தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
Casting : Zaid Khan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj, Achyuth Kumar
Directed By : Jayatheertha
Music By : B. Ajaneesh Loknath
Produced By : Tilakraj Ballal, Muzammil Ahmed Khan
ஒன்லைன்…
எங்கும் காதல்.. என்றென்றும் காதல்… எப்போதும் காதல்…
கதைக்களம்…
அறிமுகங்கள்.. நாயகன் – ஜையீத் கான்..
நாயகி – சோனல் மோண்டோரியோ
நண்பர்களுக்குள் ஒரு சேலஞ்ச் (போட்டி) நடக்கிறது. அதன்படி நாயகியை ஒரு வாரத்திற்குள் தன் காதல் வலையில் விழ வைப்பேன் என சவால் விடுகிறார் நாயகன்.
அதன்படியே… டைம் ட்ராவல் கதைகளை சொல்லி மூன்றே நாட்களில் நாயகியின் படுக்கையறை வரை செல்கிறார். அப்போது விளையாட்டாக எடுக்கும் ஒரு செஃல்பியை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அதை மற்றொரு நண்பர் சமூக வலைத்தளத்தில் பகிர நாயகிக்கு பிரச்சனை வருகிறது..
இதனால் எவரிடமும் சொல்லாமல் பனாரஸ் செல்கிறார். நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? காதல் கைகூடியதா? என்பதே கதை.
இதனிடையில் நாயகன் டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பதே க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்….
நாயகன் ஜையீத் கான் அறிமுகம் என்றாலும் அசத்தல்.. செம ஸ்மார்ட்டாக வருகிறார்.. ரொமான்ஸில் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஓகே.
(ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. ஒரு சண்டைக் காட்சியில் தெறிக்கும் கடற்கரை மணலும்.. வில்லன் வாயில் இருந்து வரும் ரத்தமும்… கலந்த காட்சியை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்.)
நாயகி சோனல் மோண்டோரியோ.. பான் இந்தியா படம் என்றாலும் சுடிதார் மட்டுமே வந்து ரசிகர்களை தன் அழகால் கவர்கிறார். “என்னய்யா படம் முழுவதும் இப்படியா? என நினைக்கும் போது ஒரு டூயட் காட்சியில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி சூடேற்றிவிட்டார்.
நாயகியின் சித்தப்பாவாக அச்யுத் குமார் மெச்சூரிட்டி ஆக்டிங். ( அண்மையில் வெளியான காந்தாரா படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்)
நாயகியின் சித்தியாக நடித்தவரும் சிறப்பு. இவர்கள் (நாயகி & சித்தி) இருவருக்கும் ஒரே முக ஜாடை என்பதால் குடும்பம் பொருத்தம் செம.. என்னை ஏன் இப்படி அழகா படைச்ச ஆண்டவா? என இவர் சொல்லும் போதும் ரசிக்க வைக்கிறார்.
ரஜினி ரசிகராக வரும் சாம்பு என்ற சுஜய் சாஸ்திரி கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் காமெடியாக பேசி தான் இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது கலங்க வைக்கிறார்.
டெக்னீஷியன்கள்….
காதல் படங்கள் என்றாலே கண்களுக்கு குளிர்ச்சியான விஷயங்கள் வேண்டும்.. அதுவும் பனாரஸ் போன்ற இடத்தை இதுவரை யாரும் காட்டிடாத கோணத்தில் காட்டி இருக்கிற ஒளிப்பதிவாளர்.
பொதுவாகவே காசி வாரணாசி பனாரஸ் ஆகிய இடங்களை காட்டினால் கங்கை நதி.. அகோரிகள்.. மக்கள் கூட்டம்.. ஆகியவையே நம் கண்களில் தென்படும்.
ஆனால் இதில் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளையும் காட்டி இருப்பது கூடுதல் சிறப்பு. இவற்றுக்கு காரணமானவர் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கூடுதல் சிறப்பு.. “இலக்கண கவிதை எழுதிய அழகே…” என்ற பாடல் அழகு.
கே.எம்.பிரகாஷின் படத்தொகுப்பு சிறு தொய்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் காதல்.. மோதல்.. என படம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் டைம் லூப் என படத்தின் வேகத்தை குறைத்து விட்டது.
இதில் என்னதான் சொல்லப்போகிறார்கள்? என்ற குழப்பமான மனநிலையில் ரசிகர்கள்.
தமிழுக்கு ஏற்றபடி நிறைய லிப்சிங் காட்சிகள் உள்ளது பாராட்டுக்குரியது. வசனங்களும் காதலர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
ஒரு வார்த்தை பேசி விட்டால் அது புரிந்துவிடும்.. ஆனால் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.. போன்ற வசனங்கள் சிறப்பு.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயதீர்த்தா. காதல் கதையை வித்தியாசமான இடத்தில் சொல்ல முயற்சித்துள்ளார்.
படம் ஆரம்பிக்கும் போது டைம் டிராவல் கதையாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.. ஆனால் அதன் பிறகு சாதாரண காதல் கதையாக உருவெடுத்து அதை குடும்ப செண்டிமெண்டில் முடித்திருப்பது நல்ல கற்பனை.
ஆக பனாரஸ்.. சேலையில் சிக்கிய சேவகன்