படம் ஆரம்பிக்கும் முன்பே சிறந்த திரைக்கதை விருதை வென்றது யோகிபாபு-வின் ‘மீன் குழம்பு’

படம் ஆரம்பிக்கும் முன்பே சிறந்த திரைக்கதை விருதை வென்றது யோகிபாபு-வின் ‘மீன் குழம்பு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்து இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். (ஆனால் இந்தியா சார்பில் நயன்தாரா தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ படம் மட்டுமே ஆஸ்காருக்கு அனுப்ப தேர்வாகியுள்ளது).

மேற்கண்ட இந்த 2 செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம் யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் ‘மீன் குழம்பு’.

இனிமேல் உருவாகவுள்ள இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் திரைக்கதையை விருதுக்கு அனுப்பி உள்ளனர்.

இதன்படி சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது ‘மீன் குழம்பு’.

யோகிபாபு தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yogi babu in Meen Kuzhambu wins best screen play award

அஜித்தை தடுக்க முடியாது..; வலிமை தயாரிப்பாளரின் வலிமை-யான வார்த்தை

அஜித்தை தடுக்க முடியாது..; வலிமை தயாரிப்பாளரின் வலிமை-யான வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ & தற்போது உருவாகி வரும் ‘வலிமை’ ஆகிய படங்களை வினோத் இயக்கி வருகிறார்.

இவை இரண்டையும் போனி கபூர் தயாரித்தார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘வலிமை’ வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர்கள் (அஜித் – போனி கபூர் – வினோத்) 3வது முறையாக மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா வரை பைக்கிலேயே பயணம் செய்தார் பைக் பிரியரான அஜித். இந்த புகைப்படங்கள் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது அஜித்துடன் பைக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இத்துடன் அவர் கூறியிருப்பதாவது:

“தனது கனவில் வாழ்வதிலிருந்தும், தனது ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதில் இருந்தும் அவரைத் (அஜித்தை) தடுக்க முடியாது.

அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்”.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumar pic.twitter.com/vcynxZdkZ8

— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021

Boney Kapoor praises Actor Ajith for his passion

HAPPY NEWS இந்தியா சார்பில் நயன்தாராவின் ‘கூழாங்கல்’ ஆஸ்கார் விருதுக்கு தேர்வு

HAPPY NEWS இந்தியா சார்பில் நயன்தாராவின் ‘கூழாங்கல்’ ஆஸ்கார் விருதுக்கு தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடு பல்வேறு மொழிகளில் இருந்து பல படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன.

எனவே இந்தியாவிலிருந்தும் படங்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி அடுத்தாண்டு 2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவுக்கு இந்தியா சார்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்கர் 94-வது அகாடெமி விருதுகள் 2022 அடுத்தாண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆஸ்கர் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்யும் பணி கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் நடைபெற்றது.

ஹிந்தியில் ‘ஷெர்னி’ & மலையாளத்தில் ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.

மலையாள படத் தயாரிப்பாளர் ஷாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் மொத்தம் 15 நடுவர்கள் திரையிட்டு பார்வையிட்டனர்

யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். இந்த தகவலை நேற்று நம் தளத்தில் பார்த்தோம்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ‘கூழாங்கல்’ தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா சார்பில் 2022ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ‘கூழாங்கல்’ தேர்வாகியுள்ளது.

இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” கிடைத்தது. டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆனந்தமான ஆஸ்கார் தேர்வு தகவலை தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது.

இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை வென்றதில்லை என்பதுதான் இங்கே வருத்தமான ஒன்றாகும்.

koozhangal will represent India at the Oscar Awards 2022

கேரள லாட்டரி சீட்டை மையப்படுத்தி தமிழில் உருவாகும் ‘பம்பர்’

கேரள லாட்டரி சீட்டை மையப்படுத்தி தமிழில் உருவாகும் ‘பம்பர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வகுமார் இயக்குகிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வகுமார்,…

“கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படத்தை தூத்துக்குடி மற்றும் கேரளாவில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு: சு. தியாகராஜா, இயக்கம்: எம். செல்வகுமார்.

*‘8 Thottakkal’ fame Vetri to act in ‘Bumper’, a Tamil film based on Kerala lottery produced by S. Thiagaraja, directed by M. Selvakumar*

‘வீரமே வாகை சூடும்’ : அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் விஷால்

‘வீரமே வாகை சூடும்’ : அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்“.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது.

தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதை விட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார்.

யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர்.

விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை, தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

It is a wrap for the dubbing of Veerame VaagaiSoodum

மரணித்த தாயை பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர்.; கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் பிரபு

மரணித்த தாயை பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர்.; கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dream warrior Pictures சார்பில் SR பிரபு தயாரிக்கும் “கணம்”. அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் SRபிரபு அவர்களின் Dream warrior Pictures விளங்கி வருகிறது.

“அருவி, என் ஜி கே, கைதி” இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.

இந்த திரைப்படம் உருவான விதமே ஒரு அழகு கதை!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக்கொண்டிருந்த ஶ்ரீகார்த்திக் Happy to be single எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி, தயாரிப்பாளர் SR பிரபுவை அணுகியுள்ளார்.

ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே, இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர்.

“ எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த “கணம்”.

இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன்.

இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து, வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் SR பிரபு விடம் சொன்னேன்.

கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக்.

கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார்.

இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில்,
தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு.

25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

அமலா, சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாளுக்கு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

Director Shree Karthick talks about his film Kanam

More Articles
Follows