தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’.
இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் ஆவார்.
நாயகியாக சுபபிரியா நடிக்க இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைக்களம்…
நாயகன் புகழ் போலீஸ் அதிகாரியாக நினைத்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி சுபபிரியா ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்து அதற்காக படித்துக் கொண்டிருக்கிறார்.
நாயகி மேல் ஜாதியை சேர்ந்தவர் நாயகன் கீழ் ஜாதியை சேர்ந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர்.
இவர்கள் அடிக்கடி சந்திப்பதால் இவர்கள் காதலிப்பதாக நினைத்து மேல் ஜாதியினர் காதலை எதிர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் இதனால் வெறுத்துப் போகும் நாயகி நாம் இருவரும் காதலித்தால் என்ன.?
நாம் கலப்புத் திருமணம் செய்தால் சாதி பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும் என சொல்கிறார். ஆனால் நாயகன் மறுக்கிறார். இதனால் என் குடும்பத்திற்கு பிரச்சினை வரும்.. நான் போலீஸ் அதிகாரி ஆக முடியாது என்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க முடிவு எடுக்கின்றனர். மேல் சாதியினர் இவர்களை என்ன செய்தனர்.?
இந்த நிலையில் சாதியால் பிரிந்து கிடக்கும் ஊர் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார் போலீஸ் சீமான். இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
நாயகன் புகழ் ஒரு அப்பாவி இளைஞனாக வருகிறார். அவர் போலீஸ் ஆன பிறகு கம்பீரமாக காணப்படுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் அனைவரையும் நடிப்பில் ஓவர் டேக் செய்துள்ளார் நாயகி சுபபிரியா. காதலுக்காக மேல் சாதியை எதிர்க்க இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அப்ளாசை அள்ளுகிறது.
நாயகியின் அப்பா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.. அதுபோல காதலை கொல்லத் துடிக்கும் சாதி வெறியர்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றனர்.. அப்படி ஒரு நடிப்பை அவர்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால் அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதால் எப்படா முடியும்? என்பது போல் இருக்கிறது.
சீமான் போலீஸ் அதிகாரியாக வந்து அவர் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பு.. மேல் சாதியினர் சுவாசிக்கும் காற்றை கீழ் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? கீழ் சாதியநேர சுவாசிக்கும் காற்றை மேல் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? அப்போது சாதி கலக்கவில்லையா? என்று அவர் பேசும் வசனங்கள் சூப்பர்.
அது போல நாயகி பேசும் வசனமும் சூப்பர்.. நாம் காதல் திருமணம் செய்தால் நம்மை அவர்கள் கொல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் அடுத்த தலைமுறை நமக்காக யோசிக்கும்.. அதற்கு அடுத்த தலைமுறை சாதியை எதிர்த்து போராடும்.. அதற்கு அடுத்த தலைமுறை கண்டிப்பாக சாதியை வெல்லும் காதலாக வளர்ந்து நிற்கும்.. என சொல்லும் வசனங்கள் மனதை கவர்கின்றன.
டெக்னீஷியன்கள்…
பல வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்த மு.களஞ்சியம் சாதிக்காக ஒரு படம் எடுத்துள்ளார்.. இன்னும் இந்த படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.
ஆனால் சாதி சாதி சாதி என படம் முழுவதும் சாடியுள்ளதால் எரிச்சலை உண்டாக்குகிறது. இப்படி எல்லாம் மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்களா.?
எந்நேரமும் வேலைக்கே போகாமல் காதலர்களை துரத்திக் கொண்டே இருப்பார்களா.? என்ற போன்ற கேள்விகள் எழுகின்றன.
சாதிக்காக கொலைகள் செய்யும் அவர்களை போலீஸ் ஒன்றுமே செய்யாதா.? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.
ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், இசை – ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், பாடல்கள் – கவிபாஸ்கர், கலை – மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.
ஆக முந்திரிக்காடு.. சாதிக்கு சாவு வராதா.?
Munthirikkaadu movie review and rating in tamil