தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்..
1996ல் ஆந்திரா சாகிநெட்டிபள்ளியில் கதை ஆரம்பம். அங்குள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் நாகசைதன்யா.
ஒரு நாள் இரவில் இவர ரோந்து செல்லும்போது நடுரோட்டில் அரவிந்தசாமியும் சம்பத் ராஜூம் அடித்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் இருவரும் யார் என தெரியாத நாகசைதன்யா இருவரையும் அடித்து ஜெயிலில் அடைத்து விடுகிறார். தான் ஒரு சிபிஐ அதிகாரி என சம்பத்ராஜ் சொல்ல அதை விசாரிக்க ஜெயப்பிரகாஷிடம் போன் செய்கிறார்.
உண்மைதான் என்று தெரிய வரும் நிலையில் திடீரென உயர் போலீஸ் அதிகாரிகள் அரவிந்த் சாமியை கொல்ல முற்படுகின்றனர்.
இதற்குப் பின்னணியில் முதலமைச்சர் பிரியாமணியும் ஐஜி சரத்குமாரும் இருப்பதை அறிகிறார் நாக சைதன்யா.
எனவே ஒரு கொலை குற்றவாளியை சிபிஐ-யிடம் ஒப்படைக்க அவர் முதல்வரை மீறி என்ன செய்தார்? என்ன நடந்தது? ஒரு சாதாரண கான்ஸ்டபிள் என்ன செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
கேரக்டர்கள்…
ஆக்சன் டான்ஸ் ரொமான்ஸ் என நாக சைதன்யா நடித்திருந்தாலும் ஏனோ அவரது முகம் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டாது போலவே உள்ளது.
இதற்கு முன் சில டப்பிங் படங்களை பார்த்து இருந்தால் அந்த உணர்வு ஏற்பட்டு இருக்காது என்றே நம்பலாம். ஃப்ளாஷ் பேக் காட்சியில் தாடியுடன் வலம் வரும் நாகசைதன்யாவை நன்றாக ரசிக்கலாம்.
1990 களில் நாம் பார்த்த ரசித்த பெண்களைப் போலவும் நடிகைகளை போலவும் கீர்த்தி ஷெட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
அவரின் உதடுகள் பேசுவதோடு கண்கள் பேசும் பாஷையும் புரிகிறது. விரைவில் கீர்த்தி ஷெட்டி நேரடி தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்வார் என நம்பலாம்.
பிரியாமணியும் மிரட்டலான முதலமைச்சராக தன் கேரக்டரை கெத்தாக செய்திருக்கிறார். முதல்வருக்கு அடிபணிந்த ஐஜியாக சரத்குமார் தோற்றத்திலும் காட்சிகளிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.
சீரியஸான இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி நம்மை ரசிக்க வைத்துள்ளார் அரவிந்தசாமி.
1990களில் வந்த ‘புதையல்’ பட காட்சிகள் அப்போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
நாகசைன்யாவின் அண்ணனாக கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜீவா. ஜோடியாக ஆனந்தி. அவர்களது காட்சிகளில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஜீவா இறந்ததாக காட்டப்பட்டாலும் ஆனந்தி என்ன ஆனார்? என்ற ஒரு காட்சியில் கூட இல்லை.
டெக்னீஷியன்கள்….
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தங்களின் ராஜ பலத்தை காட்டி காட்டியுள்ளனர். தீம் மியூசிக் தெறிக்க விட்டுள்ளது.
நிஜ வாழ்க்கையில் கங்கை அமரன் குடும்பத்திற்கும் ஜெயலலிதா – சசிகலா குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பகை இருந்துள்ளது போல.. அதற்கு ஏற்ப ப்ரியாமணியை ஜெயலலிதா போல காட்டி வச்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு என காட்டப்படும் காட்சிகள் ஜெயலலிதாவை குறி வைப்பதாகவே உள்ளது சரி அது படைப்பாளி சுதந்திரம் என விட்டுவிடலாம்.
இடைவேளையின் போது காட்டப்படும் அந்த பெரிய அணை திறக்கும் நீர் காட்சி அருமை. அது படமாக்கிய விதமும் சிறப்பு.. ஒளிப்பதிவாளர் கதிருக்கு பெரிய பாராட்டுகளை கொடுக்கும். எடிட்டரும் தன் பணியில் சிறப்பு.
‘கஸ்டடி’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது என்கிறார்கள். வார்த்தைகள் மட்டும் தமிழ் உச்சரிப்புடன் அழகாக இருக்கிறது. ஆனால் பின்னணியில் காட்டப்படும் அனைத்துமே தெலுங்கு சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. எனவே ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு வரவில்லை.
அண்மையில் வெளியான வாத்தி மற்றும் தீ வாரியார் ஆகிய படங்களும் இதே பாணியில் தான் இருந்தன. இதை தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் கொஞ்சம் சரி செய்து கொண்டால் தமிழ் பதிப்பிலும் பெரும் வெற்றியை பெறலாம்.
Custody movie review and rating in tamil