தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
தன் குடும்பத்தைக் கூட கவனிக்காது கட்சிக்காக உழைக்கும் ஒரு உண்மையான தொண்டன்… ஊழல் செய்து உண்மையான தொண்டனை கூட விரட்டியடிக்கும் தலைவன். இவர்களுக்கு நடைபெறும் மோதலே கதை.
கதைக்களம்…
கட்சி கட்சி கட்சி அதுதான் என் உயிர் மூச்சு என்று வாழ்கிறார் கதாநாயகன்.. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது கூட இன்ன ஜாதி என்ன மதம் என்று கேட்காமல் அவர் போடும் ஒரே கண்டிஷன் தன் கட்சியில் தன் மனைவி இணைய வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு விசுவாச தொண்டனாக இருக்கிறார் விஜித் சரவணன்.
தன் தலைவன் தான் எல்லாமே.. அவரால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறார்.
ஆனால் கட்சித் தலைவனோ தன்னுடைய சுயலாபத்திற்காக மறைமுக அனைத்தையும் செய்கிறார். கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது என அனைத்தையும் தொண்டன் செய்கிறார். பணம் இல்லாத போது தன் மனைவி தாலி வீட்டை கூட அடமானம் வைக்கிறார் தொண்டர்
ஒரு கட்டத்தில் தனக்கு கவுன்சிலர் போஸ்டிங் கேட்கும்போது தான் தன் தலைவரின் உண்மை முகம் தெரிய வருகிறது.
இதனால் வெறுத்துப் போகும் தொண்டன் தான் செலவு செய்த பணத்தை எல்லாம் திருப்பி கேட்கிறார்.
ஒரு அரசியல்வாதியிடம் கொடுக்கப்பட்ட பணம் எப்படி கிடைக்கும் என மிரட்டுகிறான் தலைவன்.. என்னை போல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீ பணத்தை திருப்பி கொடுத்து ஆக வேண்டும் என மல்லுக்கட்டி நிற்கிறார் நாயகன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
கேரக்டர்கள்…
நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன். தொண்டன் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார்.. கட்சிக்காக அனைத்தையும் இழந்து நிற்கும் போது நமக்கு அவர் மீது பரிதாபம் வருகிறது.
ஒரு கட்டத்தில் தேர்தலில் நிற்க ரெடியாகும் போது.. எதிர்க்கட்சி வேட்பாளரிடம் அவர் பேசும் ஒரு டயலாக் பாராட்டுக்குரியது. நீங்களும் ஓட்டுக்கு பணம் கொடுக்காதீங்க.. நானும் பணம் கொடுக்க மாட்டேன்.. நாம ரெண்டு பேரும் பணம் கொடுக்கலைன்னாலும் மக்கள் கண்டிப்பா வந்து ஓட்டு போடுவாங்க.
நீங்க நல்லவன்னு நினைச்சா உங்களுக்கு ஓட்டு போடட்டும். நான் நல்லவன் என்று நினைச்சா எனக்கு ஓட்டு போடட்டும்.” என்ற வசனம் பேசும் அந்த காட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் செருப்படி.
அவரது மனைவி அஞ்சலியாக ஸ்வேதா டாரதி. நடுத்தர மக்கள் குடும்ப போராட்டத்தை காட்டுயிருகிறார். கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி.
மக்கள் கட்சித் தலைவராக சிவ சேனாதிபதி.. முதலில் நல்லவன் போல் நடித்து கட்சி தொண்டனையும் ரசிகரையும் ஏமாற்றி வைக்கிறார். பின்னர் தான் அவரது சுயரூபம் தெரிய வரும்போது ஆஹா இவன் பக்கா அரசியல்வாதி என்ற எண்ணம் வருகிறது.
அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவரது பிளாஷ்பேக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாயகனின் நண்பனாக வரும் தெனாலிக்கு சிறப்பான வேடம்.. எவன்னய்யா.. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சான்? ஒருத்தர் கணக்கு காட்டலைன்னு கட்சி ஆரம்பிச்சாரு.. ஒருத்தரு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்க கட்சி ஆரம்பிச்சாரு. ஒருத்தர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர்றாரு.. ஒருத்தர் ஜாதிக்காக கட்சி ஆரம்பிக்கிறார்.. இப்படி எல்லாருமே தங்களுடைய சுயலாபத்துக்காக தான் ஆரம்பிச்சாங்க என இவர் பேசும் வசனங்கள் சிறப்பு
இதில் சின்ன சின்ன நடிகர்கள் நடித்திருப்பதால் பெரிதாக கவனம் பெறவில்லை எனலாம்.. இதையே பெரிய நட்சத்திரங்கள் நடித்து இந்த வசனங்கள் பேசி இருந்தால் படத்தின் வெற்றி மாஸ் காட்டி இருக்கும்.
டெக்னீஷியன்கள்…
எத்தனை அரசியல் படங்கள் வந்திருந்தாலும் கட்சித் தலைவன் பற்றிய கேரக்டர் தான் பெரிதாக பேசப்படும்.. ஆனால் இந்த படத்தில் ஒரு தொண்டனின் வலி காட்டப்படுகிறது.. அதை மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் இந்த படத்தை பார்க்கும் தொண்டர்கள் திருந்தினால் தலைவனும் திருந்துவான் இந்த நாடும் உருப்படும்.
இரண்டு பாடல் காட்சிகள் ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற டூயட் பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வருகிறது.
இன்னொரு பாடல் ‘கட்சிக்காரன் கட்சிக்காரன் ‘ என்ற பாடல் இவன் கேள்வி கேட்கும் கட்சிக்காரன் என கூறுகிறது.
சில காட்சிகள் நாடகத்தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. முக்கியமாக கட்சிக் கூட்டம்.. மேடை அமைப்பு என காட்டப்படும் காட்சிகள் சின்ன பட்ஜெட் படம் என்பதை உறுதி செய்கிறது.
காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.
ஆக.. கட்சிக்காரன்… தலைவனை தகர்க்கும் தொண்டன்
இப்படத்தில் விஜித் சரவணன் ,ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி, சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப.ஐயப்பன் இயக்கியுள்ளார். சரவணன் செல்வராஜ் தயாரித்துள்ளார்.இணை தயாரிப்பு மலர்க்கொடி முருகன்.. மதன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரோஷன் ஜோசப், சி.எம். மகேந்திரா இசை அமைத்துள்ளனர்.