Water Falls – Snow World..; சென்னை தீவுத்திடலில் கோடையை கொண்டாடுங்க

Water Falls – Snow World..; சென்னை தீவுத்திடலில் கோடையை கொண்டாடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு ராஜ்யசபா எம்.பி வில்சன் அமைச்சர் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நேற்று ஜூன் 2ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.௦௦ மணியளவில் தொடங்கி வைத்தனர் .

இந்த பொருட்காட்சி நிகழ்வில் சென்னை மக்களின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் குளிர்ச்சியாக கொண்டாடும் வகையில் “குற்றால அருவி – Water Falls”, “பனிக்கட்டி உலகம்-Snow World”, 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ கார்னிவல் விளையாட்டுகள் (கார்னிவல் Games), 10க்கும் மேற்பட்ட புதுமையான நிகழ்ச்சிகள் (Special Shows) மற்றும் வசந்த் & கோ, ஆச்சி மாசாலா போன்ற வணிக அரங்குகளுடன் மிக பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.

கோடை கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும்
வகையில் “சென்னையில் குற்றால அருவி”
கோடை விடுமுறையை குளிர்ச்சியாக்க பனிக்கட்டி உலகம் மற்றும்
DJ Sound System with Stage
* குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட Giant Wheel, Tora Tora, Peacock, Watter Roller, Techno Jump,
போன்ற 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம்
* 3D தியேட்டர், கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் காட்சி, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, மேஜிக் ஷோ போன்ற பல்வேறு ஸ்பெஷல் ஷோ
* குழந்தைகளை குதுகலப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களுடன்
Augmented Reality Show
* வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி
மகிழ 50க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்

டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம்ஸ் மற்றும் பிரியாணி போன்ற உணவு அரங்குகள்

ஏசி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டி.வி., போன்ற இதர வீட்டு உபயோகப்
பொருட்கள் (Home Appliances) அனைத்தையும் சலுகை விலையில்
வாங்கிட வசந்த் & கோ அரங்கம்

மகளிர் மனம் மகிழ சமையலுக்கு தேவையான அனைத்து மசாலாக்கள்
வாங்கிட ஏதுவாக ஆச்சி மசாலா (Aachi Masala) அரங்கு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியானது இன்று முதல் 45 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு
தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சியின் (வரிகள் உட்பட) நுழைவுக் கட்டணம் ரூபாய் ரூ.60/- அறுபது மட்டும்) பொருட்காட்சி நேரம் -திங்கள் முதல் சனிக்கிழமை வரை:
|மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
|ஞாயிற்று கிழமைகளில் 😐 காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட
தீவுத்திடலுக்கு வாங்க ..!..
சந்தோஷமாக போங்க .!..

Water Falls – Snow World ..; Celebrate summer at Chennai Island

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து டி ஆரின் மகனும் நடிகருமான சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

”எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் வணக்கம்.

எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார்.

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக 2 நாட்களில் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Simbu takes T Rajender to US for medical treatment

அட்லீ – ஷாரூக் – அனிருத் கூட்டணி.; டைட்டிலுடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு

அட்லீ – ஷாரூக் – அனிருத் கூட்டணி.; டைட்டிலுடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா ராணி்’ படத்தின் வெற்றி மூலம் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் டைரக்டர் அட்லீ.

அதன்பின் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கினார். இவை சூப்பர் ஹிட்டானதால் ஹிந்தியில் வாய்ப்பை பெற்றார் அட்லீ.

இதனையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கி வருகிறார் அட்லீ.

இதன் மூலம் நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும்
நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பு ‘லயன்’ என கூறப்பட்டது.

ஆனால் அந்த தலைப்பு இல்லை என தெரிகிறது.

தற்போது இந்தப் படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சரியாக ஒரு வருடம் கழித்து 5 மொழிகளில் 2023 ஜூன் 2ல் ரீலீசாகவுள்ளது.

Atlee – Shah Rukh Khan – Anirudh joins for a new film Jawan

‘கைதி’ பார்த்துட்டு ‘விக்ரம்’ பார்க்க வாங்க..; லோகேஷ் கனகராஜ் திடீர் அறிக்கை

‘கைதி’ பார்த்துட்டு ‘விக்ரம்’ பார்க்க வாங்க..; லோகேஷ் கனகராஜ் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் ‛விக்ரம்’. இப்படத்தை கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

2018 பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் விமர்சனம் 3.75/5..; மாஸ் ட்ரீட்

இந்த படம் இன்று (ஜூன் 3) திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு…

இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சிறு வயது முதலே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்திருக்கிறேன்.

இன்றைக்கு அவரது படத்தை இயக்கி இருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவை போல் உள்ளது.

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. விக்ரம் படம் தொடங்கி 18 மாதங்கள் ஆகின்றன.

ரத்தமும், வியர்வையும் சிந்தி ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை நம் நாட்டின் பெருமிதத்தை கமல்ஹாசனை கொண்டாடவும் உழைத்துள்ளோம். வாய்ப்புக்கு நன்றி சார்.

இந்த படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்.

இன்னும் சில மணிநேரங்களில் இந்த படம் உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். ‛கைதி’யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு ‛விக்ரம்’ அழைத்து செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு லோகேஷ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Lokesh Kanagaraj’s statement before Vikram movie release

தாயின் தாலாட்டில் 4 ஆண்டுகள்.. இளையராஜா தாளங்களில் 40 ஆண்டுகள்.; பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

தாயின் தாலாட்டில் 4 ஆண்டுகள்.. இளையராஜா தாளங்களில் 40 ஆண்டுகள்.; பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஜூன் 2 இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே ரசிகர்கள் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளையராஜாவை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

இத்துடன் ட்விட்டரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…

“முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம்.

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்!”

எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Anbumani Ramadoss wishes to Maestro Ilaiyaraja

பர்த்டே ஸ்பெஷல் இன்ஃபோ : இளையராஜா பெயரில் உருவாகும் திரைப்படம்

பர்த்டே ஸ்பெஷல் இன்ஃபோ : இளையராஜா பெயரில் உருவாகும் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஜூன் 2 இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே ரசிகர்கள் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் இளையராஜா.

அதில்.., ‛ராஜா – தி மியூசிகல்’ என்ற பெயரில் தனது இசைப்பயணம் குறித்த ஒரு திரைப்படம் தயாராகும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை 2024ல் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார். நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Birthday Special Info: A film made under the name Ilayaraja

More Articles
Follows