தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
வாடகை வீட்டில் வசிக்கிறார் உதயநிதி. அந்த வீட்டின் ஓனர் மகள் ஆத்மிகாவை காதலிக்க பிரச்சனை வருகிறது.. உடனே வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஓனர்.
இதனால் அவசரத்திற்காக வேறு வழியில்லாமல் புரோக்கர் மூலமாக பிரசன்னா வீட்டில் தங்குகிறார். ஒருநாள் இவர்கள் தண்ணி அடித்து விட்டு வரும்போது காரை ஓட்டி வரும் பூமிகாவிற்கு உதவ செல்கிறார் உதயநிதி.
அதன் பின்னர் மர்மமான முறையில் இறக்கிறார் பூமிகா. இந்த கொலையை மறைக்க உதயநிதியும் பிரசன்னாவும் பயணிக்கும் பாதையில் அடுத்தடுத்து ஓரிரு கொலைகள் நடக்கின்றன.
போலீஸிடம் இருந்து தப்பிக்கவும் தங்களை நிரபராதி என் நிரூபிக்கவும் இவர்கள் போடும் திட்டங்கள்தான் இந்த படத்தின் கதை.
கேரக்டர்கள்…
படத்தின் நாயகன் என்னவோ உதயநிதி தான்.. ஆனால் தன் கேரக்டரில் அதிகம் பிரகாசிப்பவர் பிரசன்னா.. படத்தின் ஆரம்ப முதல் இறுதி காட்சி வரை பயணம் செய்கிறார்.. பயம் பதட்டம்.. மிரட்டல் என அனைத்தையும் திறம்பட செய்துள்ளார்.
நாயகன் உதயநிதி.. பயம்.. பதட்டம்.. நடுக்கம்.. ரொமான்ஸ்.. என அனைத்திலும் ஒரே முக பாவனை தான்.. என்ன நினைத்து நடித்தாரோ அல்லது இது போதும் என நினைத்தாரோ.?!
ஆத்மிகா மற்றும் சுபிக்ஷா நடித்துள்ளனர். ஆத்மிகா நாயகி என்பதால் ஒரு பாடலைக் கொடுத்து சில காட்சிகளையும் கொடுத்துள்ளனர்..
இவர்களது கேரக்டர் கதைக்கு உதவினாலும் ஓரிரு காட்சிகளிலேயே இவர்கள் வந்து செல்கிறார்கள்
ரோஜாக்கூட்டம் படத்தில் நாம் பார்த்த ஸ்ரீகாந்த் – பூமிகா இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் ஜோடி இல்லை என்றாலும் கதையில் திருப்புமுனையை கொண்டு வருகிறார்கள்.
வசுந்தரா மாரிமுத்து இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.. வசுந்தராவின் கேரக்டரில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது சிறப்பு.
சதீஷ் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். பிறகு காணாமல் போய்விடுகிறார். காமெடிக்காக வந்தாரோ.? கால்ஷீட் இருக்கு என கொடுத்தாரோ தெரியவில்லை..
ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, சென்ராயன், ஆதிரா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்ளோதான்.
டெக்னீஷியன்கள்…
படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது. கொலைகாரன் யார்.? கொலை நடந்தது எப்படி.? என்ற எதிர்பார்ப்புகளுடன் படத்தை ரசிக்க முடிகிறது.
ஒரு கட்டத்தில் அந்த த்ரில்லர் முடிச்சி அவிழும்போது அட இவ்வளவுதானா.? என எண்ணமே தோன்றுகிறது.
அதிலும் பூமிகா – ஸ்ரீகாந்த் பிளாஷ் பேக் காட்சிகள் பெரிதாக கவனம் பெவில்லை வழக்கம்போல நாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே உள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. விறுவிறுப்பாக ஒரு திரில்லர் கதையை கொடுக்கு முயற்சித்துள்ளார்.
சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இதனால் படத்துடன் நாம் ஒன்ற முடிகிறது.
ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்..: முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டப்படும் வகையில் உள்ளது.
இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்து இருக்கலாம். லாஜிக் மீறல்கள் உள்ளன.
ஆக இந்த கண்ணை நம்பாதே.. த்ரில்லர்..
Kannai nambathe movie review and rating in tamil