தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘வாத்தி’.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இந்த படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் வாத்தி / சார் பட டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தெலுங்கு ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கலந்து பேசினார்.
அவர் பேசியதாவது…
“இது என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படம். எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. எனவே தமிழில் பேசுகிறேன்.
வாத்தி பட கதை தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் நடக்கும் கதைக்களம்.
அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.
அதன் பின்னர் ரசிகர்கள் அவரை விஐபி பட டயலாக்கை பேச சொல்லி கூச்சலிட்டனர்.
நான் தமிழில் அந்த வசனத்தை பேசுகிறேன் என சொல்லி… “அமுல் பேபி.. நீ இந்த ரகுவரனை வில்லனாதானே பார்த்திருக்க.. இனிமே ஹீரோவா பார்ப்ப..” என்று பேசினார்.
Dhanush mass speech at Vaathi Sir Trailer Launch