தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : கோகுல் ஆனந்த், (ஹரிஷ்) ராஜேஷ் பாலசந்திரன் (வானம்பாடி), அஞ்சு குரியன் (ரோஷினி) சிவ் கேசவ் (மைக்கேல் கிரிஸ் முருகாந்தம்) எம்சீ ஜெஸ் (பாப்பாபலாஸ்ட்)
இயக்கம் : அப்பாஸ் அக்பர்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து
எடிட்டிங்: பிரவீன் கேஎல்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஜிப்ரான்
கதைக்களம்…
சினிமாவில் டைரக்டராக வேண்டும் என பல மாதங்களாக முயற்சிக்கிறார் ஹீரோ கோகுல் ஆனந்த்.
ஆனால் இவரை காக்க வைத்த தயாரிப்பாளரோ ஒரு கட்டத்தில் வேறு ஒரு இயக்குனரை வைத்து படமெடுக்க நினைக்கிறார்.
ஒரு கட்டத்தில் சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதற்காக அவரை பார்க்க அங்கு செல்கிறார்.
ஆனால் அவர் விபத்தில் சிக்கி விடுகிறார். அதன்பின் அங்குள்ள ஒரு கேமராமேன் வானம்பாடியை சந்திக்கிறார்.
அவரின் உதவியுடன் புதிய தயாரிப்பாளரை தேடுகின்றார்.
இதனிடையில் நாயகி அஞ்சுவை சந்திக்கிறார். அவரை காதலிக்கிறார். ஆனால் நாயகியோ கேன்சர் நோயாளி. இதனால் அவருக்கு உதவ நினைக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளரும் கிடைக்கிறார்.
அதன்பின் படம் எடுத்தாரா? காதலியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
படம் முழுவதும் 5, 6 கேரக்டர்களே வருகிறார்கள். அதிலும் கோகுல் ஆனந்த் அவரது நண்பன் ராஜேஷ்பாலச்சந்திரன் படத்தின் இரு பில்லர்கள்.
இவர்கள் இருவருமே படத்தை தாங்கி நிற்கின்றனர். கிடைத்த கேப்பில் எல்லாம் நண்பர் காமெடி செய்து படத்தை கலகலப்பாக்குகிறார்.
இருவரும் அடிக்கும் லூட்டிதான் படத்தின் பலம். இவருடன் தயாரிப்பாளராக வரும் சிவ் கேஷவ் ஸ்டைலிஷ்ஷாக ரசிக்க வைக்கிறார்.
ஆனால் உச்சக்கட்ட அந்த பின்னாடி துப்பாக்கி வைக்கும் காமெடி ரொம்ப ஓவர்.
கேன்சர் நோயாளி ரோஷினி சோகமாய் வந்து அனுதாப பட வைக்கிறார்.
செக்மேட் வில்லன் மற்றும் அவரது கேங் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர். பணம் தரலேன்னா உன் காதலியை கொன்னுடுவேன் என்று சொன்னபின் கொன்னுடு என்ற நாயகன் சொன்னதும், பணம் தரலேன்னா கொல்ல மாட்டேன் என காமெடி செய்து ரசிக்க வைக்கிறது.
ஏன்டீ லவ் யூ ஒரு வார்த்தை ஹீரோகிட்ட சொன்னா என்ன? எனக்கு பணம் கிடைக்கும் என நாயகியிடம் கெஞ்சுவது நச்.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
சிங்கப்பூர் அழகை இரவிலும் பகலிலும் நன்றாக படம் பிடித்து அழகு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து.
படத்தின் டைட்டில் கார்டுகள் அதனை உருவாக்கிய விதம் அருமை.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞன் அவனை சுற்றியுள்ள கதை என ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.
ஆனால் படத்தில் சிலரை மட்டுமே காட்டுவது போரடிக்கிறது. பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவர் வெளிநாட்டில் வாழும்போது எப்படி தப்பு மேல் தப்பு செய்வார்? போலீஸ் எங்கே? என்ற லாஜிக் எல்லாம் உதைக்கிறது.
மற்றபடி தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.
அவரது படம் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துள்ளாரோ என்னவோ? பாடலும் அதை படமாக்கப்பட்ட இடங்களும் ரசிக்க வைக்கிறது.
`சென்னை 2 சிங்கப்பூர்’… ஜாலி டூர் போலாம்