தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்
ஸ்டோரி…
நாயகி கெனி.. இவரை மூன்று ஆண்கள் காதலிக்கின்றனர்.. எவரையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
ஆண்கள் துரோகிகள் அவர்களை நம்பாதே என இவரின் அம்மா சொன்னதால் அந்த வழிப்படி நடக்கிறார்.. ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக 3 லட்சம் தேவைப்படுகிறது.
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கைவிரித்த வேளையில் வேறு வழியில்லாமல் தோழியின் ஆலோசனைப்படி ஒரு திட்டம் போடுகிறார் நாயகி..
அதாவது தன்னிடம் காதலை சொன்ன மூன்று நபர்களிடம் தலா 1 லட்சம் கேட்கிறார். என்னை நீங்கள் உண்மையாக விரும்பினால் என் அம்மாவை காப்பாற்ற உதவுங்கள் என்கிறார்.
அவர்கள் பணம் கொடுத்தார்களா.? கெனி அம்மாவை காப்பாற்றினாரா? காதலுக்காக பொய் சொன்ன கெனியின் நிலை என்ன? ஆனது என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
நாயகன் – ராஜ்நிதன்
நாயகி – கெனி
நாயகி அம்மா – திவ்யா லெனின்
நாயகி தாத்தா – வாசுவிக்ரம்
நாயகன் அம்மா – கும்கி ஆனந்தி
நட்புக்காக – அமிர்தலிங்கம்.
வில்லன் – ஆதவன்.
இதில் எல்லோரையும் விட அதிகமாக ஸ்கோர் செய்தவர் நாயகியின் அம்மா திவ்யா லெனின் தான். இவர் ராதா என்ற கேரக்டரில் nalla நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆண்களை நம்பி இவர் வாழ்க்கையை தொலைப்பதும் அதன் பின்னர் மகளுக்கு நல்ல ஆண்களை புரிய வைப்பதும் சிறந்த அம்மாவிற்கு உதாரணம்.
இவரையே ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர் ஜானகிராமன்.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. குறைந்த வயது உடைய இவரை நாயகியின் அம்மாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை..
வில்லன் ஆதவன் தன்னுடைய கேரக்டரில் அசத்தல்.. காதலிக்கும் மூன்று நபர்களில் நாயகி மணக்க ஆசைப்படும் நபராக ராஜ் நிதன்.. முடிந்தவரை நடிக்க முயற்சித்து இருக்கிறார். மற்ற இரண்டு நபர்களும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..
திவ்யா கேரக்டரில் நடித்த கெனிக்கு இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பு தேவை.
வழக்கம்போல காதலை எதிர்க்கும் அப்பாவாக வாசு விக்ரம்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு – சீனிவாசன்.
எடிட்டிங் – T பன்னீர்செல்வம்
சண்டை பயிற்ச்சி – டைகர் சுகுமார்
இசை – பிருத்திவி
மக்கள் தொடர்பு – சேலம் சரண்
தயாரிப்பு – சுப்ரியா பிலிம்ஸ்
கதை, திரைக்கதை, வசனம்,தயாரிப்பு, இயக்கம் – ஜடையனூர் V. ஜானகிராமன் .
ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற தலைப்பிலேயே வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜானகிராமன்.
பொதுவாக காதல் படங்களுக்கு அதே கண்கள்.. கண்கள் மோதிக்கொண்டால் காதல் கண்கள் என்றெல்லாம் இருக்கும்.. ஆனால் இதில் மூன்று ஆண்களின் காதலை சொல்வதாக ஆறு கண்களும் ஒரே பெண்ணை பார்க்கும் பார்வை என்பதால் ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற நோக்கத்தில் வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்.
இது போன்ற படங்களை நிச்சயம் இன்னும் காமெடி கலந்து சொல்லியிருக்கலாம்.. படத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக கையாளப்பட்டிருந்தாலும் டெக்னிக்கிலாக படம் வீக்காக இருக்கிறது..
முக்கியமாக பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்… கிரு கிரு கிறங்குறேன் டீ.. சறு சறு சாயுறேன் டீ.. என்ற பாடலில் வரிகளை விட இசை இரைச்சலை அதிகம்..
டி.ஐ. கலர் கரெக்ஷனில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.. அது மட்டுமில்லாமல் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் வேண்டும்.. நிறைய ஆங்கிள்கள் வைத்து ரசிக்க வைத்திருக்கலாம்..
ஆக.. ஆறு கண்களும் ஒரே பார்வை.. ஆண் பெண் பார்வை..
6 Kangalum orae Paarvai movie review