தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஸ்டோரி…
ரஜினி ஒரு முஸ்லிம்.. இவரது மனைவி நிரோஷா.. இவர்களின் மகன் விக்ராந்த்.
லிவிங்ஸ்டன் மாணிக்கம் ஒரு ஹிந்து.. இவரின் மனைவி ஜீவிதா இவர்களின் மகன் விஷ்ணு விஷால்.
இவர்களின் இரு குடும்பமும் நட்புடன் பழகுகின்றனர்.. சிறுவயதில் ஒரு பிரச்சனையால் ரஜினியை வெறுக்கிறார் விஷ்ணு விஷால்… ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறார் ரஜினிகாந்த்.
இந்த சூழ்நிலையில் கிராமத்தில் இருக்கும் விஷ்ணு விஷால் கிரிக்கெட் அணியுடன் மோத மும்பையில் இருந்து கிராமத்திற்கு வருகிறார் விக்ராந்த்..
இந்த கிரிக்கெட் போட்டியில் இருவருக்கும் பிரச்சனை எழவே விக்ராந்தின் கையை முறித்து விடுகிறார் விஷ்ணு.
இதன் பின்னர் என்ன ஆனது? ரஜினி என்ன செய்தார்.? கிரிக்கெட் போட்டி நடைபெற்றதா? கிரிக்கெட்டிற்காக மும்பையில் இருந்து கிராமத்திற்கு வர என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்ஸ்…
சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் ரஜினிகாந்த் இருப்பதே ஒரு சிறப்பு தான்.. அவரது கேரக்டர் தான் படத்தை ஆணிவேராக இருக்கிறது. ஆக்சன் எமோஷன் என இரண்டையும் சரிசமமாக கொடுத்திருக்கிறார். முக்கியமாக மகனுக்காக கண்கலங்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர். அதிலும் நாயகன் விஷ்ணு நாயகி அணந்திகா இருவரும்கும் நல்ல கெமிஸ்ட்ரி..
இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
டெக்னீசியன்..
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ஜலாலி என்ற பாடல் முஸ்லிம் மதத்திற்கு கொண்டாட்டமாக இருக்கும்.. அதே போல தேர் திருவிழா என்ற பாடல் நிச்சயம் இந்து மதத்தினருக்கு கொண்டாட்ட பாடலாக அமையும்..
பின்னணி இசையும் அசத்தியிருக்கிறார் ரஹ்மான்… ரஜினிகாந்தின் அறிமுகம் பாடல் ஜலாலி பாடல் ரசிக்க வைக்கிறது..
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ராமலிங்கத்தை பாராட்டலாம்.. 1993 காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக கலை இயக்குனரையும் கை குலுக்கி பாராட்டி ஆக வேண்டும்.. ஆனால் எடிட்டர் தான் கொஞ்சம் திரைக்கதையை குழப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம்..
ஆறு மாதத்திற்கு பின்பு என காட்சிகளை காட்டி விட்டு பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு என வைத்து அதில் ஒரு பிளாஷ் பேக் என குழப்பி இருக்கிறார்.
ரஜினி என்ற மாபெரும் சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்து மட்டுமல்லாமல் அவருக்கான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த வன்முறை காட்சிகளாக வைத்து ரஜினியின் அட்வைஸ் காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து.
மதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த படம் சவுக்கடி கொடுக்கும்.. ரஜினியை சங்கி என்று அழைக்கும் சில நபர்களுக்கு நெத்தியடியாக மொய்தீன் பாய் என்ற கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.
முக்கியமாக முஸ்லீம் சந்தனககூடு இந்து மதத்தின் தேராக மாறும் காட்சி வேற லெவல்..
ஆக கிரிக்கெட்டில் அரசியல் கூடாது.. மதத்திலும் அரசியல் கூடாது.. எந்த மதமாக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான்.. கடவுளை மனிதன்தான் படைத்தான் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்..
Lal Salaam movie review and rating in tamil