தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
மனிதனின் மலக்குழியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்த தன் மகனுக்காக நீதி வேண்டி போராடும் தாயின் கதை தான் இந்த விட்னஸ்.
கதைக்களம்..
துப்புரவுப் பணியாளர் ரோகிணி. கணவனை இழந்த இவருக்கு ஒரே மகன். கஷ்டப்பட்டு தன் மகனை கல்லூரி வரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒருநாள் இவர் இரவு நேர பணிக்கு செல்கிறார். காலையில் வீட்டிற்கு வரும்போது தன் மகனின் மகனின் மரணச் செய்தியை கேட்டு அறிகிறார்.
ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும் போது குடிபோதையில்அவன் இறந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் தன் மகன் குடிக்க மாட்டான். அந்த வேலைக்கு செல்பவன் அல்ல எனக் கூறுகிறார் ரோகிணி. ஆனாலும் நிரூபிக்க முடியாமல் போராடுகிறார்.
இதனிடையில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தைரிய பெண்ணான ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிசிடிவி காட்சிகளை ரோகிணிக்கு கொடுக்கிறார்.
அதன் பின்னர் ரோகினி கம்யூனிஸ்ட் தோழர்கள் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார்.
நீதிமன்றத்தில் கீழ் சாதி பிரிவினருக்கு நீதி கிடைத்ததா? அல்லது அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு கைக்கூலியாக மாறியதா? காவல்துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் என்ன செய்தார்கள்? என்பதே நீதி(நீதியற்ற) கதை..
கேரக்டர்கள்…
ஏழை கீழ் ஜாதி பெண்மணியாக தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ரோகினி.. அதற்கு ஏற்ப உடல் மொழியும் வாய் மொழியும் பேசி அசத்தியிருக்கிறார்.
தன் மகனுக்கு நீதி கிடைக்க அவர் போராடும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பு…
அப்பார்ட்மெண்ட் வாசிகளை எதிர்த்து போராடும் பெண்மணியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நம்மிடம் பாராட்டுகளை பெறுகிறார்.
வக்கீலாக வரும் சண்முகராஜன் நீதிக்குப் போராடும் மனிதராக உயர்ந்து நிற்கிறார். காண்ட்ராக்டர் தன் உறவினரே என்றாலும் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.
நம் வீட்டு கக்கூசை சுத்தம் செய்ய நாமே தயங்கும்போது மனித கழிவுகளை அகற்றும் அந்த தொழிலாளர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டாமா என கேட்கும் காட்சிகள் சிறப்பு.
பொறுப்பைத் தட்டிக் கடிக்கும் உயர் அதிகாரியாக அழகம்பெருமாள். அரசு அதிகாரிக்கே உரிய அதிகாரம் தெனாவெட்டு நிதானம் அனைத்தையும் ஒருமித்த உணர்வோடு செய்திருக்கிறார்.
இவர்களுடன் அந்தச் சேரியில் போராடும் வினோத் சாகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் & கம்யூனிஸ்ட் தோழர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
மக்களுக்காக போராடும் ஒருவனுக்கு வீட்டில் கிடைக்கும் மரியாதையும் அவர்கள் குடும்பம் படும் அவஸ்தைகளையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
டெக்னீஷியன்கள்…
படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தீபக்.. இவரே ஒளிப்பதிவாளர் என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் கேமரா ஆங்கிள்களையும் வைத்து பலம் சேர்த்துள்ளார்.
முக்கியமாக படத்தின் கோர்ட் காட்சிகள் அசத்தல் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் மத்தியில் நீதியரசர் அமரும் போது நீதியின் நிலை குறித்து அந்த ஒற்றைக் காட்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பார்த்திபன் இறந்த பிறகு ஒலிக்கும் அந்த மரண பாட்டும் பேசும் வசனங்களும் இடைஞ்சலாக உள்ளது.. இசையை குறைத்து வசனங்களுக்கு கவனம் செலுத்தி இருக்கலாம்.. மற்றபடி உணர்வு மிக்க பாடல்களை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார்.
Producer – TG Vishwa Prasad
Co-Producer – Vivek Kuchibhotla
Screenplay – Muthuvel, JP Sanakya
பாடல்களை கபிலன் ராஜ் எழுதியிருக்கிறார். எடிட்டிங் செய்திருக்கிறார் பிலோமீன் ராஜ். இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பு.
மலக்குழியில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் ஒவ்வொன்றையும் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இதற்கு தீர்வே கிடையாது..
மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் உருவாகும்.. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே நம் எல்லோருடைய மனதிலும் எழும் பெரும் கேள்வியாகும்.
ஆக இந்த விட்னஸ்… மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்