தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பயமறியா பிரம்மை விமர்சனம்.. கலைய கொன்னுட்டீங்களே
நடிகர் ஜேடி நாயகனாக நடித்துள்ள படம் ‘பயமறியா பிரம்மை’.
ஸ்டோரி…
25 ஆண்டுகளில் 96 கொலைகளை செய்த ஒரு சிறைக்கைதியை ஒரு எழுத்தாளர் நேரில் சந்தித்து பேட்டி எடுக்கிறார்.
தான் செய்த ஒவ்வொரு கொலைகளையுமே ஒவ்வொரு ஓவியமாக கலையாக என்னும் அந்த சிறைக் கைதி ஒவ்வொன்றாக விவரிக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்களே இந்த படத்தின் மீதிக்கதை. அவனின் நோக்கம் என்ன? அந்த கொலைகளின் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
இந்த படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் & பலர் நடித்துள்ளனர்.
இவர்களில் கதையின் நாயகனாக ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோர் ஜெகதீஷ் பாத்திரமாக ரசிகர்களுக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் ஜெகதீஷ்-ன் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை பிரதிபலித்து இருக்கிறார்கள்..
ஜெகதீஷை பேட்டி எடுக்கும் எழுத்தாளராக ஒரு பத்திரிகையாளராக வினோத் சாகர்.. இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் மெகா சீரியல் தோற்றுவிடும்.. பேசிப் பேசியே படத்தை முடித்து நம்மையும் முடித்து விட்டார்கள்..
டெக்னீசியன்ஸ் …
இந்த படத்துக்கு கே இசையமைக்க அகில் பிரகாஷ் எடிட்டிங் செய்துள்ளார்..
பெரும்பாலான கேமரா ஆங்கிள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நமக்கு அயற்சியே தோன்றுகிறது.. பின்னணி இசையும் போதுமானதாக இல்லை.. காட்சிக்கு வைக்கப்பட்ட லைட்டிங் குறைவாக இருப்பதால் படத்தில் நடித்துள்ளவர்கள் முகம் கூட சரியாக காண்பிக்கப் படவில்லை.. அவர்களின் முகபாவனைகளை எப்படி காண முடியும்.?
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ளது. இவரே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
தனக்குத் தோன்றியதை ஒரு படைப்பாளி எப்படி வேண்டுமானால் எடுக்கலாம்.. ஒருவேளை தயாரிப்பாளர் வேராகவும் இயக்குனர் வேறாகவும் இருந்தால் நிச்சயம் இது போன்ற படத்தை எடுத்திருக்க முடியாது.
அவரே தயாரிப்பாளர் இயக்குனர் என்பதால் அதற்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து முழுக்க முழுக்க தனக்கு மட்டுமே புரியும் படியான ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்..
கொலையை களையாக என்னும் ஒருவன் அவன் செய்த கொலைகளை ஒவ்வொன்றாக எழுத்தால் என்னிடம் விவரிக்கிறார் இது பன்றிய படத்தொகுப்பு இந்த படம்.
25 வருடங்களில் 96 கொலைகளை செய்த ஒரு கொலை குற்றவாளி அந்தக் கொலைகளை ஒரு கலை நயத்துடன் செய்ததை பற்றி விவரிக்கும் படமே..
ஆனால் 25 வருடங்களில் கொலை செய்த ஒருவனை போலீஸ் தண்டிக்கவில்லையா? பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுமே செய்யவில்லையா? அவனின் நோக்கம் என்ன?
ஒரு கலை ஓவியத்திற்காக கொலைகளை அரங்கேற்றும் இவன் எல்லாம் எந்த மனநிலை? என்பதற்கான விளக்கங்கள் இந்த படத்தில் இல்லை.
ஆனால் புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை என்ற கருத்தோடு இந்தப் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராகுல் கபாலி.
விருதுகளை மட்டுமே குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரையும் திருப்திப்படுத்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Bayamariya Brammai movie review