மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளை கடத்தி மனித உறுப்புகளை திருடும் கும்பல் பற்றிய கதையுடன் அப்பா மகள் உறவை அழகாகவும் இயற்கை உணவு பழக்கங்களை யதார்த்தமாக சொல்லியுள்ள படம் சின்னஞ்சிறு கிளியே.

கதைக்களம்…

கதையின் நாயகன் செந்தில்நாதன். இவரது குடும்பமே இயற்கை மருத்துவத்தில் சிறந்தவர்கள். எனவே இயற்கைக்கு ஏற்றபடி இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். எந்த மருத்துவ பிரச்சினைக்கும் ஆங்கில மருத்துவத்தை நாடாதவர்.

தன் மனைவியை மகள் பிரசவத்தின் போது பறிகொடுத்துவிட்டதால் மகளை மிக பொறுப்பாக பாசமாக வளர்க்கிறார். மகளுக்கு சிட்டுக்குருவி என வித்தியாசமாக பெயரிட்டு அதற்கு சூப்பரான விளக்கமும் கொடுத்துள்ளார்.

ஊர் கோயில் திருவிழாவில் இவரது செல்ல மகள் காணாமல் போகிறார். சில மணி நேரங்களில் கிடைத்தாலும் மகளின் முதுகெலும்பிலிருந்து மஜ்ஜையை ஒரு மர்ம கும்பல் திருடியதை அறிகிறார்.

அதன்பிறகு என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

மகளை ஸ்கூல் சேர்க்கும் காட்சி முதல் இவரின் வித்தியாச பார்வை புலப்படுகிறது. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் சராசரி ஆளாக தன் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார் செந்தில்நாதன்.

பொறுப்பான அப்பா மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள மனிதனாகவும் உயர்ந்து நிற்கிறார். ஆனால் முகத்தில் சிரிப்பை அவ்வளவாக பார்க்கமுடியவில்லை. காதல் காட்சியில் கூட அப்படிதான். ஒருவேளை சசிகுமாரின் வாரிசாக வருவாரோ..?

தெத்துப் பல் அழகியாக பட நாயகியாக வருகிறார் சான்ட்ரா நாயர். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

செந்தில்நாதன் பாட்டியாக குலப்புள்ளி லீலா. (மருது விஷால் பாட்டி) நிறைய காட்சிகளில் வந்து யதார்த்த பாட்டியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் 2ஆம் நாயகி, நாயகியின் தம்பி, சின்ன குழந்தை என அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

சில நேரங்களில் ஒளிப்பதிவு டல்லா இருந்தாலும் கிராமத்து வெளிச்சம் இப்படித்தான் இருக்கும் என மனதை தேற்றிக் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் பாண்டியனிடம் பெரிதாக குறையில்லை. மஸ்தான் – காதர் இசையில் பாடல்கள் ஓரிரு முறை கேட்கலாம்.

தமிழ் மண், இயற்கை வைத்தியம், தாத்தா பாட்டி பாசம், சமூக பொறுப்பு என அனைத்தையும் கமர்சியல் இல்லாமல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

ஆக சின்னஞ்சிறு கிளியே… மண் வாசனையுடன் மகள் தாலாட்டு

Chinnanjiru Kiliye movie review and rating in Tamil

யாரைத்தான் நம்புவதோ..? நடுவன் விமர்சனம் 3.5/5

யாரைத்தான் நம்புவதோ..? நடுவன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பரத் கோகுல் ஆனந்து இருவரும் கொடைக்கானலில் டீ பேக்டரி நடத்தி வருகின்றனர்.

பரத் மிகப்பொறுப்பாக இருக்கிறார். பரத்திற்கு அழகான மனைவி அபர்ணா. பரத்தின் உறவுக்காரர் தர்மராஜ். இவரின் பையன் அருவி பாலா. தன் பையனை பரத் டீ பேக்டரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்.

ஆனால் பரத்தின் பார்ட்னர் கோகுல் ஆனந்த் கம்பெனியிலேயே குடிக்கும் ஒரு பெண் பித்தர். திருமணமாகாதவர்.

அருவி பாலா ஒரு முறை பரத் இல்லாத வீட்டில் அந்த வீட்டில் நடக்கும் ஒரு திரைமறைவு ரகசியத்தை பார்த்துவிடுகிறார். இதை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அப்போது இவரது நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்லும்போது போலீசில் மாட்டிக் கொள்கிறார். ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க போலீஸ் 10 லட்சம் கேட்கிறார்.

அருவி பாலா என்ன செய்தார்? அவர் என்ன விஷயம் பார்த்தார்? பரத்திடம் சொன்னாரா? பரத் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இதுவரை பார்க்காத பாத்திரத்தில் பரத். அமைதியான அப்பா, பொறுப்பான கணவன், நேர்மையான முதலாளி என பன்முகம் காட்டியிருக்கிறார்.

பிசினஸ் பார்ட்னர் பொறுப்பில்லை என்றாலும் சகித்துக் கொள்ளும் காட்சிகளில் தொழில் நேர்த்தி தெரிகிறது.

பரத்தின் நண்பனாக பார்ட்னராக கோகுல் ஆனந்த். இவரின் பார்வையில் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் இரண்டும் கலந்திருக்கிறது.

அபர்ணாவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் குறைவு. க்ளோசப் காட்சிகள் கூட சரியாக இல்லை. கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

அருவி பாலாவின் தந்தை தர்மராஜ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். முழுவேடம் கொடுத்தால் கலக்குவார்.

அருவி பாலா சுற்றியை கதை நடக்கிறது. அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.

டெக்னீஷியன்கள்..

இது த்ரில்லர் கலந்து எமோஷனல் படம் எனலாம். அதற்கேற்ப பின்னணி இசையை கொடுத்திருந்தால் இன்னும் பயம் தொற்றிக் கொள்ளும் ரசிகர்களுக்கு. இசையமைப்பாளர் தரண் குமாரிடம் அது மிஸ்ஸிங்.

ஒளிப்பதிவாளர் யுவா தன் பணியில் சிறப்பு. இரவு காட்சியிலும் பேக்டரி பகல் காட்சியிலும் தன் பணிக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

படத்தின் க்ளைமாக்ஸை நாம் யூகித்தாலும் அதன் வேகத்தை இன்னும் கூட்டியிருந்தால் ரசிகர்களின் நாடி துடிப்பு எகியிறுக்கும்.

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் பலரும் தங்கள் உண்மை முகங்களை சமூகத்தில் காட்டிக் கொள்வதில்லை. அது உடன் படுக்கும் மனைவியாக இருந்தாலும் உடன் பழகும் நண்பனாக இருந்தாலும்.

எனவே சில நேரங்களில் நாம் யதார்த்த வாழ்க்கை வாழாமல் செயற்கையாகவே வாழ்கிறோம்.

எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம். என்பதையும் இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

முகமூடிக்கு பின்னாடி ஒரு முகம் இருக்கிறது. அதுதான் மனிதர்களின் உண்மையான முகம் என்பதை தெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஷாரங்.

நடுவன் தயாரிப்பு – கியூ என்டர்டெயின்மென்ட்

ஆக நடுவன்… யாரைத்தான் நம்புவதோ?

Naduvan movie review and rating in Tamil

விவேகமில்லாத வீரம்… வீராபுரம் 220 விமர்சனம்

விவேகமில்லாத வீரம்… வீராபுரம் 220 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அங்காடித்தெரு மகேஷ் என்ற நாயகனை நினைவிருக்கா? அவர்தான் இந்த படத்தின் நாயகன்.

இவரும் இவரது தந்தையும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஓட்டல் எதிரே நாயகி மேக்னாவின் ப்யூட்டி பார்லர் உள்ளது. அப்படியே இவர்கள் சைட் அடிப்பது வழக்கம்.

தந்தையும் மகனின் காதலுக்கு உதவுகிறார். (சூப்பர் அப்பா..)

மகேஷ் மற்றும் நண்பர்கள் ஜாலியாக தண்ணி அடித்து விளையாடி ஊர் சுற்றி வருவது வழக்கம். இவர்களின் விளையாட்டுத்தனத்தால் இவர்கள் நண்பர்களில் ஒருவனின் திருமணம் நின்றுவிடுகிறது.

இந்த கட்டத்தில் ஊரில் அடிக்கடி லாரியில் அடிப்பட்டு நிறைய விபத்துக்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் அனைத்தும் அதிகாலை அல்லது இரவில் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் சமயத்தில் ஊர் தலைவர் சரியாக வந்து காப்பாற்றுவதும் வழக்கம் உள்ளது. மேலும் மணல் கொள்ளையும் போலீஸ் துணையுடன் அரங்கேறுகிறது.

இது அடிக்கடி தொடரவே ஒரு மர்மம்மாக ஊர் மக்களுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகேஷின் தந்தையும் விபத்தில் இறக்கிறார்.

இந்த விபத்துக்களை செய்வது யார்? அவரின் நோக்கம் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அங்காடி தெருவில் நம்மை அழவைத்தவர் நாயகன் மகேஷ். இதில் ஆரம்ப காட்சியில் மட்டுமே ஸ்மார்ட்டாக வருகிறார். அதன்பிறகு அழுக்காகவே வருகிறார். காதலியிடம் காதலை சொல்லாமல் தவிக்கிறார்.

படத்தின் சூட்டிங்கை எப்போ ஆரம்பித்து எப்போ முடித்தார்களோ தெரியவில்லை. ஒரு சிலகாட்சிகளில் நார்மலா இருக்கிறார். சில காட்சிகளில் ஓவர் குண்டாக தெரிகிறார் மகேஷ்.

படத்தின் நாயகி மேக்னா கண்களாலும் காதல் மொழி பேசுகிறார். தந்தை இழந்த நாயகனுக்கு ஆறுதல் சொல்லும் காட்சிகளில் ரசிக்கலாம்.

மகேஷின் நண்பர்கள் நல்ல தேர்வு. ஒரு சில நேரங்களில் ஹீரோவை விட இவர்களே படு ஸ்மார்ட்டாக இருக்கின்றனர்.

வில்லனாக வரும் சதீஷ் நம்மை கவனிக்க வைக்கிறார்.

இரட்டையர்கள் ரித்தேஷ்-ஸ்ரீதர் இசையில் ஓரிரு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. சில பாடல் முடிந்த உடனே அடுத்த பாடல் வருவது தேவையில்லை.

ஜீரோ பாயிண்ட் மற்றும் அந்த கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்.

காட்சிகள் ஒன்றோடு ஒன்று சரியாக ஒட்டவில்லை. எனவே நாமும் படத்துடன் முழுமையாக ஒட்ட முடியவில்லை.

இயக்குனர் செந்தில்குமார் கதையில் இன்னும் ட்விஸ்ட் வைத்து நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருக்கலாம்.

Veerapuram 220 movie review and rating in Tamil

மக்கள கஷ்டப்படுத்தாதீங்க யோகிபாபு… பேய் மாமா விமர்சனம்.. 1.5/5

மக்கள கஷ்டப்படுத்தாதீங்க யோகிபாபு… பேய் மாமா விமர்சனம்.. 1.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி பாபு நடிப்பில் பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பேய் மாமா’.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படம் செப்டம்பர் 24ல் ரிலீஸ் என போஸ்டர் வெளியிட்டனர். அப்போதே சர்ச்சையானது.

ஹிந்தியில் விக்கி கெளசல் நடிப்பில் வெளியான ‘பூட்’ பட போஸ்டரை எடுத்து அந்த பட நாயகனின் உடம்பில் யோகிபாபு தலையை வைத்து போஸ்டரை டிசைன் செய்து வெளியிட்டனர்.

போஸ்டருக்கே இந்த நிலைமை என்றால் படத்தின் நிலைமை என்னவென்று யோசியுங்க மக்களே…

கதைக்களம்…

வழக்கமான பேய் பங்களா கதை தான். ஒரு பங்களாவில் எம்எஸ் பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டசில பேய்கள் உள்ளன.

அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் ப்ளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி வாங்குகிறது.

கதையில்தான் புதுமை இல்லை. காட்சியில்…சொல்லவே வேண்டாம்.

ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் யோகிபாபு அறிமுகமாகிறார். பல படங்களில் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நம்மை வெறுப்பேற்றுகிறார்.

ஒரு பாடலுக்கு வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர்.

டயலாக் பஞ்சம் என்பதால் விஜய் அஜித் நடித்த படங்களின் பெயர்களையும் மட்டுமே சொல்லி பேய் பேசுவதாக காட்சிகள் உள்ளன.

புன்னகை மன்னன் கமல் ரேகா காதல் காட்சிகளில் மொட்ட ராஜேந்திரன் ரேகா காட்சிகளை வைத்து சில காட்சிகளை ஓட்டி விடுகின்றனர்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மக்கு பாஸ் என்கின்றனர். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என (தியேட்டர்கள் வருபவர்களை பழிவாங்குகிறார்கள் போல…) டயலாக் எல்லாம் உள்ளது.

எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாடா போடா என திட்டுவதை இப்போது வழக்கமாக கொண்டுள்ளார் யோகிபாபு.

இவர் சீனில் வந்தால் காமெடி வரும் என யாரோ சொல்லி இருப்பார்கள் போல.. எனவே வந்து நிற்கிறார். பேசியே கொல்கிறார்.

கொஞ்சம் நேரம் பேயாக வந்து பாய்ந்து பாய்ந்து வேற அடிக்கிறார்.

பேய் படம் என்றால் கோவை சரளா இல்லாமல் இருப்பாரா? அவரும் வந்து செல்கிறார்.

ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் … சக்தி இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார். காமெடி கூட பெரிதாக கை கொடுக்கவில்லை.

யோகி பாபு மேடைகளில் பேசும்போது சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வந்ததாக பேசுவார். ஆரம்ப காலங்களில் அதை உணர்ந்து நன்றாக சிரிக்க வைத்து நம்மை மகிழ்வித்தார். ஆனால் தற்போது இவர் நடித்துள்ள சினிமாவை பார்ப்பவர்களை கஷ்டப்படுத்துகிறார்.

யோகிபாபு ஹீரோவாக நடித்த படங்களில் மண்டேலோ மட்டுமே பாராட்டும் படியாகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை.

Yogi Babu in Pei Mamam movie review and rating in Tamil

எவன் ஆண்டாலும் இதான் நிலை…இராமே ஆண்டாலும் இராவணேஆண்டாலும் விமர்சனம்.. 3.75/5

எவன் ஆண்டாலும் இதான் நிலை…இராமே ஆண்டாலும் இராவணேஆண்டாலும் விமர்சனம்.. 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மழை பொய்த்து போன பூச்சேரி என்ற கிராமத்தில் நாயகன் மிதுன் மாணிக்கம், நாயகி ரம்யா பாண்டியன் இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனாலும் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாது தாங்கள் வளர்க்கும் காளை மாடுகளை பிள்ளைகள் போல வளர்கின்றனர்.

அதற்கு வெள்ளையன் கருப்பன் என்று பெயரிட்டு அதுவே தங்கள் வாழ்க்கையாக சந்தோஷமாக வாழ்கின்றனர். மாடு பெயரில் லோன் வாங்கினால் காளை காதுகளில் ஓட்டை போடுவார்கள் என்பதால் லோன் கூட வாங்காதவர்கள் இவர்கள். அப்படியென்றால் இவர்களின் பாசத்தை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.

மாடு என்று மற்றவர்கள் சொன்னால் கூட இவர்கள் கோபம்படுவதுண்டு.

ஒருநாள் இரவில் இரண்டு காளை மாடுகளும் காணாமல் போய்விடுகின்றன.

காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் கூட எடுப்பதில்லை. ஆனால் எம்எல்ஏ வீட்டு நாய்குட்டி காணாமல் போனால் எம்எல்ஏ மனைவி உறக்கம் இல்லாமல் தவிக்கிறார் என காவல் துறையினர் அலைந்து நாய்களை தேடுகின்றனர்.

அந்த காளை மாடுகள் கிடைத்ததா? எப்படி காணாமல் போனது?

இந்த காளை மாடுகளும் அதனை சுற்றி அந்த கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் முக்கியமான கேரக்டர்கள் 4 அல்லது 5 தான். மற்றபடி இவையில்லாமல் எடப்பாடி ஸ்டாலின் சீமான் பாஜக விவசாய சங்கத் தலைவர் என அவர்கள் பாணியில் சிலர் வந்து செல்கின்றனர்.

அவற்றை நாம் வரிகளில் சொல்லிவிட முடியாது. நீங்கள் படத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்.

குன்னி முத்து கேரக்டரில் மிதுன் மாணிக்கம். பிள்ளைகளாக இவர் காளைகளை வளர்க்கும் காட்சிகளிலும் தேடும காட்சிகளிலும் நம்மையும் தேட வைக்கிறார்.

ஜோக்கர் படத்துக்கு பிறகு அசல் கிராமத்து பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார் ரம்யா பாண்டியன், காளைகளே தன் பிள்ளை  என்னும் காட்சியில் தாய் பாசத்தில் ஜொலிக்கிறார்.

மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகன் செம. இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் சூப்பர். ஹிந்தி தெரியாது போடா என்பது முதல் அரசியல் நையாண்டி வரை அப்ளாஸ் அள்ளுவார்.

நியூஸ் ரிப்போர்ட்டராக வாணி போஜன். வாவ் சூப்பர். ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அருமையான நடிப்பில் நம்மை கவர்கிறார்.

ஒரு கிராமத்து சிறுமியிடன் உன் தலை முடி ஏன் இந்த கலரில் இருக்கிறது என கேட்கிறார். என் வீட்டில் தேங்காய் எண்ணெய் இல்லை. ஆமா… உங்க முடியும் செம்பட்டையா இருக்கே உங்க வீட்லயும் எண்ணெய் இல்லையா? என கேட்கும்போது அசத்தல்,

அதுபோல் தன் நியூஸ் சேனலில் இவரது படைப்பு உரிமை பறிக்கப்படும் போது இவர் எடுக்கும் முடிவு சபாஷ் போட வைக்கும்.

மற்றபடி ரம்யா வீட்டு பாட்டி கேரக்டர் சூப்பர். வாரே வா…

டெக்னிஷியன்கள்..

தன் முதல் படத்திலேயே இயக்குனர் அரசில் மூர்த்தி தன் அச்சு முத்திரையை சினிமாவில் பதித்துவிட்டார்.

காளைக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாகவே காட்டியிருந்தால் காளை காணாமல் போனால் நாமும் அழுதிருப்போம்.

பாடகர் நடிகர் கிரிஷ் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர். பின்னனி இசையும் காளையோடு சாரி கதையோடு பயணிக்க வைக்கிறது.

சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்தின் காட்சிகளை கண்களுக்கு இதம் சேர்கிறது.

சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து நம் சமூகத்திற்கு ஒரு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

வரும் 24ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதால் பார்த்து ரசியுங்கள்.

ஆக… இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.. எவன் ஆண்டாலும் நாம் மாறினால் மட்டும்தான் இந்த நாடு மறுமலர்ச்சி அடையும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.

Raame Aandalum Raavane Aandalum movie review and rating in Tamil

ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

இலங்கையில் ஓயாத போர்… ஓயாத மரண ஓலங்கள்…. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்.. இவைதான் இலங்கையில் வாழும் தமிழர்களின் விதி. இன்னும் பல இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான். இதை உலக நாடுகள் அறிய எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.

2008 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள்?

சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.

சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் அவர்களின் குடும்பங்கள் எப்படியான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பதையே இந்தப் படம் உணர்வாக உணர்த்தியுள்ளது.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த தன் கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடன் வாழும் மகள். இவர்களுக்கு ஆதரவாக ஒரு பாட்டி.

அவர்களின் கண்ணீர் துளிகளை நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் அனந்த ரமணன்.

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, ஈழத்தமிழர்களுக்கு நல்லமுறையில் வாழ்வளிப்பதாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா? போரின் போது பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான்.

ஒரு வேளை தவறுதாக எடுத்துவிட்டால் அதை வெடிக்க நேரிடும். எனவே நமக்கு மரணம் நிச்சயம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் நமக்கே பயம் தொற்றிக் கொள்ளும்.

பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி ரசிக்க வைக்கிறார்.

ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் நம்மை சோதிக்கிறது. ஒரு டாக்குமெண்டரி படம் தான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டாமா? அரசு விளம்பரங்களையும் நாடகங்களையும் பார்த்தால் எப்படி சலிப்பு தட்டுமோ? அதுபோல லைவ் ரெக்கார்ட்டிங் செய்துள்ளதால் வாய்ஸ் சரியாக இல்லை. அதை சரி செய்திருக்கலாம்.

இந்த ‘ஆறாம் நிலம்’ படம் வரும் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

 

Aaram Nilam movie review and rating in Tamil

More Articles
Follows