாளம் – 6,31,64,379 (காட்சிகள் – 181)
7. இருமுகன் – 5,61,56,219 (காட்சிகள் – 117)

‘மாஸ் ஹீரோ’ பட்டத்தை ஏற்றுக் கொண்டாரா சிவகார்த்திகேயன்..?

‘மாஸ் ஹீரோ’ பட்டத்தை ஏற்றுக் கொண்டாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan imagesரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்கெட் ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

அந்த அழைப்பிதழில் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது….

மக்களுக்கும் சினிமாவிற்கும் ஒரு பாலமாக சினிமா பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு படத்தின் குறை, நிறைகளை மக்களிடமும் எங்களிடமும் கொண்டு சேர்க்கின்றனர்.

அவர்களே என்னை மாஸ் ஹீரோ என்கின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் ரியல் மாஸ் ஹீரோக்கள் ரஜினி-அஜித்-விஜய்தான். அவர்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள்” என்றார்.

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய ‘அஸ்வின் தாத்தா’ சிம்பு

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய ‘அஸ்வின் தாத்தா’ சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str in AAAஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இதில் சிம்புவின் 2வது கேரக்டரான அஸ்வின் தாத்தாவுக்கு 60 வயது.

எனவே இவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவும் பாட்டியாக நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் இந்த கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதில் வயதான தோற்றத்தில் சிம்பு காரை தூக்கி பிடித்து கொண்டு நிற்கிறார்.

ஆனால் தமன்னாவோ மிக இளமையாக சிம்புவை கட்டிப்பிடித்தப்படி நிற்கிறார்.

எனவே, தமன்னா பற்றிய வதந்திக்கு இந்த பர்ஸ்ட் லுக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிம்பு.

அப்பா சிவகுமாரை பெருமிதப்படுத்தும் சூர்யா-கார்த்தி

அப்பா சிவகுமாரை பெருமிதப்படுத்தும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumar suriya karthiநடிகர்கள் சூர்யா-கார்த்தியின் தந்தை சிவக்குமார் அவர்களும் ஒரு நடிகர் என்பது நாம் அறிந்ததே.

மேலும் இவர் ஓர் அழகான ஓவியர் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தங்கள் தந்தையின் 75 ஆண்டுகள் ஓவியங்களை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியை நடத்த இருக்கின்றனர்.

இந்த நிகழ்வானது அக். 24-26 வரை சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் நடைபெறுகிறது.

இன்று தொடக்கவிழாவில் ஓவியர்கள் அல்போன்ஸ் தாஸ், மணியம் செல்வன், ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் நடிகர் கார்த்தி கலந்து கொள்ளவுள்ளார்.

நிறைவு விழா அன்று தனது தந்தை சிவகுமாருடன் சூர்யா கலந்து கொள்கிறார்.

More Articles
Follows