தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர், வினோத் சாகர் & மற்றும் பலர்.
இயக்குனர் : தனபாலன் கோவிந்தராஜ்
லைட்ஸ் ஆன் மீடியா – EAV சுரேஷ், சுந்தர கிருஷ்ணா .P, வெங்கி சந்திரசேகர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ரெஞ்சித்.
கதைக்களம்…
திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் நாயகன் நிஷாந்த். எனவே காவல் நிலைய குற்றவாளி பட்டியலில் இவருக்கு இடமுண்டு.
ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இளைஞர் ஒருவர் கொலையாகி கிடக்கிறார்.
அப்போது போலீஸ் கோடங்கி வடிவேலுடன் வழிகாட்ட செல்கிறார். அச்சமயத்தில் பிணத்தின் கையோடு, நிஷாந்தின் கையையும் சேர்த்து விலங்கு போட்டுவிட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறார் போலீஸ்.
அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர நிஷாந்த் எடுக்கிறார்.. என் கணவரை காப்பாற்றினால் உனக்கு 10 லட்ச ரூபாய் தருகிறேன் என்கிறார். அந்நேரம் கொலையாகி கிடக்கும் விவேக் பிரசன்னாவுக்கு திடீரென நினைவு வருகிறது.
எனவே விவேக் பிரசன்னாவுடன் நிஷாந்த் அந்த கை விலங்குடன் காட்டுக்குள் ஓடுகின்றனர். எனவே கொலைக்கார கம்பல் இருவரையும் துரத்துகிறது.
இறுதியில் என்ன ஆனது.? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
நாயகன் நிஷாந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. பயம் பதட்டம் துணிச்சல் என அனைத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
பன்றிக்கு நன்றி சொல்லி என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.
வழக்கம்போல விவேக் பிரசன்னா.. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.
ஆனால் சாகும் தருவாயில் இருந்த இவர் எந்த சிகிச்சையும் இல்லாமல் சாதாரண நிலைக்கு வந்தது எப்படி என்பதற்கான காட்சிகள் விளக்கமும் இல்லை.. அதுபோல விவேக் பிரசன்னாவிற்கு நெருக்கமான ஒருவர் இவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அதற்கும் ஆணித்தரமான காரணங்கள் சொல்லப்படவில்லை.
கோடாங்கி வடிவேலு ஓகே அவ்வளவுதான். நாயகியாக நடித்த காயத்ரி ஐயர் கச்சிதம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வினோத் சாகர்.. கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
டெக்னீஷியன்கள்…
அஸ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்டுக்குள் இவரின் கேமரா விளையாடி இருக்கிறது. ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டியிருக்கிறார்.
ரெஞ்சித்தின் பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்துடன் பயணிக்கிறது.
முக்கியமாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ்.
ஆக பருந்தாகுது ஊர் குருவி.. காட்டுக்குள் கண்ணாமூச்சி
Parundhaguthu Oor Kuruvi movie review and rating in Tamil