தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, பரத் சீனி, ராதிகா பிரசிதா, ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய் மில்டன்
இசை : எஸ்.என்.அருணகிரி, அனூப் சீலின்
ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா.
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா – ஜான்சன்
தயாரிப்பு : பாரத் சீனியின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’
கதைக்களம்…
இந்த சமுதாயத்தில் மற்றவர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட நாம் நம்மை எப்படி பார்க்கிறோம்? என்பது இதன் ஒன்லைன்.
தரங்கம்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்க்கு உதவியாளராக இருப்பவர் ராஜகுமாரன்.
ராஜகுமாரனுக்கு ஜோடி ராதிகா பிரஷித்தா.
தரங்கம்பாடி ஊரின் கவுன்சிலர் பரத் ஒரு பாக்ஸர். இவருக்கு ஜோடி சுபிக்ஷா.
ஒருமுறை இவர்களின் ஊருக்கு மினிஸ்டர் வரும்போது ஒரு பள்ளி மாணவியை மானப்பங்கம் செய்ய முயற்சிக்கிறார்.
இதனையறிந்த பரத், ராஜகுமாரன், ராதிகா பிரசித்தா, வெங்கடேஷ் என்ன செய்தார்கள்?
அந்த சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதை உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார் விஜய்மில்டன்.
கதாபாத்திரங்கள்…
இதுவரை ஏற்காத கேரக்டரில் பரத். ஒரு அநியாயம் நடந்தால், எல்லா ஹீரோக்கள் என்ன செய்வார்களோ? அதற்கு எதிராக செய்து, அவரின் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.
பாக்ஸர் கேரக்டருக்கு செம பிட்டாக பொருந்தி இருக்கிறார் பரத்.
காதல் காட்சிகளிலும், ஊர் மக்களை அனுசரித்து செல்லும் காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
இதுநாள் வரை இயக்குனராக கவர்ந்த ராஜகுமாரன் இதில் நடிகராக ஜொலிக்கிறார்.
சிறுமிக்காக உருதுவதும், புலி ஆட்டம் ஆடுவதும், பேஸ்புக்கில் லவ் செய்வதும் என பல காட்சிகளில் கைதட்டல்களை அள்ளி செல்கிறார்.
க்ளைமாக்ஸ் பைட் துள்ளல் என்றால், அவர் பேசும் வசனங்கள் மனதை கிள்ளும்.
சுபிக்ஷாவுக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும், அழகாக வந்து போகிறார்.
ராதிகா பிரஷித்தா இயல்பான பெண்ணாக வந்து மனதில் நிறைகிறார்.
அனிருத் பெயரில் வரும் பரத் சீனி சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். அதுபோல் சக்தி, தயா வெங்கட். போலீஸ் ஏட்டு உள்ளிட்டவர்களும் நிறைவான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் விஜய்மில்டன் என்பதால் தனக்கான காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறார்.
பொதுவாக தரங்கம்பாடி பகுதி சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் இவரின் கேமரா கண்களில் தரங்கம்பாடி கடற்கரை தங்கமாய் மின்னுகிறது.
மதன்கார்க்கி வரிகளில், அருணகிரி இசையில் உருவான நிலவெது கரையெது பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும்.
இயக்குனர் பற்றிய அலசல்…
நாம் சாலையில் செல்லும்போது ஆடம்பரமாக செல்பவரை காண்போம். அதுபோல் மிகவும் எளிமையாக இருப்பவரும் நம் கவனத்தை நிச்சயம் கவருவார்.
அதுபோல இரண்டு கேரக்டர்களை இயக்குனர் கையாண்ட விதம் மிக அருமை.
பாலியல் கொடுமை நடந்தால்தான் குற்றம் என்பதில்லை. அது நடக்க முற்பட்டாலே குழந்தைகளுக்கு எப்படியான பாதிப்பை சந்திக்கிறார்கள் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார் விஜய்மில்டன்.
இந்த படத்தை வாங்கி வெளியிடும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
கடுகு… கடலளவு மனசு