JD vs KD டபுள் மாஸ்..; மாஸ்டர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கௌரி, அர்ஜுன் தாஸ், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, ஸ்ரீமன் மற்றும் பலர்.

இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

இசை – அனிருத்

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்

கதைக்களம்

போதை பழக்கத்துக்கு அடிமையானவர் பேராசிரியர் JD விஜய்…

பவானியாக வரும் விஜய்சேதுபதியோ ஒரு பக்கா KD.

இவர்கள் இருவரின் மோதல் தான் மாஸ்டர்.

கேரக்டர்கள்..

ஜே.டி. எனும் வாத்தியாக மாஸ் காட்டியிருக்கிறார் தளபதி விஜய்.

விஜய்யின் இன்ட்ரோ வேற லேவல்.. வெய்ட் பண்ண வச்சி வச்சி வெறி ஏத்தீட்டாங்க…

குட்டி ஸ்டோரி டான்ஸ் முதல் வாத்தி கம்மிங் வரை அசத்தல்.. ஸ்டைலிஷ் புரோபசர்..

பவானியாக விஜய்சேதுபதி. வில்லனாக மிரட்டல். விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதிக்கும் அனல் பறக்கும் காட்சிகள்.. பின்னணி இசையும் தெறி.

அர்ஜுன் தாஸ் கேரக்டரும் அசத்தல்.

மாளவிகா முதல் மகேந்திரன், சாந்தனு, கவுரி, தீனா, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், விஜே ரம்யா உள்ளிட்டோர் கச்சிதம். கதைக்கு பக்கபலமாக உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத் இசையில் பாடல்கள் இளைஞர்களின் பேவரைட்.

மாஸான பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்து. படத்தை ஒன்ற வைக்கிறது.

மெட்ரோ பைஃட் சீன் முதல்… விஜய் & விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு செல்லும்.

ரசிகர்களுக்கு எது புடிக்குமோ அதை படமாக்கி சுவையான பொங்கல் விருந்தளித்துள்ளார் டைரக்டர்.

வழக்கமான தன் பாணியில் மாஸான படம் கொடுத்துள்ளார் லோகேஷ்.

படம் முழுவதும் ஆக்சனே இருந்தால் பேமிஃலி ஆடியன்ஸை முழுவதும் கவராது.

கிட்டத்தட்ட படம் 3 மணி நேரம். நீளத்தை குறைத்திருக்கலாம்.. இன்டர்வெல் வரை கூட உட்கார முடியல.. பொறுமையை சோதிக்கிறது.

மாநகரம் & கைதி படத்தை அடுத்து ஹாட்ரிக் அடிப்பார் லோகேஷ் என நினைத்தோம்.. ஆனால் அதை ஜஸ்ட் மிஸ் செய்துள்ளார்.

ஆக மாஸ்டர்… JD vs KD டபுள் மாஸ்

Vijay Master Review Rating

filmistreet Review

காவலர்களை கவனி… காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, ஆர்ஜே முன்னா, சூப்பர்குட் சுப்ரமணி,
இயக்குனர்: ஆர்டிஎம்

கதைக்களம்..

நாயகன் சுரேஷ் ரவி.. நாயகி ரவீனா.. உணவை டோர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் சுரேஷ் ரவி.

இவர் காதலிக்கும் பெண் ரவீனாவை பெற்றோர் எதிர்ப்பு மீறி திருமணம் செய்கிறார். ரவீனாவும் வேலைக்கு செல்கிறார்.

ஒரு நாள் ரவீனா பணிமுடிந்து வரும்போது, வழிப்பறி கொள்ளையர்கள் அவரின் நகைகளை பறித்து விடுகின்றனர்.

இதனையடுத்து கணவரும் சம்பவ இடத்திற்கு வர. அங்கிருந்து கிளம்பும் போது வாகன சோதனையில் போலீசிடம் சிக்குகின்றனர்.

ஏற்கெனவே மன உளைச்சலில் இருக்கும் நாயகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைம் கோபியிடம் தவறாக பேசுகிறார்.

இதனால் கோபம் அடைந்த போலீஸ் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.

அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூசிக்க முடியும். ஆனால் அவற்றை காட்சிகளாக பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த படத்த நிச்சயம் பார்க்க வேண்டும்.

கேரக்டர்கள்…

நாயகன் சுரேஷ் ரவிக்கு இப்படம் தான் முதல்படம். டிவி நிகழ்ச்சிகளில் விஜே’வாக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? என்று அப்பாவியாகக் கேட்கிறார். அப்போதே நம் அனுதாபம் அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

அவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிறது. சில காட்சிகளை முக பாவனைகளை போதவில்லை என்றே தோன்றுகிறது.
இவர் அடிக்கடி போலீஸ் ஸ்டேசன் போகும்போதேல்லாம் நம் மனம் பதைக்கும்.

நடுத்தர குடும்பத்து பெண்ணாக பின்னி எடுத்துள்ளார் பிரவீணா. இவர் தான் பல நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

தன்னால் கணவனுக்குப் பிரச்னை என நினைப்பதும் ‘பாப்பா போயிடுச்சு’ என அழும்போது நம்மையும் அழ வைக்கிறார்.

எல்லாம் போலீஸ் ஸ்டேசனிலும் நிச்சயம் ஒரு நேர்மையான நல்ல போலீஸ் இருப்பார். அப்படியொரு போலீஸ் சூப்பட் குட் சுப்ரமணி. தனக்கும் அதிகாரம் இருந்தாலும் தன் இயலாமையை அப்பட்டமாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ வில்லன் எல்லாம்’மைம் கோபி’தான். தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.

சே… இப்படியொரு போலீசா? இல்ல இல்ல பொறுக்கி என நீங்களை ‘மைம் கோபி’யை பார்த்து திட்டூவீர்கள். அப்படியொரு மிரட்டலான நடிப்பு.

காவல்துறையினரை பகைத்தால் நாம் உயிரோடு வாழவே முடியாது என்பதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். விசாரணை படத்தின் 2ஆம் பாகம் என்று கூட இந்த படத்தைச் சொல்லலாம்.

படம் எடுக்கப்பட்ட விதத்திற்காகவே இயக்குனர் ‘ஆர் டி எம்’க்கு வாழ்த்துகள்.

கே எஸ் விஷ்ணுஸ்ரீ’யின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் கண்களுக்கு இனிப்பு.. காவல்துறை காட்சிகள் கண்களுக்கு காரம்.

ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசையில் பாடலும் பின்னனி இசையும் ரசிக்கலாம்.

நல்ல படத்தை எவர் எடுத்தாலும் ஒரு சில பிரபலங்களே அவர்களுக்கு ஆதரவு கரம் கொடுத்து அந்த படைப்பை பிரபலமாக்குகிறார்கள்.

இந்த படைப்புக்கு இயக்குனர் வெற்றிமாறன் & BOFTA தனஞ்செயன் தோள் கொடுத்து வெளியீட்டுக்கு உதவியுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்…

ஆக.. அப்பாவி மனிதனை அதிகார வர்க்கம் மிரட்டும்.. ஆகவே காவலர்களை கவனிக்கவும்..

Kavalthurai Ungal Nanban review rating

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மைக்கதை

இந்த படம் ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” என்ற நூலின் படைப்பாகும்.

நடிகர்கள் – சூர்யா, மோகன்பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர்.
இசை – ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு – நிகேஷ்
இயக்கம் – சுதா கொங்கரா
தயாரிப்பாளர் – சூர்யா

கதைக்களம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்கள் பூ ராமு (ஆசிரியர்)-ஊர்வசி தம்பதி. இவர்களின் மகன் சூர்யா.

அந்த பகுதியில் ரயில் வசதி இல்லாத நிலையில் அதற்காக போராடி குடும்பத்தினர் ரயிலை வர வைக்கின்றனர். இப்படி ஊருக்கான சேவைகளையும் செய்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா) படித்து விமானப்படையில் சேர்கிறார்.

தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவசரமாக ஊருக்கு வர நினைக்கிறார். விமானப்படையில் பணி புரிந்த போதும் அவரிடம் பணமில்லாத காரணத்தினால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

சரியான நேரத்திற்கு சென்று தந்தையை காணமுடியவில்லை.

எனவே ஒருகட்டத்தில் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டமிடுகிறார் மாறன்.
அனைத்து ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்.

சூர்யாவின் திட்டத்தை தெரிந்துக் கொண்ட மற்றொரு விமான நிறுவன தொழிலதிபர் பரேஷ் ராவல் பிரச்சினைகள் கொடுக்கிறார்.
இறுதியாக அந்த சூழ்ச்சிகளை நெடுமாறன் ராஜாங்கம் எப்படி வென்றார்? என்பதே கதை.

கேரக்டர்கள்

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளராகவும் சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் நடிகராகவும் ஜொலிக்கிறார் சூர்யா.

தொழிலபதிர்களாக வர துடிக்கும் வாலிபர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

விமான பயணம் செய்ய கையில் காசு இல்லாமல் கெஞ்சும் காட்சிகளாகட்டும் தந்தையை காண முடியாமல் தாய் காலில் விழும் காட்சிகளாகட்டும் அட..டா… என்னய்யா பின்னுறீயே… சூர்யா..

தன் ஊருக்கு ரயில் வரவேண்டி போராடும் 18 வயது இளைஞனாக வரும் காட்சியிலும் அருமை.

சூர்யா ஒரு பெரிய நடிகர்… இப்படி அடிக்கடி இவ்வளவு கெட்ட வார்தைகளை பேச வேண்டுமா? என்பதே கேள்வியாக உள்ளது. யதார்த்தம் என்றாலும் அதை மியூட் செய்திருக்கலாம்.

அபர்ணாவுடன் சூர்யாவுக்கு செம கெமிஸ்ட்ரி. இந்த ஜோடி இனி தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

அபர்ணா கர்ப்பம் என்பதை வேறுமாதிரியாக சொல்ல… ஏண்டீ நீ சாதாரண பெண் போல பேசவே மாட்டியா? என கேட்பதிலும் ரசிக்க வைக்கிறார்.

அபர்ணா.. ஆஹா.. ஓஹோ.. என்று சொல்லுமளவுக்கு சூப்பர் நாயகி. என்னதான் கணவர் விமான நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தாலும் தனக்கு ஒரு பிசினஸ் வேண்டும் என பொம்மி பேக்கரி ஆரம்பித்து அதை விளம்பரப்படுத்து காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

ஜடையை முன்னாடி போட்டு முதுகு அழகை காட்டி அபர்ணா பேசும் அந்த கிராமத்து பாஷையில் சிட்டி இளைஞர்களே சொக்கி போவார்கள்.

படம் முழுவதும் ப்ளைன் சாரி டிசைன் ஜாக்கெட் என அதிலும் ஒரு நேர்த்தியான அழகை காட்டியிருக்கிறார்.

மோகன் பாபு மற்றும் பூ ராமு மற்றும் ஊர்வசி ஆகியோர் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கத்தாமல் சண்டை போடாமல் மிரட்டாமல் அனைத்தையும் செய்கிறார் தொழிலதிபர் வில்லன் பரேஷ் ராவல். இவரின் பார்வையே செம கெத்து.

காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ், வினோதினி, ஞானசம்பந்தம், ஆர்எஸ். சிவாஜி, சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் கச்சிதம். கதைக்கேற்ற கதாபாத்திரங்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அசுரனுக்கு பிறகு தனது இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியிருக்கிறர் ஜி வி பிரகாஷ். படத்தின் ஆரம்ப காட்சி விமான தரையிரங்கும் அந்த காட்சியே நம்மை சீட் நுனிக்கு வரச் செய்யும். (வீட்டில் அமர்ந்திருந்தாலும் அதான்..)

இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் அருமை. பின்னியிருக்கிறார்.

நிகேத் அவர்களின் ஒளிப்பதிவு பிரம்மிக்க வைக்கிறது. எந்த காட்சியும் தேவையில்லை என சொல்ல தோன்றாது. எனவே எடிட்டர் சதீஷ் சூர்யாவுக்கும் சபாஷ் போடலாம்.

இறுதிச் சுற்றி படத்தில் நம்மை ஈர்த்த இயக்குனர் சுதா கொங்கரா இதிலும் அதை தக்க வைத்துள்ளார்.

என்னதான் படத்தை ஆன்லைனில் பார்த்தாலும் எதையும் பார்வேட் செய்ய தோன்றவில்லை. அப்படியொரு திரைக்கதை அமைத்துள்ளார் சுதா.

பொதுவாக உண்மை கதைகளை எடுக்கும்போது அது ஒரு டாக்குமெண்ட்ரி படங்கள் போல இருக்கும். ஆனால் இதில் தேவையான கமர்சியலை கலந்து அதை சுவையாக தந்திருக்கிறார் சுதா.

சில காட்சிகளை பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி கோடிகளில் புரளும் ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் இது நிஜக்கதையை தான் படமாக்கியிருக்கிறார்கள். எனவே அந்த சந்தேகம் வேண்டாம்.

இந்த படம் தியேட்டரில் வெளியானால் சூர்யா ரசிகர்கள் தீபாவளியை இன்னும் சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்.

தற்போது ஆன்லைனில் ரிலீஸ் செய்து அனைத்து தரப்பு மக்களையும் குடும்பத்துடன் போற்ற செய்துவிட்டார் தயாரிப்பாளர் சூர்யா.
ஆக.. சூப்பர் சூர்யா சுதா.. அபாரம் அபர்ணா என சொல்லாம்.

SOORARAI POTTRU FILMI STREET RATING 4.25/5

Soorarai Pottru Review rating

மனசை ரணமாக்கிய தமிழச்சி.. க/பெ ரணசிங்கம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இராமநாதபுரத்து மாவட்ட இளைஞராக ரணசிங்கம் (விஜய்சேதுபதி).

தண்ணீர் பிரச்சினை முதல் ஊர் பிரச்சனைகளுக்கெல்லாம் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். இதனால் (அலட்சியமான) அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்கிறார்.

நாயகி அரியநாச்சி (ஐஷ்வர்யா ராஜேஷ்) உடன் ஒரு பக்கம் காதல் செய்கிறர்.

என்னதான் ஊர் பிரச்சினைக்காக ரணசிங்கம் போராடினாலும் சுயநலமான மக்கள் ஒரு கட்டத்தில் ரணசிங்கத்தை விட்டு விலகிவிடுகின்றனர்.

தன்னுடன் யாரும் நிற்கவில்லையே என வருத்தப்படும் ரணசிங்கம் இனி இது வேலைக்கு ஆகாது என மனைவியின் பேச்சை கேட்டு துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.

ஆனால் அங்கு ஒரு கலவரத்தில் ரணசிங்கத்திற்கு பிரச்சினை.

இதனால் இந்தியாவில் கையில் குழந்தையுடன் கணவரை பார்க்க முடியாமல் போராடுகிறார். எத்தனை அரசு அதிகாரிகளை பார்த்தாலும் கணவரின் முகம் காணமுடியவில்லை. இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…
‘சீதக்காதி’ படத்தை போல சிறப்பு தோற்றத்தில் வருகிறார் விஜய்சேதுபதி. அதே சமயத்தில் தன் டிரேட் மார்க் நடிப்பை கொடுத்துள்ளார். முதல் பாதியில் ரணசிங்கம் என்றால் 2ஆம் பாதி அரியநாச்சி தான்.

கதையை தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டை, கனா படங்கள் வரிசையில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.

விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

படத்தின் மெயின் ஹீரோ ஐஷ்வர்யா ராஜேஷ் தான் என சொல்லிவிடலாம். கல்யாணம் முதல் கணவனை மீட்க போரட்டம் வரை சிக்ஸர் அடித்துள்ளார் அரியநாச்சி. இதுபோன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் ‘அரிய’வர்களே..

விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்துள்ளார். முதல் படத்திலேயே நல்ல நம்பிக்கையளித்துள்ளார்.

மாவட்ட கலெக்டராக ரங்கராஜ் பாண்டே வருகிறார். இவரின் 2வது படத்திலும் நல்ல ரோல் கிடைத்துள்ளது. அதையும் சரியாக செய்துள்ளார்.

பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா கலக்கியிருக்கிறார்.

மனிதர்களாக பூ ராமு, வேல ராமமூர்த்தி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா என ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டர்களில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி நம் கவனம் ஈர்க்கிறார் ஜிப்ரான். கதைக்கு ஏற்ற இசையை மண்வாசத்துடன் கலந்துக் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்… காட்சிகளை மீண்டும் பார்க்க மாட்டோமா? என ஏங்க வைத்துள்ளார். நேர்த்தியான படப்பிடிப்பு. வறண்ட நிலமாகட்டும் இரவு நேர கிராமத்து காட்சிகளாகட்டும் இரண்டையும் திறம்பட கொடுத்துள்ளார்.

எடிட்டர் தன் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது-

சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

இயக்குனர் விருமாண்டி.. தன் பெயருக்கு ஏற்ப தன் கதையிலும் காட்சியிலும் வசனத்திலும் கம்பீரத்தை கொடுத்துள்ளார்.

பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்த பெரிய கருப்பத் தேவரின் மகன்தான் இந்த இயக்குனர்.
தன் முதல் படத்திலேயே தமிழக தண்ணீர்ப் பிரச்சினையை துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.

தண்ணீர்ப் பஞ்சம் எப்படி ஏற்பட்டது? கருவேல மரங்களால் வரும் பிரச்சினைகள்… விவசாயிகள் நஷ்டம்.. வேளாண்மை செய்ய முடியாமல் போக என்ன காரணம்? என்பதையெல்லாம் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

கிராமத்து பக்கமே போகாத பலருக்கும் இது புது அனுபவத்தை கொடுக்கும்.

வசதியாக வாழ நினைத்தும் இந்தியாவில் பிழைக்க வழியில்லாமலும் தங்கள் பிள்ளைகளை, தங்கள் கணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பார்க்க வேண்டிய பாடம் இது.

ஆக… கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்படம்.. நிச்சயம் மனசை ரணமாக்கும்.

Ka Pae Ranasingam movie review rating

ஆழமான காதல்… ஒன்பது குழி சம்பத் விமர்சனம் – 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக்குட்டி, இந்திரன்
இயக்கம் – ஜா. ரகுபதி
இசை – வி.ஏ. சார்லி
ஒளிப்பதிவாளர் – கொளஞ்சிகுமார்
எடிட்டர் – தீனா
வெளியீடு.. ஆன்லைன்
தயாரிப்பு – 80-20 பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : ரஞ்சித் குமார் பாலு மற்றும் ஜிகே. திருநாவுக்கரசு

கதைக்களம்…

‘ஒன்பது குழி’ கோலி விளையாட்டில் கில்லி இப்பட நாயகன் பாலாஜி.

வேலை வெட்டிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி கொண்டிருக்கிறார். வீட்டில் அம்மா மட்டும்தான். ஆனால் அம்மாவிடம் பேசாமலேயே 14 வருடங்களை கடந்துவிடுகிறார்.

அதே ஊரில் வசிக்கும் கல்லூரி மாணவி நிகிலா விமல் (இவருக்கு இதுதான் முதல் படம்.. இதில் தான் அறிமுகம்)

நாயகி நிகிலாவை பாலாஜி காதலிக்க, வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறார். ஆனால் காதலை மறுத்து பாலாஜியை துடைப்பத்தால் அடித்துவிடுகிறார் நிகிலா.

இதனால் தற்கொலை செய்துக் கொள்ள துணிகிறார் பாலாஜி.

பின்னர் தன் தற்கொலையால் அவளுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் சம்பத் (பாலாஜி மகாராஜா). கிராமத்து இளைஞனுக்கு உரிய அதே கெத்து. வெட்டி பந்தா. ஊதாரித்தனமான முரட்டுக்காளையை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நிகிலா விமல். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கேற்ப தன் கேரக்டரின் வலியை உணர்ந்து நடித்திருக்கிறார். மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பாலாஜியின் நண்பனாக அப்புக்குட்டி. நிறைய காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பாலாஜி அம்மா, நாயகியின் பெற்றோர், நிகிலாவின் அண்ணா ஆகியேரின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. அச்சு அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வி.ஏ.சார்லியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சியில் நாயகன் பாடும் இழவு பாடல் தேவையற்றது. எடிட்டர் வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர்தான். கொளஞ்சிகுமார் கைவண்ணத்தில் காட்சி அத்தனையும் அழகு.

படத்தை இயக்கியிருப்பவர் ரகுபதி. வழக்கம்போல காதல் கதை என்றாலும் படத்தின் க்ளைமாக்சில் எதிர்பாராத ஒன்றை கொடுத்திருப்பது பாராட்டு.

இதுபோல காதல் கதைகளில் க்ளைமாக்ஸ் நெகட்டிவ்வாக இருப்பது ஏனோ? ஆனால் அதுவே ரசிகர்கள் மனதை ரணமாக்குகிறது. வாழ்த்துக்கள் சார்.

ஆக மொத்தம்… ஒன்பது குழி சம்பத் – ஆழமான காதல்

நில்… டேனி… செல்…; டேனி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தஞ்சாவூர் மாவட்ட ஒரு கிராமத்தில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்படுகிறார்.

சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை வைத்து அவளது கணவர்தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்கிறார் சப் இன்ஸ்பெக்டர் துரை சுதாகர்.

அப்போது தான் அங்கு இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார் வரலட்சுமி.

இந்த வழக்கில் அவளது கணவர் கொலையாளி இல்லை என கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

அப்படி என்றால் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக? ஏன்? என போலீஸ் நாய் டேனியுடன் இணைந்து கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

குற்றவாளியை டேனி எப்படி காட்டி கொடுத்தது.? கொலைக்கான காரணம் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

காவலர்களுக்கே உரித்தான கம்பீரம்… அத்துடன் கண்களில் திமிர் என கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.

இவரின் அறிமுக காட்சி கொஞ்சம் எதிர்பாராத ஒன்றுதான். விவசாய நிலத்தில் வேலை செய்கிறார். அதையும் ஒரு துப்பறியும் காட்சியில் (கார் டயர் பற்றிய கணிப்பு) வைத்துள்ள இயக்குனரை பாராட்டலாம்.

என்ன ஒன்று…. வரலட்சுமிக்கு காதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரேடியாக சீரியஸ் சப்ஜெட்ட்டாக இருக்கிறது. மேலும் வரலட்சுமி பாஸ்ட்டாக பேசுவதால் சில டயலாக்குகள் சரியாக டெலிவரியாகவில்லை.

களவாணி 2 படத்தில் வில்லனாக கலக்கியவர் துரை சுதாகர். இதில் வரலட்சுமிக்கு அடுத்தப்படியாக யாருப்பா இந்தாளு? என கேட்க வைக்கிறார்.

இவர் கொலைக்கான விசாரணை செய்யும்போது நிஜ போலீசை காட்டுகிறது. அதாவது கேசை முடித்தால் போதும் என இவர் காட்டும் ஆர்வம் சில போலி போலீஸை காட்டுகிறது.

அதுபோல் யோவ்.. போயா வாயா என மக்களை திட்டும்போது அப்படி பிரதிபலிக்கிறார். ஒரு வேளை இவர் காவல்துறையில் கறுப்பு ஆடு ஆக இருப்பாரோ? எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நாயின் டிரைனர் ஆக கவின் நடித்துள்ளார். கொடுத்த வேலைக்கு பொருத்தம்.

டிவியில் கலக்கி கொண்டிருக்கும் அனிதா சம்பத் அவர்கள் வரலட்சுமியின் தங்கையாக நடித்துள்ளார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்றுதான். அழகில் கவர்ந்தாலும் முகத்தில் ஓவர் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.

வில்லனாக வினோத் கிஷன். போதை அடிமைக்கு ஏற்ற முகம். அதே சமயத்தில் மிரட்டலான பார்வை என நம்மை கவர்கிறார்.
நல்ல நடிகர் வேல ராமமூர்த்தி. ஆனால் அவரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சொன்னீங்க.. நாய் டேனியை பத்தி சொல்லையே கேட்குறீங்களா..?

நாய்க்கு ஓவர் பில்டப் கொடுத்துள்ளனர். அது குரைக்கும்போது எச்சில் தெறிப்பது வரை காட்டியுள்ளனர். அந்தளவுக்கு ஒளிப்பதிவு உள்ளது. ஆனால் பில்டப் அளவுக்கு இன்வஸ்டிகேஷன் அந்தளவுக்கு இல்லை.

கதையின் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். பாடல் காமெடி என கொடுத்து பட சோர்வை தவிர்த்திருக்கலாம்.

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாய் பாஸ்கரின் பின்னனி இசை பலவீனம்.

நல்லவேளை படத்தை ஒன்றரை நேரத்தில் முடித்துவிட்டார் எடிட்டர். அதனால் தப்பித்து விட்டோம் என்று சொல்லி கொள்ளலாம்.

எல்.சி. சந்தானமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோயின்.. நாய்.. வில்லன் என கேரக்டர்களில் கவனம் செலுத்தியவர் த்ரில்லர் கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம். யூகிக்க முடிகிறது என்பதால் சுவராஸ்யம் போதவில்லை.

ஆனால் பிள்ளைகளுக்கு அடிக்கடி பணம் கொடுத்து ஓவர் செல்லம் கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறிச் செல்லும் என்பதையும் தீயவர்களின் நட்பு அவர்களை கெடுத்துவிடும் என்பதை அழகாக காட்டியுள்ள இயக்குனரை பாராட்டலாம்.

ஆக… நில்…. டேனி… செல்… அதுதான் இந்த டேனி

Danny movie review

More Articles
Follows