பவர் கட் லவ்… பச்சை விளக்கு விமர்சனம் 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பொதுவாக போலீஸ் படம் என்றால் சிவில் அண்ட் லா போலீஸ் பற்றித்தான் படம் இருக்கும். ஆனால் இதில் போக்குவரத்து போலீசார் பற்றி பாடம் எடுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக அதற்கான படிப்பை தன் நிஜ வாழ்க்கையில் படித்து அதை படமாக்கி இருக்கிறார் டாக்டர் மாறன்.

போக்குவரத்து விதிகள் பட்டயப்படிப்பு படித்திருக்கும் மாறன், டிராபிக் வார்டன் இருக்கிறார். இந்த வார்த்தையே பலருக்கு புதியாகதாக இருக்கும்.

இவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலின் போது போலீஸ் துறைக்கு உதவுகிறார்.

அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷா கண்டிக்கிறார். எனவே மாறனை பழி வாங்க நினைக்கிறார்.

மோதலில் உருவான இவர்களின் சாலை சந்திப்பு பின்பு காதல் சந்திப்பாக மாறுகிறது.

இந்த கட்டத்தில் தன் தங்கை தாராவுக்கு ஒரு பிரச்சினை என திடீரென ஊருக்கு கிளம்புகிறார் தீஷா.

அங்கு தன் தங்கை ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் சிக்கிய விவரம் இவருக்கு தெரிய வருகிறது.

தன் காதலியை தேடி வரும் மாறனுக்கு இந்த விவரம் தெரிய வருகிறது.

அதன் பின்னர் மாறன் என்ன செய்தார்? தீஷா எப்படி திருமணம் செய்தார்? தாராவை எந்த வழியில் காப்பாற்றினார்? அந்த கும்பலின் நோக்கம் என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

விதி மீறிய பயணமும் விதி மீறிய காதலும் ஊர் போய் சேராது என்ற கருத்தை மையப்படுத்தி இந்த பச்சை விளக்கி இயக்கி நடித்துள்ளார் மாறன்.

போக்குவரத்து விதிகள் பற்றி ஒரு விரிவான பாடமே எடுத்துள்ளார். மேலும் ஒரு பாடலையும் அதற்கேற்ப கொடுத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இத்தனை செய்ய நினைத்து நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். கொஞ்சமாவது நடிப்பு பயிற்சி செய்திருக்கலாம்.

பாடம் எடுப்பதை போலவே நடித்துள்ளார். பேச்சிலும் சரி முகபாவனையிலும் சரி நம்மால் படத்தை ரசிக்க முடியவில்லை.

போக்குவரத்து விதிகள், டிராபிக் வார்டன் மற்றும் MSM என்ற புது விதிமுறைகளை சொன்னதற்காக மாறனை பாராட்டலாம்.

காதலியை காணவில்லை என்ற காட்சியில் இவர் அழுகிறார். ஆனால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

முதல் பாதியில் இவரை வைத்தை கதையை நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியில் தாராவின் காதலை சொல்லி மற்றொரு ஹீரோவை நடிக்க வைத்துள்ளார்.

இளம் பெண்களை லவ் டார்கெட் செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றி சொல்லியுள்ளார். அதில் போஸ்டர் நந்த குமார் அப்பாவாக நடித்துள்ளார். இதுபோன்ற கும்பலை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

ஆனால் ஏதோ ஒரு நாடகத்தை இயக்கியது போல படத்தை கொண்டு சென்றுள்ளார்.

டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி அறிவுரை போலீசாக மாறிவிடுகிறார். ஒரே ஆறுதல் இவர் லஞ்சம் வாங்கவில்லை. நல்ல போலீசாக நடித்துள்ளார்.

தீஷா மற்றும் தாரா 2 நாயகிகள் உள்ளனர். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக தர முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்களில் கருத்து உள்ளது. ஆனால் காட்சியும் இசையும் ரசிக்கும்படி இல்லை.

பாலாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே.

இயக்குனரே ஹீரோவாக நடித்துள்ளார். எதையாவது ஒன்றை செய்திருக்கலாம். நடித்தும் இயக்கியும் நம்மை வெறுப்பேத்திவிட்டுள்ளார்.
ஆக இந்த பச்சை விளக்கு.. பவர் கட் லவ்

Pachai Vilakku Movie review rating

திசை மாறிய காதல்… தொட்டு விடும் தூரம் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அப்பா இல்லாத பையன் ஹீரோ விவேக்ராஜ். இவரின் அம்மா சீதா.

நல்ல வேலைக்கு முயற்சித்து செய்துக் கொண்டிருக்கிறார். கிடைக்கம் நேரங்களில் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அப்போது இவரின் ஊருக்கு ஒரு என்எஸ்எஸ் முகாம் குழு வருகிறது. லிவிஸ்டன் தலைமையில் மாணவி மோனிகாவும் வருகிறார்.

சில தினங்களில் விவேக்கும் மோனிகாவும் காதலிக்க தொடங்குகின்றனர்.

பின்னர் என்எஸ்எஸ் கேம்ப் முடிந்து சென்னை செல்லும் நாயகி சில பிரச்சினையால் தன் செல்போனை தொலைத்து விடுகிறார்.

அதுபோல் தன் நண்பன் உதவியுடன் சென்னை செல்லும் ஹீரோ தன் செல்போன் மற்றும் பேக்கை பறி கொடுக்கிறார். இதனால் நாயகியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.

நாயகி தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் இவர்களால் சந்திக் முடியவில்லை.

சந்திக்க வாய்ப்பும் கிடைத்தும் இவர்களின் காதலை அறிந்த ஒருவன் தடுத்து விடுகிறான். அவன் யார்? ஏன் தடுத்தார்? காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ஜஸ்ட் ஒரு கிராமத்து பையனாக வருகிறார் விவேக் ராஜ். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளார்.

தோழர் வெங்கடேசன், ஜீவி உள்ளிட்ட படங்களில் நடித்த மோனிகா தான் இதில் நாயகி. நல்ல குடும்ப பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் சேலையில் கவர்ச்சி காட்டி நம்மை மோசம் செய்து விட்டார் இந்த மோனிகா.

அன்பான அமைதியான அம்மாவாக சீதா நடிப்பு சிறப்பு.

மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் படத்தில் இருந்தும் ஊறுகாய் அளவு கூட காமெடியில்லை. படத்தை ஓட்ட உதவியிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

ராம் குமாரின் ஒளிப்பதிவில் காதலர்களின் டூயட் பாடல் செம ஹாட் மச்சி. மோனிகாவின் மேனியில் தன் கேமரா கண்களை வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர்.

அடடா… இவ்வளவு கிட்ட வந்த காதலர்கள் சேரமாட்டார்களா? என ரசிகனை தவிக்க விட்டுள்ளார் இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன்.

கிளைமாக்ஸ் முடிவு ஒரு சோகமான முடிவை கொடுத்தாலும் யாரும் எதிர்பாராத ஒன்று. அதில் சொல்லப்பட்ட கருத்தை நிச்சயம் பாராட்டலாம்.

செல்போன் பேசி கொண்டே பைக் ஓட்டினால் என்ன ஆகும்? என்பதையும் நாசூக்காக சொல்லியுள்ளார்.

அதன்பின்னர் உடல் உறுப்பு தானம் உள்ளிட்டவைகளை சொன்ன விதம் அருமை.

திசை மாறிய காதல்…. “தொட்டு விடும் தூரம்”

Thottu Vidum Thooram review rating

A1 விசாரணை… V1 Murder Case விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

’மெட்ராஸ்’, ‘வட சென்னை’, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து நம்மை கவனிக்க வைத்தவர் பாவெல் நவகீதன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்துள்ளார்.

‘V1’ என்ற ஒரு வீட்டில் லிஜேஷும், காயத்ரியும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்கள்.

இவர்களுக்குள் காலையிலேயே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அதன்பின்னர் வேலைக்கு செல்கிறார் காயத்ரி.

இரவு காயத்ரி லேட்டாக வர மர்ம நபர் ஒருவர் இவரை கொல்கிறார். அந்த சமயத்தில் மழை பெய்வதால் குற்றவாளியின் தடயங்கள் அழிகிறது.

இதனை விசாரிக்க தடயவியல் (FORENSIC) துறை போலீஸ் அதிகாரியான ராம் அருண் கேஸ்ட்ரோ வருகிறார்.

எந்த தடயமும் கிடைக்காமல் இருக்கவே இந்த கொலையை மறைக்க முயல்கிறது போலீஸ்.

ஆனால் இவரோ எப்படியாவது கண்டு பிடித்தே தீருவேன் என தன் துறை தோழி லுனாவுடன் களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் கொலையாளியை எப்படி கண்டு பிடித்தார்.? கொலையாளி யார்? அவர் கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மட்டும் இல்லாமல் க்ளைமாக்ஸில் , சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக முடித்துள்ளார் இயக்குநர் பாவெல் நவகீதன். முதலில் அவரை பாராட்டிவிட்டு மற்றதை பார்ப்போம்.

இது போலீஸ் துறை என்றாலும் தடயவியல் துறை என்பதால் கலர் சட்டைகளில் வருகிறார் ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ. அவரின் கேரக்டரை மிக அசால்லட்டாக செய்துள்ளார்.

நாயகி விஷ்னுபிரியா பிள்ளையை பாராட்டியே ஆக வேண்டும். அழகு கம்பீரம் என வெளுத்து கட்டியிருக்கிறார். இவரின் அழகான கண்களை பார்த்தால் குற்றவாளியே சரணடைந்துவிடுவார்.

காயத்ரியின் காதலனாக வரும் லிஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். சமீபத்தில் கூட குண்டு படத்தில் இவரின் போலீஸ் கேரக்டர் அருமையாக இருந்தது.

ஓரிரு காட்சியில் வந்தாலும் காயத்ரி செம. இவரை ஒரு தலையாக காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் பெற்றோர் என அனைவரும் நல்ல தேர்வு.

புள்ளிங்கோ ஸ்டைலில் வரும் லிங்காவின் நடிப்பு சிரிப்பை வர வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரோனி ரெபேலின் பின்னணி இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு சரியாக பொருந்தியுள்ளது.

அதுபோல் சி.எஸ்.பிரேம்குமாரின் எடிட்டிங் பணிகள் கச்சிதம்.

படத்தின் முதல் காட்சியிலேயே கொலை… அதனை அடுத்து நிறைய திருப்பங்கள்… யார் கொலையாளி? இவரா? அவரா? என நம்மை திகைக்க வைத்துள்ளார்.

யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரைக்கதையை கொடுத்து இறுதியில் இட இவரா? என திடீர் ட்விஸ்ட் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார்.

கொலையாளி இவர் தான் என ஒரு சின்ன க்ளு கொடுத்துள்ளார். அதை சிலர் கவனித்திருந்தால் அவர் புத்திசாலி என்று பொருள்.

சில நேரங்களில் மெதுவாக நகரும் காட்சிகள் நம்மை சோதிக்கிறது. இத்தனைக்கும் படம் நீளம் 2 மணி நேரம் கூட இல்லை என்பபது குறிப்பிடத்தக்கது.

ஆக.. இந்த வி1 படம் ஏ1 வரிசையில் சேரும்.

V1 Murder Case review rating

POSITIVE PATH… பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பஞ்சராக்‌ஷரம் என்றால் நமசிவாய என்று பொருள். எனவே சிவனை சுற்றி ஒரு கதைக்களத்தை அமைத்துள்ளார் டைரக்டர்.

அதாவது நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகிய இயற்கையின் 5 வகையானவைகளை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பாலாஜி வைரமுத்து.

சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகிய 5 பேர் ஒரு பார்ட்டியில் சந்திக்கின்றனர். அதுவரை இவர்களுக்கு யாரையும் தெரியாது.

இவர்கள் ஐவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள்.

அன்று தொடங்கும் நட்பை கொண்டாட எங்கேயாவது சுற்றுலா செல்லலாம் என தீர்மானித்து செல்கின்றனர்.

ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கும்போது இவர்களுக்கு பஞ்சராக்‌ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சில வாசங்களை தனித்தனியாக படிக்கின்றனர்.

அதன்பின் அவர்கள் வாழ்வில் அதுவே பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இறுதியாக ஐந்து பேரும் சேர்ந்து அதை எப்படி சமாளித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கலாம்.

நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக நடித்துள்ளார்.

சனா அல்டாப் (நீர்) மனிதநேயமிக்க பெண்ணாக நடித்துள்ளார். இவர் பாசிட்டிவ்வாக நினைக்கிறார். ஆனால் இவர்தான் படத்தில் அதிக பிரச்சினைகளை சந்திக்கிறார்.

சாலையில் சென்றால் விபத்து வரும் என நினைக்காமல் நம் பயணத்தை தொடங்க வேண்டும். அதை விட்டு விபத்து நடந்துடுமோ என்று பயணித்தால் அது நடக்கும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் டைரக்டர்.

சுந்தர மூர்த்தியின் இசை ஓகே. யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம்.

திரில்லிங்கான உணர்வை கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர். ஆனால் அதற்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

படத்தின் ஆரம்ப கட்டத்தில் இதிகாச கதைகளை சொல்கிறார்கள். அதன் பின்னர் நவீன காலத்தில் கதையை சொல்லியிருக்கிறார்.

இதிகாச கதையை இதில் கொஞ்சம் காட்டியிருந்தால் அதற்கான உயிரோட்டம் கிடைத்திருக்கும்.

பாசிட்டிவ் எண்ணங்களே நம்மை நன்றாக வாழவைக்கும் என சொல்லியிருந்தாலும் அனைவருக்குமே அவர்களின் எண்ணங்கள் படி நெகட்டிவ்வாகவே நடக்கிறது.

மனிதநேய மிக்க அந்த ஒரு கேரக்டருக்காவது பாசிட்டிவ் பாதையை காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில் ‘பஞ்சராக்‌ஷரம்’ பாசிட்டிவ் பாதை

Pancharaaksharam review

சந்திப்பும் சங்கடமும்… நான் அவளை சந்தித்த போது விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

1990களில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அதற்கேற்ப கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எல்ஜி. ரவிச்சந்திரன்.

சென்னையில் சினிமா துறையில் உதவி இயக்குநராக பணி புரிகிறார் ஹீரோ சந்தோஷ். அப்போது சென்னைக்கு வரும் சாந்தினி தன் உறவினர் முகவரியை தவறவிட்டதால் அங்கு தவிக்கிறார்.

அவர் மீது இரக்கப்படும் சந்தோஷ் அவருக்கு உதவிட நினைத்து அவரை அவளது கிராமத்திற்கே சென்று விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

ஆனால் அங்கு சென்ற பின் இவர்களை தவறாக புரிந்துக் கொண்ட ஊர் பஞ்சாயத்து இவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறது.

இதனால் இருவரின் வாழ்க்கையும் மாறுகிறது. உன்னோடு வாழ முடியாது என ஊரை விட்டு ஓடி விடுகிறார் சந்தோஷ்.

அதன்பின்னர் சாந்தினியின் வாழ்க்கை என்ன ஆனது? சந்தோஷ் என்ன செய்தார்? மனைவியை தேடி மீண்டும் வந்தாரா? இயக்குநர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

உதவி இயக்குநர்கள் படும் கஷ்டங்களை காட்சிகளாக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஹீரோ சந்தோஷிடம் அதற்கேற்ப முக பாவனைகள் இல்லை.

தனக்கு திருமணமானதை குடும்பத்திற்கு சொல்லாமல் தவிக்கும் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு நடித்திருக்கலாம். ஆனால் இல்லை.

கிராமத்து பாவப்பட்ட பெண்ணாக சாந்தினி சபாஷ். பெற்றொர் ஆதரவும் இல்லை கணவரின் கைவிடப்பட்ட நேரத்தில் அவர் தவிக்கும் காட்சிகள் யதார்த்தம்.

சில காட்சிகளில் வந்தாலும் எல்லார் கேரக்டரையும் அடித்து செல்கிறார் மலையாள நடிகர் இன்னசண்ட். ஆபாச படம் எடுக்கும் தயாரிப்பாளராக இவர் செய்யும் சேட்டைகள் செம. ஆக இந்த சேட்டனின் சேட்டைகளை ரசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.

இவரின் மனைவி, மகள் காட்சிகள் செயற்கையாக உள்ளது. அந்த நாடகத்தனத்தை தவிர்த்திருக்கலாம்.

பருத்திவீரன் சுஜாதா, ஜி.எம்.குமார், சந்தோஷின் நண்பர்களாக நடித்திருக்கும் கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர்,எஸ்,செல்வாவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஹித்தேஷ் முருகவேலின் இசையில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

படத்தின் மொத்த கதையுமே 1990களில் நடப்பதாக உள்ளது. அப்படி என்றால் அதற்குகேற்ப பின்னணிகளை அமைத்திருக்க வேண்டும். பாட்ஷா பட சூட்டிங்கை பத்தி பேசுகிறார்கள். ஆனால் அங்கே 1996 காலண்டர் உள்ளது.

அதுபோல் விஜய் பட போஸ்டரை காட்டும்போது திருமலை பட போஸ்டரை காட்டுகிறார்கள். இதுபோல் விஷயங்களை சரியாக செய்திருக்கலாம்.

படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அம்மாவின் ஆசையை மகன் நிறைவேற்ற படும் கஷ்டங்களும் அந்த தியேட்டர் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது.

Naan Avalai Sandhitha Pothu review

First on Net நச்சுன்னு நாலு காதல்.. சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

இந்த படத்தை 4 விதமாக காதல் கதையாக பிரிந்து தந்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன்னர் 2 காதல்.. இடைவேளைக்கு பின்னர் 2 காதல்..

15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…

முதல் அத்தியாயம் பிங்க் பேக்’

2வது அத்தியாயம் ‘காக்கா கடி’

3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’

4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’

முதல் கதையில்…

குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.

தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.

2வது கதையில்…

வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.

3வது கதையில்…

திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும்…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த ஒருவருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.

4வது கதையில்…

வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..

வசனங்கள் அருமை…

நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது தான். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். குப்பை கிடங்கு காதலில் சின்ன சின்ன பசங்களின் டயலாக்குகள் சூப்பர்.

கார் காதலில்…. கட்டி இருக்குறவனுக்கு எப்படி கட்டு கொடுப்பாங்க…

உங்களை சைட் அடித்தவர்கள் கொடுத்த உங்க காதல் பரிசுகளை உங்க புருசனுக்கு கிட்ட காட்டுங்க.. நீங்க எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பது அவருக்கு தெரியட்டும்.. என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்கள் அள்ளும்.

30 வருச தாம்பத்தியத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம எதையும் வீசி எறிய மாட்டோம். ஆனால் இப்போ அப்படியில்லை…
இருட்டுல இன்பம.. வெளிச்சத்துல வெறுமை… இப்படி பல வசனங்கள் உள்ளன.

இந்த கேரக்டர்களில் நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

நாலு காதல் நாலு பாட்டு வைக்காமல் ஒரு பாட்டை வைத்த இயக்குனரை பாராட்டலாம்.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவர் என நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அத்தனையும் அழகு.

இயக்குநர் ஹலிதாவே எடிட்டிங் செய்துள்ளதால் காட்சிகள் அழகு.

இவ்வாறாக 4 தனி கதைகளை படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவை நான்கிலும் அன்பை மையப்படுத்தி எடுத்துள்ளார்.

இதில் வேறு விதமான ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Sillukaruppatti review rating

More Articles
Follows