யானை முகத்தானை பார்த்துட்டு அதே டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த யோகிபாபு

யானை முகத்தானை பார்த்துட்டு அதே டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

ரெஜிஷ் மிதிலா

இவர் “யானை முகத்தான்” படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் பேசுகையில்….

“எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையெய் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார்.

அதுதான் ‘யானை முகத்தான்’.
பேண்டஸி படமான இதில்,
ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார்.

ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நாம் வேண்டிக்கும்போது, நம்ம கஷ்டங்களை தீர்க்கச் சொல்லி மன்றாடும் போது அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம்.

அப்படி அவர் வந்து விட்டால், நான் தான் கடவுள் என்று அவர் நிரூபிக்க போராட வேண்டியிருக்கும். ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன வினோத நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதே இப் படம்.

யோகிபாபு

ராஜஸ்தானில் ஆரம்பிச்சு,
சென்னை வரைக்கும் பட பிடிப்பு நடத்தி இருக்கோம்.

கதை சொன்னதுமே பிடிச்சுப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார் யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு கூப்பிட்டு நடிக்கச் சொல்லிட்டார்.

இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு. ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், டக்குனு உணர்வுகளை கொண்டு வந்து விடுகிறார்.

அடுத்த படத்திலும் அவர் தான் ஹீரோ. அதில் இன்னும் யோகி பாபுவை நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி,மேகாலயாவில் தான் நடக்கும்.

‘வா கிளம்புவோம்’னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார்.. இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதற்கு தயாராக வேண்டும்.

நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றத்தை அழகா கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள் வரைக்கும் போய் மனசில் நிற்கணும். உணர்வுபூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கோம்.

ஒரு காட்சியில் நடிக்கும் போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி யோகி பாபு நடிக்கிறது தான் அழகு.

நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப் பட்டவங்களை நம்பித்தான் இந்த யானை முகத்தானை எடுத்திருக்கிறேன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

படக்குழு விவரம்..:

யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி
முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா:
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்
Pro: ஜான்சன்

யோகிபாபு

Yogi Babu’s next fantsy film is titled Yaanai Mugathan

பர்ஸ்ட் காமெடியன்.. நெக்ஸ்ட் ஹீரோ.. இப்போ சிங்கர் ஆக மாறிய சந்தானம்

பர்ஸ்ட் காமெடியன்.. நெக்ஸ்ட் ஹீரோ.. இப்போ சிங்கர் ஆக மாறிய சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதலில் காமெடியனாக தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் சந்தானம். பல படங்களில் காமெடி செய்து பின்னர் ஹீரோவாக மாறினார்.

தற்போது தான் ஹீரோவாக நடித்து வரும் ‘கிக்’ படத்தில் பாடகராக மாறியுள்ளார் சந்தானம்.. அதன் விவரம் இதோ…

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…” (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”.

நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த ‘கிக்’ படம்.

பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ்.

டாம்-ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர்.

‘தாராள பிரபு’ ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்வது தான் கதை. சந்தானத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கான படம் இது.

எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகமான இப்படத்தில், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பல ஆர்டிஸ்ட் இருக்காங்க..

கன்னடத்தில் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யா தான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்கள் அவரின் இசை முற்றிலும் புதுசு. தமிழ் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டு பண்றார்.

இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு என்பது அவர் எண்ணம்.

கேமரா : சுதாகர் ராஜ் .
தயாரிப்பு: நவீன் ராஜ்
தயாரிப்பு மேற்பார்வை: பாக்யா
பி ஆர் ஓ: ஜான்சன் .

நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா?

நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா தற்போது மலையாளப் படமான ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று காலத்துக்கு முன்பே படம் அறிவிக்கப்பட்டது, ஆனால் கால தாமதமானது.

தயாரிப்பாளர் ரெட் கார்பெட் சுரேஷ்க்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மோகன்லால், ஜீத்து ஜோசப் இணைந்து ‘ராம்’ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் நயன்தாராவை முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அவர் முதல் பாகத்தின் இறுதியில் தோன்றி அதன் தொடர்ச்சியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கொடுத்தார் – ஜெயம் ரவி நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கொடுத்தார் – ஜெயம் ரவி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வனில் அருண் மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது ஆண்டாக மாற்றியது, மேலும் எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது.

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா.

ரஜினிகாந்தின் அங்கீகாரம் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது என்று ரவி தெரிவித்துள்ளார்.

சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் ஒருவர் மோகன்.

இவர் நடித்த இதயக் கோயில், உதயகீதம், குங்குமச்சிமிழ், பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, மௌனராகம் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரது படங்களில் பெரும்பாலும் மேடை கச்சேரி இடம் பெறும். அதுபோல இவரது படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.

எனவே இவருக்கு மைக் மோகன் என்ற செல்ல பெயரும் உண்டு. இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களுக்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெண்கள் மத்தியிலும் இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இவரது படங்கள் குறைந்தபட்சமாக 100 நாட்களை தாண்டி தான் ஓடும். பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளிவிழா நாயகன் (சில்வர் ஜூப்ளி ஸ்டார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவரது படங்கள் வெளியாகி 30 – 35 வருடங்களை கடந்து விட்டாலும் தற்போதும் இரவு நேரங்களில் இவரது பாடல்களை கேட்கும் ரசிகர்கள் ஏராளம். அதுபோல ரேடியோ / டிவிக்களிலும் இரவு நேரங்களில் இவரது பாடல்கள் தான் ஒலித்து வருகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தன்னுடைய பாடல்கள் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி என்பதால் அவரது இறுதிச் சடங்கில் கொரோனா காலத்திலும் கலந்து கொண்டார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த மைக் மோகனை திரும்பவும் நாயகனாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இவர் இயக்கி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன், குஷ்பூ, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ரயில் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோகன் சினிமாவில் பயணித்து வரும் 45 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மோகன் ரசிகர்கள் நாளை அக்டோபர் 7ல் விழா எடுக்கின்றனர்.

‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை என்ற பெயரில் 45 இயர்ஸ் ஆப் மோகனிசம் (45 Years of Mohanism) என்ற இந்த நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் லீயாண்டர் லீ மார்ட்டி இசையில் ‘ஹரா’ படத்தில் இடம்பெற்றுள்ள கயா முயா என்ற பாடலை நாளைய நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார் விஜய் ஸ்ரீ.

பல சங்கீத மேடைகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த மோகன் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதால் அவரது புதிய பாடல் எப்படி இருக்கும்? அந்த பாடலை எப்படி உருவாக்கி இருப்பார் விஜய் ஸ்ரீ? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் .

இந்தப் பாடல் புரோமோவை தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை விஜய்ஸ்ரீ எழுத சக்தி முரளிதரன் மற்றும் மகாலிங்கம் பாடியுள்ளனர்.

இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கோவை மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

நாளை இந்த பாடல் வெளியாக உள்ளதால் காத்திருந்து பார்ப்போம்..

Make way for the first single #KayaMuya ? from #SilverJubileeStar #Mohan’s #Haraa releasing tomorrow ? Oct 7th

Here is the promo! ?
https://t.co/PmKbzh8Zbf

@khushsundar @iYogiBabu #filmistreet @manobalam @vijaysrig @onlynikil @leanderleemarty @SonyMusicSouth #SPMohanraja https://t.co/TKGkjL6Kvj

ஹரா

first single Kaya Muya from SilverJubileeStar Mohan’s Haraa releasing tomorrow

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த கமல்ஹாசன் விமர்சனம் இதோ…

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த கமல்ஹாசன் விமர்சனம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவினருடன் சென்னையில் பார்வையிட்டார்.

படத்தைப் பார்த்தபின் அவர் பேசுகையில்….

” ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். இந்த படத்தின் தொடக்கத்தில் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் இடம் பெறும் அது என்னுடைய குரலில் இடம்பெறும். அதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறேன்.

எனக்கு தெரியும் என்பதால் சொல்லவில்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் சினிமா கலைஞராக.. தயாரிப்பாளராக …எனக்கு இது பெருமிதம் கொள்ளும் நேரமாகவும் இருக்கிறது.

இந்த தருணத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். அதில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதை மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும். தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெற்றிருக்கும் பட்டியலை பார்த்து வியக்கிறோம். மலைப்பாகவும் இருந்தது.

இப்படி தயாரிப்புக்கு துணையாக நின்ற லைகா சுபாஸ்கரன் அவர்களை, தமிழ் சினிமா சார்பாகவும், இதுபோன்றதொரு பிரம்மாண்ட முயற்சியை எடுத்ததற்காகவும் பிரத்யேகமாக நன்றி தெரிவிக்கிறேன்.

பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் சீயான் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

அதுவும் உண்மை. ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும்.” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில்,…

‘ எங்களுடைய கனவு நனவாகிவிட்ட நிஜமான சந்தோஷம் இது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மிகவும் நன்றி. மூன்று தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இதனை பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.

இந்த படைப்பில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசன் அவர்களின் குரலில் தான் தொடங்கும். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது எல்லாம் கடந்து இது அவருடைய படமாக நினைத்து, இங்கு வருகை தந்து, பார்த்து ரசித்ததுடன் மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பற்றி தன்னுடைய எண்ணத்தை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த நேர்மையான அணுகுமுறையை மனதாரப் பாராட்டுகிறோம்.” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்…

” அனைவருக்கும் முதலில் நன்றியைத் தான் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ‘இது நம்ம படம்’ என்று கொண்டாடுகின்றனர். அதிகாலை ஐந்தரை மணி காட்சிக்கு அம்மாவையும், பாட்டியையும் அழைத்து வந்து காண்பது என்பது இதுவரை நாம், நம் தமிழ் சினிமாவில் காணாத ஒரு விசயம்.

திருநெல்வேலியில் ஒருவர், ‘என்னங்க தியேட்டரெல்லாம் எப்படி மாறிவிட்டது. நான் தியேட்டருக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு’ என்று சொல்கிறார். இதுவரை தியேட்டருக்கே வராதவர்கள் கூட இந்த படத்திற்காக தியேட்டருக்கு வருகை தருகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் படத்தை பார்ப்பது எப்போதும் உற்சாகமான அனுபவம். நாங்கள் எத்தனை வெற்றிகளை பெற்றாலும் அது அவருக்கேச் சமர்ப்பணம்.

‘பருத்திவீரன்’ படத்தின் தொடக்க விழாவின்போது உலகநாயகன் கமலஹாசன், மருதநாயகம் படத்தின் முன்னோட்டத்தை காண்பித்தார். அதில் அவருடைய நடிப்பும், குதிரை ஏற்றமும்.. இன்றும் பிரமிப்பு நீங்காமல் என் கண்களுக்குள் இருக்கிறது. ” என்றார்.

More Articles
Follows