தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.
இவர் விஜய்யை வைத்து புலி படத்தையும் இயக்கியிருந்தார்.
வடிவேலுவை நாயகனாக்கி இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
எனவே பல வருடங்களுக்கு பிறகு இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தை தொடங்கினார். ஆனால் வடிவேலு சிம்புதேவனுக்கு இடையே கருத்து மோதலால் படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கசடதபற என்ற படத்தை இயக்கி தன் பெயரை காப்பாற்றி கொண்டார். இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
தற்போது யோகிபாபுவை நாயகனாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் சிம்புதேவன். இப்படம் மீனவர்களின் கதை என சொல்லப்படுகிறது.
Yogi Babu joins with Vijay film director